Skip to main content

கொடியேற்றத்துடன் தொடங்கியது பட்டணப் பிரவேச பெருவிழா! 

Published on 12/05/2022 | Edited on 12/05/2022

 

City Entrance Ceremony begins with flag hoisting!

 

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் ஞானபுரீஸ்வரர் ஆலய வைகாசி பெருவிழா மற்றும் பட்டணப் பிரவேச பல்லக்கு நிகழ்ச்சி உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

 

மயிலாடுதுறையில் 11 நாட்கள் நடைபெறும் விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக வரும் மே 18- ஆம் தேதி அன்று திருக்கல்யாணமும், வரும் மே 20- ஆம் தேதி அன்று திருத்தேர் உற்சவமும், மே 21- ஆம் தேதி அன்று தீர்த்தவாரியும் நடைபெறவுள்ளது. வரும் மே 22- ஆம் தேதி தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், சிவிகை பல்லக்கில் பட்டணப் பிரவேசம் மேற்கொண்டு, பக்தர்களுக்கு ஆசி வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

பாரம்பரியமாக நடைபெற்று வரும் பட்டணப்பிரவேச விழாவை நடத்த நடப்பாண்டில் தடை விதிக்கப்பட்டது சர்ச்சையான நிலையில், பின்னர் விலக்கிக் கொள்ளப்பட்டதால், இந்த விழா முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. 

 

இதனிடையே, பட்டணப் பிரவேச நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பாதுகாப்புக்கோரி அரசிடம் விண்ணப்பிக்கவும், அதை பரிசீலித்து பாதுகாப்பு வழங்கவும் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டிருக்கிறது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தருமபுரம் ஆதீனம் விவகாரம்; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
Darumapuram Atheenam Affair; High Court action order
அகோரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தருமபுரத்தில் ஆதீன சைவ மடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஆதீனத்தின் 27வது தலைமை மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பட்டம் வகித்து வருகிறார். இந்த சூழலில் தருமபுரம் ஆதீன மடாதிபதியின் சகோதரர் விருத்தகிரி மயிலாடுதுறை காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

அந்த புகாரில் தெரிவித்திருப்பதாவது, ‘தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை சார்ந்த வினோத் என்பவரும், மடாதிபதியின் உதவியாளர் செந்தில் என்பவரும் தன்னை நேரில் சந்தித்து ஆதீன மடாதிபதியின் ஆபாச வீடியோ தங்களிடம் இருப்பதாக மிரட்டினர். மேலும், அவர்கள் அந்த வீடியோவை சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைக்காட்சியில் வெளியிடாமல் இருக்க வேண்டுமென்றால் பணம் தர வேண்டும் என்று கூறி என்னைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயற்சி செய்தனர். இந்த சம்பவத்தில் செம்பனார்கோவிலைச் சேர்ந்த பிரபல கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, பா.ஜ.க. கட்சியின் மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் அகோரம், வழக்கறிஞர் செய்யூர் ஜெயச்சந்திரன் ஆகியோர் தூண்டுதலாக இருந்துள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், மயிலாடுதுறை பா.ஜ.க. மாவட்டத் தலைவர் அகோரம், மடாதிபதியின் உதவியாளர் செந்தில், வினோத் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி கைது செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து பா.ஜ.க. பிரமுகர் அகோரம் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘காவல்துறையினர் அரசியல் உள்நோக்கத்தோடு இந்த வழக்கில் தன்னை சேர்த்துள்ளது. நான் இதுவரையில் தலைமறைவாகவில்லை. முன் ஜாமீன் அளித்தால் நீதிமன்றம் அளிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு நிபந்தனைகளை பின்பற்ற தயாராக இருக்கிறேன்’ எனத் தெரிவித்திருந்தார்.

Darumapuram Atheenam Affair; High Court action order

இந்நிலையில் இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு இன்று (06.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “கட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியும், வழக்கு விசாரணை நிலையில் இருப்பதையும் கருத்தில் கொண்டு அகோரத்தின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிடுகிறேன்” எனத் தெரிவித்தார். 

Next Story

தருமபுரம் ஆதீனத்தை சந்தித்து ஆசி பெற்ற அமைச்சர்!

Published on 16/06/2022 | Edited on 16/06/2022

 

 

Blessed Minister meets Dharmapuram Aadeenam!

 

தருமபுரம் ஆதீனத்தை நேரில் சந்தித்த அமைச்சர் மெய்யநாதன் ஆசி பெற்றார்.

 

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வந்திருந்த அமைச்சர் மெய்ய நாதன், தருமபுரம் ஆதீனத்தை நேரில் சந்தித்துப் பேசினார். அவருக்கு ஆதீனம் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அமைச்சர் ஆதீனத்திடம்  ஆசிபெற்றார்.

 

அப்போது, ஆதீன கலைக்கல்லூரி பவள விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பதற்கு அழைப்பு விடுத்து, அமைச்சர் மெய்ய நாதனிடம் நிர்வாகம் சார்பில் கடிதம் வழங்கப்பட்டது.