Skip to main content

"டெல்லியில் துடைப்பம் வெற்றி பெற்றதுபோல், துறையூரில் நாங்கள்..." - அ.இ.ம.ம.க. நிறுவனர் அதிரடி!

Published on 29/01/2021 | Edited on 29/01/2021

 

There is no party without us - Interview with Pon.Murugesan in Trichy

 

அகில இந்திய மக்கள் மறுமலா்ச்சி கழக நிறுவனரும், வழக்கறிஞருமான பொன்.முருகேசன் இன்று செய்தியாளா்களைச் சந்தித்தார்.

 

அப்போது பேசிய அவர், "கடந்த 2010ஆம் ஆண்டு ஒரு இயக்கமாக ஆரம்பித்து, வளா்ச்சி அடைந்து, கடந்த 2019ஆம் ஆண்டு இந்தியத் தோ்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக உருவெடுத்தது அகில இந்திய மக்கள் மறுமலா்ச்சி கழகம். மேலும் எங்களுடைய விருப்பபடி 'செருப்பு' சின்னத்தை தோ்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

 

இன்றுவரை நாங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணியில் இருந்து வருகிறோம். இந்தமுறை நாங்கள் துறையூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, அந்தத் தொகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று திமுகவிடம் கேட்டிருக்கிறோம். அவா்கள் எங்களுக்கு ஒதுக்கும் பட்சத்தில், நாங்கள் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவோம். ஒதுக்கவில்லை என்றால் நாங்கள் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள 'செருப்பு' சின்னத்தில் தனித்துப் போட்டியிடுவோம்" என்று தெரிவித்தார்.

 

There is no party without us - Interview with Pon.Murugesan in Trichy

 

மேலும், "துறையூா் சட்டமன்றத் தொகுதியில் 1 லட்சத்து 30 ஆயிரம் வரை தேவேந்திர குல வேளாளர் வாக்குகள் உள்ளது. எனவே அவா்கள் என்னை இந்தத் தொகுதியில் வேட்பாளராக நிறுத்த உள்ளனர். கண்டிப்பாக நான் வெற்றி பெருவேன் என்று தெரிவித்தார். மேலும், தோ்தல் செலவிற்கான பண பலம், ஆள் பலம் அனைத்தும் எங்களிடம் உள்ளது. 

 

அதிமுகவும், திமுகவும் ஒரு மாயையை ஏற்படுத்தி வரக்கூடிய கட்சிகள் தான் நாங்கள் இல்லாமல் அவா்கள் இல்லை. எங்களுடைய மக்களுக்குத் தேவையானதை நாங்கள்தான் செய்ய வேண்டும். தேவேந்திர குல வேளாளரை எஸ்.சி. பட்டியலில் இருந்து வெளியேற்ற வலியுறுத்தி வருகிறோம். ஆனால் யாரும் அதைப் பேச முன்வரவில்லை. துறையூா் சட்டமன்றத் தொகுதியில் முறையாக எந்தவித நலத்திட்டங்களும், முன்னேற்றங்களும் செய்யப்படவில்லை. 

 

கடந்த முறை அதிமுக இருந்தது, தற்போது திமுக சார்பில் ஸ்டாலின் குமார் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். ஆளுங்கட்சி அதிமுகவாக இருக்கும் போது திமுகவால் எந்த நலத்திட்டங்களையும் செய்ய முடியாது. எனவே, எங்களுடைய மக்களுக்கு நாங்கள்தான் நல்லது செய்யமுடியும்" என்று தெரிவித்தார். அதன்பின் அவா் தங்களுடைய சின்னமான 'செருப்பு' சின்னத்தைக் கையில் எடுத்துச் சின்னத்தை வெளியிட்டார்.

 

சின்னத்தை வெளியிட்டுப் பேசிய அவர், "டெல்லியில் எப்படித் துடைப்பம் வெற்றி பெற்றதோ, அதேபோல செருப்பும் இந்தமுறை துறையூரில் வெல்லும் என்றும், தமிழகம் முழுவதும் உள்ள தொகுதிகளில் எங்கெல்லாம் தேவேந்திரகுலம் சார்ந்த வேட்பாளா்கள் நிறுத்தப்படுகிறார்களோ, அவா்களுக்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கவுள்ளோம். கிராமங்கள் தோறும் நேரடியாகச் சென்று அவர்களைச் சந்தித்து, ஓலை அனுப்பி அவா்களிடம் வாக்கு சேகரிப்போம்" என்று தெரிவித்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருச்சி ரயில் நிலையத்தில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Arbitrary seizure of money at Trichy railway station!

