Skip to main content

தேனியில் ஒரே நாளில் 115  பேருக்கு தொற்று! 2,000-ஐ நெருங்கும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை!

Published on 14/07/2020 | Edited on 14/07/2020

 

தேனி

 

தேனி மாவட்டத்தில் ஒரே நாளில் 115 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

 

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு அறிவிப்பதற்கு முன்பாக தேனி மாவட்டத்தில் நூற்றுக்கும் குறைவான அளவிலேயே கரோனா தொற்று இருந்தது. பொதுப் போக்குவரத்துத் தொடங்கி தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்களால் மின்னல் வேகத்தில் தொற்று பரவத் தொடங்கியது.

 

மூன்று மாதங்களில் 100 க்கும் குறைவாக இருந்த எண்ணிக்கை ஒரே மாதத்தில் 1,500க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக ஜூலை மாதம் தொடக்கத்தில் இருந்தே தினசரி நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

 

சின்னமனூர் 32; கம்பம் - 25; தேனி - 13; பெரியகுளம் - 14;  உத்தமபாளையம் - 10;

கூடலூர் - 8;  வீரபாண்டி - 2; போடி -5; சில்ல மரத்துப்பட்டி - 5;  

காமயகவுண்டன்பட்டி, கருநாகம் முத்தம்பட்டி, புதுப்பட்டி - 2; 

 

லோயர்கேம்ப், அரண்மனைப்புதூர், பழனிசெட்டிபட்டி, தப்புக்குண்டு, கல்லுப்பட்டி, முதலக்கம்பட்டி, ஜெயமங்கலம், சில்வார்பட்டி, நாராயண தேவன்பட்டி, கல்லுப்பட்டி, முதலக்கம்பட்டி, ஜெயமங்கலம், சில்வார்பட்டி ஆகிய பகுதிகளில் தலா ஒருவருக்கும் பூசாரிகவுண்டன்பட்டி, கோபலபுரம், ராயப்பன்பட்டி, ஆனை மலையன்பட்டி, கோம்பைபட்டி, ஓடப்பட்டி  ஆகிய பகுதிகளில் தலா ஒருவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. 

 

அரசு மருத்துவர் மருத்துவப் பணியாளர்கள் உள்பட 115 பேருக்குத் தொற்று உறுதியாகி உள்ளது.

 

இதில் கூடலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் பெண் மருத்துவர், மருந்தாளுநர், தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர், கூடலூர் தெற்குக் காவல்துறையைச் சேர்ந்தவர், வடக்குக் காவல் நிலையத்தில் பணியாற்றும் கம்பத்தைச் சேர்ந்த காவலர், தேனி ஆயுதப்படை பிரிவில் பணியாற்றும் காவலர் ஆகியோருக்கும் கரோனா  உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

இதனை அடுத்து தேனி மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,863 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 108 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 23 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

 

இப்படி மாவட்டத்திலுள்ள அனைத்துப் பகுதிகளிலும் கரோனா தொற்று தொடர்ந்து  அதிகரித்து வருவதைக் கண்டு தேனி மாவட்ட மக்கள் பெரும் கலக்கத்தில் இருக்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

தேனி மக்களவை வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான அறையில் வைத்து சீல்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இந்திய மக்களவைத் தேர்தல் முதல் கட்ட தேர்தலாக தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் நேற்று காலை 7 மணியில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்த நிலையில் வாக்கு பதிவு இயந்திரங்கள் அந்தந்த தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தேனி மக்களவையில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1788 வாக்குப்பதிவு மையங்களில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் காவல் துறையினர் பலத்த பாதுகாப்புடன் சேகரிக்கப்பட்டு தேனி கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த (ஸ்டாங் ரூம்) பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கும் பணி நடைபெற்றது.

தேனி மக்களவையில் உள்ள சோழவந்தான், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், கம்பம், போடிநாயக்கனூர் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் 69.87% வாக்குகள் பதிவாகியுள்ளது. நேற்று மாலை தேர்தல் முடிவ டைந்த நிலையில் வாக்குப்பதிவு மையங்களில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேகரிக்கும் பணி இரவு முழுவதும் நடைபெ ற்றது.

Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இதனைத் தொடர்ந்து கொடுவார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஸ்டாங் ரூமில் அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் சீல் வைக்கும் பணி நடைபெற்றது. ஸ்ட்ராங் ரூமில் அனைத்து பகுதிகளும் முழுமையாக மூடப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையின் நான்கு அடுக்கு பாதுகாப்பில்  பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.  வாக்கு எண்ணிக்கை ஜூன் 04  நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெற இன்னும் 45 நாட்கள் உள்ள நிலையில், பலத்த பாதுகாப்பில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது.