Skip to main content

செத்தாலும் நிம்மதி இல்லையா? ; இறந்தவரின் உடலை வைத்து பேரம் பேசிய அதிகாரிகள்

Published on 02/12/2022 | Edited on 02/12/2022

 

Is there no peace in tragedy?; The officials negotiated with the body of the deceased
வெள்ளைச் சட்டையில் இருப்பவர் மனோகரன்

 

இறந்தவரின் உடலை பிணவறையில் வைப்பதற்கு ரூ.1000 லஞ்சம் வாங்கியதாக நள்ளிரவில் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

 

ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் இறந்தவரின் உடலைப் பிணவறையில் வைக்க ரூ.1000 லஞ்சம் வாங்கியதாக இறந்தவரின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். நுரையீரல் பிரச்சனை காரணமாக மனோகரன் என்பவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூச்சுத் திணறல் காரணமாக நேற்று உயிரிழந்தார். 

 

உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்ல உறவினர்கள் ஆயத்தமானபோது பிரேதப் பரிசோதனை செய்த பின்புதான் உடலைக் கொடுப்போம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். பிரேதப் பரிசோதனைக்காக அவரது உடலைப் பிணவறையில் வைக்க இளையராஜா என்பவர் 1000 ரூபாய் லஞ்சமாக வாங்கியுள்ளார். இளையராஜா அதே மருத்துவமனையில் மருத்துவ உதவிப் பணியாளராக பணிபுரிகிறார். 

 

1000 ரூபாய் கொடுத்ததற்கான ரசீதை உறவினர்கள் கேட்டுள்ளனர். அதற்கு இளையராஜா ரசீதை கொடுக்காததால் லஞ்சம் பெற்ற இளையராஜாவை கைது செய்யக்கோரி இறந்தவரின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் நடத்திய பேச்சு வார்த்தைக்குப் பின் காலையில் நடந்த உடற்கூராய்விற்குப் பின் உடலை உறவினர்கள் பெற்றுச் சென்றனர். 

 

இது குறித்து உறவினர்கள் செய்தியாளர்களைச் சந்திக்கையில், “டாக்டரிடம் கேட்டால் அரசிடம் சென்று கேளுங்கள் என்று கூறுகிறார். பிணவறையில் உடலை வைக்க வேண்டுமானால் 1000. எதுவும் செய்யாமல் உடலைக் கொடுத்தனுப்பினால் 2000 ரூபாயும் கேட்கின்றனர். பணியிலிருந்த பணியாளர் மீதும் மருத்துவர் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். மற்றொருவர், “மதியம் 2 மணிக்கு வந்தோம். இப்போ மணி 7. இன்னும் பாடிய தரவில்லை” என்கிறார் கோபத்துடன்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'திமுக காங்கிரஸ் ஆட்சிக்கால சாதனை பட்டியலைச் சொல்லவா?'-தீவிர  பரப்புரையில் மு.க.ஸ்டாலின் 

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'kalaingar himself calls him Balam Balu'- M.K.Stalin in intense lobbying

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத்  தீவிரபடுத்தியுள்ளன.

இந்நிலையில் காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ''பாஜக எதிர்ப்பில் இபிஎஸ் உறுதியாக இல்லை. எடப்பாடி பழனிச்சமியால் பாஜகவை ஒருபோதும் எதிர்க்க முடியாது. இந்தியா கூட்டணிக்கான ஆதரவு அலை இந்தியா முழுவதும் வீசுகிறது. மக்களோடு இருந்து மக்களுக்காக பணியாற்றக் கூடியவர்கள் என்ற நம்பிக்கை எழந்துள்ளது. திமுக காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஒன்றியத்தில் எத்தனை சாதனைகளை செய்திருக்கிறோம் பெரிய பட்டியலே இருக்கிறது.

உதாரணத்திற்கு நம்ம டி.ஆர்.பாலு, மூன்று துறைகளில் ஒன்றியத்தில் அமைச்சராக இருந்த பொழுது செஞ்ச சாதனைகளை மட்டும் சொல்லவா? ஒன்றிய பெட்ரோலியத் துறை அமைச்சராக இருந்த பொழுது தமிழ்நாட்டுக்கு மட்டும் 22,78 கோடி ரூபாய் மதிப்பிலான 15 பெரிய திட்டங்களைக் கொண்டு வந்தார். சுற்றுச்சூழல் வனத்துறை அமைச்சராக தேசிய பல்கலைக்கழக உயிரின வளங்கள் ஆணையத்தை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்தார். கப்பல் தரைவழி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறையில் இருந்த பொழுது 56,644 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களைத் தமிழகத்திற்கு கொண்டு வந்தார். இது மட்டுமா கிண்டி கத்திப்பாரா  மேம்பாலம், மாடி பாலம், தமிழ்நாட்டு தேசிய நெடுஞ்சாலைகளில் மட்டுமே 335 பாலங்களைக் கட்டி சாதனை பண்ணி இருக்கிறார். அதனால்தான் கலைஞரே பாலம் பாலு என்று அழைத்தார். இதேபோன்ற சாதனைகளை செய்வதற்காகவே ஒன்றியத்தில் நமது கூட்டணி ஆட்சியில் இருக்கும். அதற்காகத்தான் இந்த எலக்சனின் ஹீரோவாக தேர்தல் அறிக்கையை திமுகவும் காங்கிசும் வெளியிட்டு இருக்கிறோம். திமுக தேர்தல் அறிக்கையில் உள்ள சமூக நீதி அம்சங்கள் காங்கிரஸ் கட்சியினுடைய தேர்தல் அறிக்கையில் எதிரொலித்திருக்கிறது'' என்றார்.

Next Story

“நீங்களெல்லாம் கை சின்னத்திலே...” - சமாளித்த ஜி.கே. வாசன்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
"You are all in the hand symbol..." - G.K. Vasan

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தமிழகத்தில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஜி.கே. வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர், தூத்துக்குடி ஆகிய 3 இடங்களில் போட்டியிடுகிறது. அதன்படி ஈரோடு - விஜயகுமார், ஸ்ரீபெரும்புதூர் - வேணுகோபால், தூத்துக்குடி - விஜயசீலன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் ஸ்ரீபெரும்புதூரில் அக்கட்சியின் வேட்பாளருக்கு வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தார். அப்போது, “வேணுகோபால் அவர்களுக்கு நீங்களெல்லாம் கை சின்னத்திலே (எனக்கூறி விட்டு) ஒரு நிமிடம் இருங்கள். கையை நகர்த்திக் கொள்ளுங்கள் என்று சொன்னேன்..” என சமாளித்தார். இச்செயல அங்கிருந்தவர்கள் மத்தியில் சிறுது நேரம் சிரிப்பலையை ஏற்படுத்தியது.