Skip to main content

திருட்டு மணல் ஏற்றி வந்த வண்டியின் 2 மாடுகள் பலி -10 பேர் காயம்

Published on 14/09/2018 | Edited on 14/09/2018

சென்னை டூ கோழிக்கோடு தங்கநாற்கர சாலை சிறிபெரும்புதூர், காஞ்சிபுரம், வாலாஜா, வேலூர், ஆம்பூர், வாணியம்பாடி, கிருஷ்ணகிரி வழியாக செல்கிறது. இதில் வேலூர் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் தான் இந்த சாலையில் அதிகமாக வாகன விபத்துக்கள் நடக்கின்றன. அதிலும் குறிப்பாக ஆம்பூர் நகரத்தில் தினம் தினம் விபத்து நடக்கின்றன. 

 

cow

 

இன்று செப்டம்பர் 14ந்தேதி காலை ஆம்பூரில் உள்ள தனியார் காலணி தொழிற்சாலைக்கு திருப்பத்தூர், நாட்றாம்பள்ளி பகுதியில் இருந்து 15 தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு ஒரு வேன் வந்துக்கொண்டுயிருந்தது. ஆம்பூர் அடுத்த சான்றோர்குப்பம் என்கிற பகுதி அருகே வந்தது. அப்போது பாலாற்றில் இருந்து மணல் திருடி எடுத்து வந்து கொண்டுயிருந்த ஒரு மாட்டு வண்டி மீது வேன் மோதியது. 

 

cow

 

இதில் மாட்டு வண்டியை இழுத்து வந்த இரண்டு மாடுகள் சம்பவ இடத்தில் பலியானது. வேன் உள்ளே அமர்ந்திருந்த தொழிலாளர்கள் முன் சீட்டுகளில் மோதியும், கீழே விழுந்ததில் 10 பேர் காயம்மடைந்தனர். காயம்மடைந்த தொழிலாளர்களை அப்பகுதி வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாட்டு வண்டி ஓட்டிவந்தவருக்கும் அடிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து ஆம்பூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்வு இறுதி நாளில் மாணவர்கள் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ; காவல்நிலையத்திற்கு குவியும் வலிறுத்தல்கள்

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
Video released by students on the final day of the exam; Convulsions flock to the police station

பள்ளிகளில் பொதுத்தேர்வுகள் நடந்து வரும் சூழலில் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு முடிந்த கையோடு பிரியாணியுடன் மது அருந்திய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் முடிந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்த நிலையில் சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம் காடையாம்பட்டி அருகே 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிந்த நாள் அன்று பள்ளி மாணவர்கள் சிலர் ஊரில் ஒரு பகுதியில் கூட்டாக அமர்ந்து பிரியாணியுடன் மது அருந்தும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மதுபோதையில் தள்ளாடியபடி படித்த பள்ளிக்கு வந்த மாணவர்கள் பள்ளி முன்பு நின்று குரூப்பாக செல்போனில் புகைப்படம் எடுக்க முயன்றன்ர். இதனைக் கண்டு அதிர்ந்த அந்த பகுதி மக்கள் இது குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் மது அருந்திய மாணவர்களை பிடித்து கண்டித்து எச்சரித்து அனுப்பினர்.

சீருடையில் இருக்கும் பள்ளி மாணவர்களுக்கு மது கிடைத்தது எப்படி என்று விசாரிக்குமாறு ஓமலூர் காவல் நிலையத்திற்கு வலியுறுத்தல்கள் குவிந்து வருகிறது.

