Skip to main content

'ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே ஏற்பட்டிருப்பது பிளவு கிடையாது'-முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு   

Published on 27/11/2022 | Edited on 27/11/2022

 

'There is no split between OPS-EPS'-Former Minister Kadampur Raju

 

அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான விவாதங்கள் ஏற்பட்டு தற்போது எடப்பாடி அணி, ஓபிஎஸ் அணி இரண்டாக பிரிந்து கிடக்கிறது. இந்நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர்களும், எடப்பாடி ஆதரவாளர்களும் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து தங்கள் தரப்பு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில்,''அதிமுகவின் இரட்டை இலை சின்னம் எங்களிடம் தான் இருக்கிறது. அது எங்களிடம் இருக்கிறது என்ற பொறாமையில் ஓபிஎஸ் பேசுகிறார். இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்ட பிறகு எடப்பாடி பழனிசாமி சேலத்தில் சேவல் சின்னத்தில் நின்றுதான் வெற்றி பெற்றுவந்தார். 1989ல் முதன்முதலாக எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் காலடி எடுத்து வைத்தபோது இரட்டை இலை சின்னத்தில் அவர் வெற்றி பெறவில்லை. முதன்முதலில் அவர் எம்எல்ஏ ஆனது சேவல் சின்னத்தில் தான். இன்றைக்கு இரட்டை இலை சின்னம் எங்கள் பக்கம் இருக்கிறது. சில பிரச்சனைகள் காரணமாக சிலர் நீக்கப்படுவது இயற்கை. ஜெயலலிதா காலத்திலும் பலர் நீக்கப்பட்டுள்ளனர். எம்ஜிஆர் காலத்திலும் பலர் நீக்கப்பட்டுள்ளனர்.

 

நீக்கப்பட்டவர்கள் சில காலம் கழித்து இணைந்து கொள்வார்கள். அவர்களாக இணைந்து கொள்வார்களே தவிர கட்சியில் பிளவு இல்லை. ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே ஏற்பட்டிருப்பது பிளவு கிடையாது. கருத்துவேறுபாடு காரணமாக ஓபிஎஸ்-ஐ எடப்பாடி பழனிசாமி நீக்கி வைத்துள்ளார். ஒட்டுமொத்த தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் கருத்தான ஒற்றைத் தலைமை வேண்டும் என்றது பொதுக்குழுவில் பிரதிபலிக்கப்பட்டது. அதை அவர் ஏற்றுக் கொள்ளாத காரணத்தினால் கருத்து வேறுபாடு காரணமாக ஓபிஎஸ்-ஐ நீக்கி வைத்திருக்கிறோமே தவிர, கட்சியில் பிளவு கிடையாது. ஓபிஎஸ-ஐ வெளியேற்றிய பிறகு இரண்டு போராட்டம் நடத்தி விட்டோம் தமிழகம் அளவில். பொதுக்கூட்டங்கள் நடத்தி விட்டோம்''என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.