Skip to main content

தேனியில் நான்கு ஒன்றிய தலைவர் பதவிகளை கைப்பற்றிய ஓபிஎஸ்! ஒரு ஒன்றியத்தை பிடித்த திமுக!!

Published on 12/01/2020 | Edited on 12/01/2020

துணை முதல்வர் ஓபிஎஸ்சின் சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஆளுங்கட்சியை சேர்ந்த அதிமுகவினர் மாவட்ட கவுன்சிலரில் பெரும்பான்மையாக வந்ததால் மாவட்ட ஊராட்சி தலைவர் பதவியை பெரியகுளம் ஒன்றிய செயலாளர் அண்ண பிரகாஷின் மனைவி ஈஸ்வரிக்கு கொடுப்பதாக ஓபிஎஸ் உறுதி அளித்திருந்தார்.

 

theni local election result

 

ஆனால் அண்ண பிரகாஷ் டிடிவி அணியில் இருந்து மீண்டும் அதிமுகவுக்கு வந்தவர் என்று அதிமுகவினர் சிலர் ஓபிஎஸ்சிடம் புகார் தெரிவித்தனர். அதை தொடர்ந்து அண்ண பிரகாஷ் மனைவிக்கு மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியை கொடுக்க ஓபிஎஸ் மறுத்துவிட்டு தனது போடி தொகுதியில் உள்ள சில்லமரத்துப்பட்டி மாவட்ட கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்ட பிரிதாவுக்கு மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியை ஓபிஎஸ் கொடுத்தார். இதனால் டென்ஷன் அடைந்த ஈஸ்வரி வாக்கெடுப்பை புறக்கணித்துவிட்டு அழுதுகொண்டே வெளியேறினார். அப்படியிருந்தும் பெரும்பான்மையாக அதிமுகவைச் சேர்ந்த மாவட்ட கவுன்சிலர்கள் இருந்ததால் மாவட்ட ஊராட்சித் தலைவராக போட்டியின்றி  பிரிதா தேர்வு செய்யப்பட்டார். 

 

theni local election result


ஆனால் தேனி மாவட்டத்தில் உள்ள எட்டு யூனியன்களில் அதிமுக கூட்டணி ஆண்டிபட்டி, கம்பம், போடி, உத்தமபாளையம் ஆகிய நான்கு ஒன்றியத்தை கைப்பற்றியது. அதன்மூலம் ஆண்டிபட்டி ஒன்றியத் தலைவராக லோகிராஜன், போடி ஒன்றிய தலைவராக சுதாவும், உத்தமபாளையம் ஒன்றியத் தலைவராக ஜான்சியும், கம்பம் ஒன்றியத் தலைவராக அதிமுக கூட்டணி கட்சியிலுள்ள பிஜேபியை சேர்ந்த பழனி மணியும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

 

theni local election result


ஆனால் ஓபிஎஸ் தொகுதியான போடி தொகுதியில் தேனி ஒன்றியம் வருகிறது. அப்படி இருந்தும் அந்த தேனி ஒன்றியம் திமுகவுக்கு சாதகமாக இருந்து வந்ததால் அந்த தேனி ஒன்றியத்தில் பெரும்பான்மையான திமுக  ஒன்றிய கவுன்சிலர்கள் வெற்றி பெற்றதின் மூலம்  திமுக ஒன்றிய செயலாளரான  சக்கரவர்த்தி தேனி ஒன்றிய தலைவராக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். அந்த அளவுக்கு ஓபிஎஸ் தொகுதியில் உள்ள தேனி ஒன்றியத்தையே திமுக கோட்டையாக்கி இருக்கிறார் ஒன்றிய செயலாளரும், ஒன்றிய சேர்மனுமான சக்கரவர்த்தி.
 

அதுபோல் சின்னமனூர். பெரியகுளம் ஒன்றியங்களில் ஆளுங்கட்சியை விட எதிர்கட்சியான திமுக தலா ஒரு சீட்டுகள் கூடுதலாகப் பெற்று அதன் மூலம் ஒன்றிய தலைவர் பதவிகளை தக்க வைக்க இருந்தது. ஆனால் இந்த விஷயம் ஓபிஎஸ் காதுக்கு எட்டவே சின்னமனூர் ஒன்றியத்தில் வெற்றிபெற்ற திமுக ஒன்றிய கவுன்சிலர் ரேவதியும், பெரியகுளம் ஒன்றியத்தில் வெற்றி பெற்ற திமுக கவுன்சிலர் செல்வத்தையும் பேரம்பேசி தன் பக்கம் இழுத்து கொண்டதால் பெரியகுளம் சின்னமனூர் ஒன்றியத்தில்  திமுகவும், அதிமுகவும் சமநிலையில் இருந்தது. 

