Skip to main content

''கொடி விற்பனைக்கு வரி இல்லை... இதை திருவிழா போல கொண்டாட வேண்டும்''- பாஜக வானதி சீனிவாசன்!

Published on 05/08/2022 | Edited on 05/08/2022

 

"There is no tax on the sale of the flag... this should be celebrated like a festival"- BJP's Vanathi Srinivasan!

 

பிரதமர் மோடி, சில தினங்களுக்கு முன்பு 'மன் கி பாத்' என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு ஒரு கோரிக்கை வைத்தார். அந்த நிகழ்ச்சியில் "கரோனாவுக்கு எதிரான நமது நாட்டு மக்களின் போராட்டம் இன்னும் தொடர்கிறது. இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடையும் அற்புதமான, வரலாற்றுத் தருணத்தைக் காணப்போகிறோம். வரும் ஆகஸ்ட் 13- ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15- ஆம் தேதி வரை நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும்" எனக் கோரிக்கை வைத்திருந்தார்.

 

பிரதமரின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து தமிழகத்தில் பாஜக சார்பில் இதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், ''வரும் 13 ஆம் தேதி கலையிலிருந்து 15 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் ஒவ்வொரு வீடுகளிலும் நமது தேசிய கோடியை ஏற்ற வேண்டும். அதனைத் தகுந்த மரியாதையுடன் போற்ற வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது. கொடியை ஏற்றிவிட்டு அதனை கலாச்சாரத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஒரு இணையதளத்தில் பதிவிட வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு ஏற்பாடுகளை பாஜக செய்து வருகிறது. சுமார் 50 லட்சம் வீடுகளில் கொடி ஏற்ற ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது. கொடியேற்ற சில திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. கதர் துணியில் மட்டுமே தேசியக் கொடியைத் தயாரிக்க வேண்டும் என்கிற நிலையை மாற்றி எம்மாதிரியான துணியிலும் பாலிஸ்டர், பட்டு ஆகியவற்றிலும் கொடியைத் தயாரிக்கலாம். தேசியக் கொடி விற்பனைக்கு வரிவிதிப்பு இல்லை. மாலை 6 மணிக்குத் தேசியக் கொடியை இறக்கிவிட வேண்டும் என்பதற்குப் பதிலாகத் தகுந்த மரியாதையுடன் எல்லா இடத்திலும் இரவும் கொடியைப் பறக்க விடலாம் ஆனால் கொடியை அவமானப்படுத்தக்கூடாது. எனவே இதனை ஒரு திருவிழா போலக் கொண்டாட வேண்டும்'' என்றார்.  


 

சார்ந்த செய்திகள்

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

“தாமரை மலர வேண்டும்” - கீர்த்தி சுரேஷின் தாயார்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
keerthy suresh mother menaka said bjp will win in election 2024

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் நிலையில் முதற்கட்ட வாக்குப் பதிவு கடந்த 19ஆம் தேதி தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகளில் நடந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்களில் மொத்தம் 89 தொகுதிகளில் நடந்து வருகிறது. 

காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். கேரளாவில் மோலிவுட் திரைபிரபலங்கள் ஃபகத் ஃபாசில், டோவினோ தாம்ஸ், மம்மூட்டி, பார்வதி உள்ளிட்ட திரை பிரபலங்கள் வாக்களித்தனர். மேலும் நடிகையும் கீர்த்தி சுரேஷின் தாயாருமான மேனகா சுரேஷ் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எந்த ஒரு விஷயத்திலும் மாற்றம் இருந்தால் தான் அது நல்லா இருக்கும். கடந்த 15 வருடத்தில் திருவனந்தபுரத்தில் எந்த மாதிரியான ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது எல்லாருக்கும் தெரியும். 

அதிலிருந்து ஒரு புதிய ஆட்சி வந்தால் நல்லா இருக்கும். அப்போது தான் நமக்கு மாற்றங்கள் ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்பது தெரியும். தாமரை மலர வேண்டும். அது என் ஆசை. கேரளாவில் பிஜேபி வந்ததேயில்லை. எல்டிஎப், யூடிஎப் இவர்களைத் தாண்டி ஒரு மாற்றம் வந்தால் நல்லா இருக்கும். பத்து தடவை கீழே விழுந்தால் பதினொறாவது முறை எழுவது இல்லையா. அதனால் மாற்றம் வரும். அந்த நம்பிக்கை இருக்கு. கேரளாவில் தாமரை மலர அதிக வாய்ப்பிருக்கு. சுரேஷ் கோபி கண்டிப்பாக ஜெயிப்பார்” என்றார்.