திருச்சி ரயில் நிலையத்தில் போலீஸார் மேற்கொண்ட சோதனையில் ரூ. 1.44 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். காரைக்குடியில் இருந்து திருச்சி நோக்கி வந்த ரயிலில் போலீஸார் மேற்கொண்ட சோதனையில், இளைஞர் ஒருவர் கட்டுக்கட்டாக பணத்தாள்களை வைத்திருந்தார். அவரிடம் போலீஸார் விசாரித்தபோது,. அவர் மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்த நாகவேல்ராஜா (25) என்பதும், மளிகை பொருட்கள் மொத்த வியாபாரம் செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும், மளிகை பொருட்கள் அனுப்பிய வகையில், நிலுவையில் இருந்த பணத்தை வசூல் செய்து வந்ததாகவும் தெரிவித்தார். அவர் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 44 ஆயிரத்து 618 ரொக்கத்துக்கான ஆவணங்கள் ஏதும் அவரிடம் இல்லை.

இதைத்தொடர்ந்து ரயில்வே போலீசார் அந்த பணத்தை பறிமுதல் செய்து பறக்கும்படை அலுவலர் வினோத்ராஜ் மூலம் திருச்சி மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Next Story

“எதிரணி வேட்பாளர் போல் எங்கிருந்தோ வந்தவன் அல்ல நான்” - அ.தி.மு.க. வேட்பாளர் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
AIADMK candidate Karuppaiya campaign in Trichy

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கருப்பையா திருவரங்கம்  ரெங்கநாதர் கோவில் ரெங்கா ரெங்கா கோபுரம் முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி தனது பிரச்சாரத்தை நேற்று மாலை தொடங்கினார். இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்டச் செயலாளர் பரஞ்ஜோதி தலைமை தாங்கிப் பேசினார்.

அப்போது பரஞ்ஜோதி பேசுகையில், திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் எடப்பாடியாரின் ஆசி பெற்ற அதிமுக வேட்பாளர் கருப்பையாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும். அவர் வெற்றி பெற்றால் திருச்சி பாராளுமன்ற தொகுதி மக்களின் குரலாக நிச்சயம் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பார். மக்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு பாடுபடுவார் என்றார்.

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் பேசியபோது, ஸ்ரீரங்கம் மண் இங்கு இருப்பவர்கள் மட்டுமல்லாமல் உலகத்தில் இருப்பவர்கள் யார் இங்கு வந்தாலும் அவரை உயரே தூக்கி விடுகின்ற மண். எனவே நிச்சயம் கருப்பையாவையும் உயரே கொண்டு வரும். அவர் மக்கள் பணி சிறப்பாக செய்வார். திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்புகின்ற தகுதி அதிமுகவிற்கு மட்டும்தான் உள்ளது என்பதை பொதுமக்கள் நிரூபிப்பார்கள். கருப்பையா திருச்சியிலிருந்து மக்கள் பணி ஆற்றுவார் என உறுதியளிக்கின்றோம் என்றார்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், திருச்சி நாடாளுமன்ற தொகுதி எதை எதிர்பார்க்கிறதோ எதை ஆழமாக வேண்டும் என்று நினைக்கின்றதோ நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி சிறப்பாக செயல்பட வேண்டும் என நம்புகிறார்களோ அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக உங்களுடைய உணர்வுகளுக்கு பாத்திரமாக உழைக்கக் கூடியவர் இளைஞர் கருப்பையா. உங்களை தாங்கியும் பிடிப்பார். உங்களுக்காக பாராளுமன்றத்தில் ஓங்கியும் குரல் கொடுப்பார் என்றார்.

ரெங்கா ரெங்கா கோபுரத்திற்கு முன்பாக வேட்பாளர் கருப்பையா பேசுகையில், எதிர் அணியில் நிற்கும் வேட்பாளரை போல் எங்கிருந்தோ வந்து தேவைக்காக ரெங்க நாதரையும் மக்களையும் சந்திக்கக் கூடியவர் நான் அல்ல. இந்த மண்ணின் மைந்தன் ஆகிய நான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். மக்களின் உரிமைகளை நாடாளுமன்றத்தில் ஒலிக்க செய்ய வேண்டும் என்பதற்காகவே போட்டியிடுகிறேன் என்றார்.

பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்டச் செயலாளர்கள் குமார், பரஞ்சோதி, சீனிவாசன், அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், முன்னாள் அமைச்சர் வளர்மதி, சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலாளர் புல்லட் ஜான், மீனவர் அணி பேரூர் கண்ணதாசன், இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் தேவா, ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் வி.என்.ஆர்.செல்வம், தமிழரசன், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்கருப்பன், ஜெயக்குமார், கோப்பு நடராஜ், பகுதி செயலாளர்கள் டைமன் திருப்பதி, சுந்தர்ராஜன், பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.