Skip to main content

தேனி அருகே இருபிரிவினர் மோதல்- இருவர் உயிரிழப்பு!

Published on 27/01/2020 | Edited on 27/01/2020

தேனி அருகே இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்தனர். அப்பகுதியில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டி பகுதியில் ஒரு சமூகத்தைச் சேர்ந்த நபர்கள் அந்த பகுதியில் கஞ்சா விற்று வருவதை பெரியகுளம் தென்கரை காவல்நிலையத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு புகார் கொடுத்துள்ளனர்.

THENI DISTRICT TWO GANG INCIDENT POLICE PROTECTION


இந்நிலையில் காவல்நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகார் கஞ்சா விற்பனையாளர்களுக்கு தெரியவர அடுத்த நாளே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் புகார் கொடுத்த மாற்று சமூகத்தினரின் வீட்டை அடித்து நொறுக்கி பிரச்சனையில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில் பாதிக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெரியகுளம் தென்கரை காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பாக இரு சமூகத்தினர் இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வந்த நிலையில் இன்று (27.01.2020) காலையில் ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உள்ளதால் காவல்துறையினர் தலையிட்டு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்திருந்தனர்.

THENI DISTRICT TWO GANG INCIDENT POLICE PROTECTION

இந்த நிலையில் இன்று (27.01.2020) பிற்பகல் 03.00 மணியளவில் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த பிரிவினர் காவல் துறையிடம் புகார் கொடுத்த சமூகத்தைச் சேர்ந்தவர்களை கம்பி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியதில் ஒரே சமூகத்தை சேர்ந்த ஒரு பெண் உடபட 7 பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

THENI DISTRICT TWO GANG INCIDENT POLICE PROTECTION


தாக்குதலில் பலத்த காயமடைந்த ஜெயபால் என்பவர் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு பின் உயர் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் 

THENI DISTRICT TWO GANG INCIDENT POLICE PROTECTION


அதேபோல் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 70 வயது பெருமாள் என்ற முதியவரை தாக்கியதாகவும் இதனால் அவர் உயிரிழந்ததாகக் கூறி தேனி- திண்டுக்கல் சாலையில் இறந்தவரின் உடலை போட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.  


இதுகுறித்து தகவலறிந்து தேனி, பெரியகுளம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர். மேலும் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படாமல் இருக்கும் வகையில் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மோதல் தொடர்பாக 4 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

THENI DISTRICT TWO GANG INCIDENT POLICE PROTECTION

மேலும் சாலை மறியலில் ஈடுபட்டிருந்தவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த சாலை மறியலால் தேனி- திண்டுக்கல் சாலையில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 




 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.