Next Story

இளைஞனால் பெரியம்மாவிற்கு நேர்ந்த கொடூரம்; திருவள்ளூரில் பரபரப்பு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
 young man who stabbed Periyamma to passed away

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ளது கனகவல்லிபுரம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவர் மின்வாரியத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளார். இவரின் மனைவி சரஸ்வதி. இவருக்கு 55 வயது ஆகிறது. இந்தத் தம்பதியருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இதன் காரணமாக பொன்னேரியில் உள்ள வீட்டில் குமார் மற்றும் சரஸ்வதி இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர். அவ்வப்போது மகள்கள் பொன்னேரிக்கு சென்று பெற்றோர்களை பார்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, குமார் வீட்டிற்கு தேவையான பொருள்கள் வாங்க, பொன்னேரி கடைத்தெருவிற்கு சென்றுள்ளார். அவரின் மனைவி சரஸ்வதி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். கடைக்கு சென்றவர், பொருள்களை வாங்கிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் கதவு திறந்திருந்தபடி கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியான குமார், சற்று வேகமாக வீட்டின் உள்ளே நுழைந்து பார்த்துள்ளார். 

அப்போது அவரது மனைவி சரஸ்வதி, வீட்டுக்குள் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனைப் பார்த்ததும் குமார் அதிர்ச்சியில் கதறி அழுதுள்ளார். குமாரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்துள்ளனர். அப்போது குமாரின் வீட்டுக்குள் சென்று பார்க்கும் போது சரஸ்வதி ரத்த வெள்ளத்தில் கிடப்பதைப் பார்த்து அவர்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

பின்னர், அங்கிருந்த சிலர் சரஸ்வதியைத் தூக்கி முதலுதவி செய்ய முற்பட்டுள்ளனர். அப்போதுதான் தெரிந்துள்ளது சரஸ்வதி இறந்துவிட்டார் என்று. இதனைக் கேட்டதும் குமார் கதறி அழுதுள்ளார். இதனையடுத்து, அங்கிருந்த சிலர் இது குறித்து பொன்னேரி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த சரஸ்வதியின் உடல் மற்றும் அவரின் வீட்டில் இருந்த தடயங்களை சேகரித்துள்ளனர். அப்போது சரஸ்வதியின் கழுத்தில் அணிந்திருந்த தாலி சங்கிலி மாயமாகி இருந்தது தெரியவந்துள்ளது. அதன் பின்னர், அவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதனையடுத்து இந்தக் கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், சரஸ்வதியின் கழுத்தில் அணிந்திருந்த சங்கிலி மாயமாகி இருந்த காரணத்தால் இந்தக் கொலை, சங்கிலிக்காக நடந்திருக்கலாம்.... என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கியுள்ளனர். இதற்காக, குமார் உட்பட அவரின் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் என அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இது குறித்து குமாரிடம் விசாரணை செய்த போது, தனக்கு இந்தப் பகுதியில் சொத்து தொடர்பாகவோ அல்லது வேறு விஷயங்கள் தொடர்பாக எதிரிகள் யாருமே இல்லை எனக் கூறியிருக்கிறார். இதனையடுத்து, குமாரின் வீட்டிற்கு யாரேனும் வந்து சென்றார்களா?... என அந்தப் பகுதியில் உள்ள சிலரிடம் விசாரித்துள்ளனர். அப்போது சம்பவத்தன்று சரஸ்வதியின் சகோதரி மகனான அசோக்குமார் வந்து சென்றதாக சிலர் கூறியுள்ளனர். உடனே அசோக்குமாரை பிடித்து விசாரித்துள்ளனர். முதலில் இது குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனக் கூறிய அசோக்குமார், பின்னர் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியிருக்கிறார். இதனால், மேலும் சந்தேகமடைந்த போலீசார் அவரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்துள்ளனர்.

விசாரணையில், அவசர தேவைக்கு பணம் தேவைப்பட்டதால் தனது பெரியம்மாவான சரஸ்வதிடம் சென்று கேட்டதாகவும், அவர் அப்போது பணம் கொடுக்க மறுத்த காரணத்தால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது. வாக்கு வாதத்தின் போது திடீரென ஆத்திரமடைந்த அசோக்குமார், வீட்டில் இருந்த கத்தியைக் கொண்டு சரஸ்வதியை சரமாரியாக குத்தியதும், பின்னர் அவரின் கழுத்தில் இருந்த சங்கிலியை பறித்துச் சென்றதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அசோக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்தச் சம்பவம் பொன்னேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.