 

theni local election result


அதுபோல் கடமலைக்குண்டு ஒன்றியத்தில் அதிமுகவும், திமுகவும் சமநிலையில் இருந்தது. இதனால் இந்த மூன்று ஒன்றியங்களிலும் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் தலைவர் பதவிகளை தக்க வைக்க ஆளாளுக்கு போட்டி போட்டுக்கொண்டு ஒன்றிய கவுன்சிலர்களை தூக்க முயற்சி செய்தும் கூட பலன் அளிக்கவில்லை. அதனால் மூன்று ஒன்றிய தலைவர் தேர்தல் பதவிக்கு  எதிர்க்கட்சி திமுக கவுன்சிலர்கள் வந்தும் கூட பெரும்பான்மை இல்லாததாலும் அதிமுக கவுன்சிலர்கள் வராததாலும் தேர்தல் நடத்த முடியாது என கூறி தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலை தேர்தல் அதிகாரி ஒத்தி வைத்து விட்டார்.

இதனால் டென்சன் அடைந்த திமுகவினர் ஆளுங்கட்சியை கண்டித்து  போராட்டத்தில் குதித்தனர். இதில் மாவட்ட பொறுப்பாளர்  கம்பம் ராமகிருஷ்ணன் மற்றும் போடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் தலைமையில் உ.பி.கள் பெருந்திரளாக கலந்துகொண்டு தங்கள் கண்டனங்களை எழுப்பினார்கள். அதை கண்டு போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இருந்தாலும் மாவட்டத்தில் ஆளுங்கட்சியை சேர்ந்த ஓபிஎஸ் தரப்பு  பெரும்பான்மையாக வெற்றி பெற்று பதவிகளை தக்க வைத்துக் கொண்டனர். அப்படி இருந்தும் ஓரளவுக்கு திமுக மாவட்டத்தில் அங்கங்கே வெற்றி பெற்றும் கூட  ஆளுங்கட்சியின் அதிகார, பண பலத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் பதவிகளை தக்கவைக்க திணறி வருகிறார்கள்.

 


 

 

 


        

 

சார்ந்த செய்திகள்

Next Story

மலைக் கிராமங்களுக்கு குதிரை மூலம் வாக்கு பெட்டி அனுப்பி வைப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Delivery of ballot boxes by horse to the villages of theni Hill

தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் ஒவ்வொரு தேர்தலின் போதும் சாலை வசதி இல்லாத, போடி சட்டமன்ற தொகுதியிலிருந்து குதிரை மற்றும் கழுதை மூலம் வாக்கு பெட்டிகளை அனுப்பும் அவலம், கடந்த 40 ஆண்டு களாக நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெறும் 18 வது மக்களவை உறுப்பினர் தேர்தலிலாவது எங்களுக்கு சாலை வசதி அமைத்து தர வேண்டுமென இப்பகுதி மலைக் கிராம மக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

இந்தியாவில் 18 வது மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெறும் நிலையில் தேனி மக்களவைத் தேர்தலின் போது வாக்குச்சாவடிகளுக்கு 40 வகையான உபகரணங்கள் கொண்ட பெட்டிகள் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

Delivery of ballot boxes by horse to the villages of theni Hill

இந்நிலையில் போடி சட்டமன்ற தொகுதியில் உள்ள பெரியகுளம் பகுதியில் அகமலை, ஊத்துக்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கும் போடி பகுதியில் கொட்டகுடி, குரங்கணி, டாப் ஸ்டேஷன் சென்ட்ரல், கொழுக்குமலை, அண்ணாநகர் உள்ளிட்ட 10 மலைக் கிராமங்களுக்கும் வாக்குப்பட்டி அனுப்பும் பணி போடி தாலுகா அலுவலகத்தில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரம் உள்ளிட்ட 40 உபகாரணங்கள் கொண்ட பொருள்கள் அனுப்பப்பட்டது.

குறிப்பாக தேனி பாராளுமன்ற தொகுதி, ஆறு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. இந்நிலையில் போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 315 வாக்குச்சாவடிகள் இருக்கிறது. இந்த நிலையில் இன்று வாக்குப்பட்டி மற்றும் வாக்குப்பதிவு இயந்திரம் வாக்குப்பதிவுக்கு தேவையான 40 பொருட்கள் உள்ளடங்கிய உபகரணங்கள் உள்ளிட்டவைகளைத் தேர்தல் நடத்தும் அலுவலர் குமரவேல் தலைமையில் அனுப்பப்பட்டது. அதன்படி போடி தொகுதியில் உள்ள 10 மலைக் கிராமங்களுக்கு வாக்குப்பட்டி அனுப்பப்பட்டது.

Delivery of ballot boxes by horse to the villages of theni Hill

மலைக் கிராமங்களான காரிப்பட்டி, கொட்டகுடி, குரங்கணி  அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வாகனங்கள் மூலமாகவும் சென்ட்ரல் மற்றும் அகமது பகுதிகளுக்கு குதிரை மற்றும் கழுதை மூலமாகவும் வாக்குப்பட்டி அனுப்பப்பட்டது பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பட்டி மதியம் 2 மணி அளவில் வாக்குப்பதிவு அலுவலர், வாக்குச்சாவடி பொறுப்பாளர் மற்றும் பி1 பி2 பி3 ஆகியோர்களுடன் வாக்குப்பட்டி துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் குதிரை மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.