Skip to main content

காதல் விவகாரம்... பெண்ணின் குடும்பத்தினரை வலைவீசி தேடி வரும் காவல்துறையினர்...

Published on 20/11/2020 | Edited on 20/11/2020

 

 

theni district periyakulam area  lovers police investigation

 

 

தேனி மாவட்டம், பெரியகுளம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட காந்திநகர் பகுதியில் வசித்து வருபவர் அரசன் என்பவரின் மகன் சுதர்சன். இவர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பிரிவில் மக்கள் தொடர்பு அலுவலராக தற்காலிகமாக பணியாற்றி வந்துள்ளார். 

 

இந்நிலையில் அவருக்கும் பெரியகுளம் வடகரை வைத்தியநாதபுரம் பகவதியம்மன்கோயில் தெருவில் வசித்து வரும் ராமநாதன் என்பவரின் மகள் நவமணி என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இருவரும் ஒருவருக்கொருவர் கைப்பேசி மூலமாகவும், நேரடியாகவும் கருத்துகளை பரிமாறி காதலித்து வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இருவரும் காதல் திருமணம் செய்ய முடிவெடுத்து இருப்பதை அறிந்த காதலியின் சகோதரியும்,பெரியகுளம் மின்சார வாரிய அலுவலகத்தில் பணியாற்றும் அரசு ஊழியருமான பிரமிளாதேவி மற்றும் அவருடைய தாயார் அழகம்மாள், தாய்மாமன் சேதுராஜ் என்பவருக்கும் தெரியவரும் போது வேறு சமூகத்தைச் சேர்ந்த காதலனை திருமணம் செய்யக்கூடாது என்று நவமணியை எச்சரித்துள்ளனர். 

 

அதேசமயம் சுதர்சன் மீது ஆண்டிபட்டி வட்டம், ராஜதானி காவல் நிலையத்திலும் கா.விளக்கு காவல் நிலையத்திலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் பொய்யான புகார்கள் பதிவு செய்யப்பட்டு விசாரணை என்ற போர்வையில் அலைக்கழிப்பு செய்யப்பட்டதாக தெரிகிறது. மேலும் குண்டர்களை வைத்து பலமுறை சுதர்சனை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் வேறு சமூகத்தைச் சார்ந்த சுதர்சனை பழிவாங்கும் நோக்கோடு தொடர்ந்து பொய் புகார் கொடுப்பதை தடுத்து நிறுத்தவும், அவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யவும் உத்தரவிட வேண்டுமென கோரி தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை தொடர்ந்து சம்பந்தப்பட்ட நவமணி, பிரமிளாதேவி, அழகம்மாள், சேதுராஜ் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 

இதனைத் தொடர்ந்து விசாரணை செய்த பெரியகுளம் காவல்துறையினர், கடந்த 18- ஆம் தேதி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது  காதலன் சுதர்சனை சாதியை சொல்லி இழிவாக பேசியதாகவும் அவர்கள் வீட்டுக்கு வரவழைத்து தாக்கியதாகவும் சட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளான சுதர்சனின் காதலி நவமணி மற்றும் அந்த பெண்ணின் சகோதரி பிரமிளாதேவி, தாயார் அழகம்மாள், தாய்மாமன் சேதுராஜ் ஆகியோர்களை வலைவீசி தேடி வருகின்றன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.