Skip to main content

''தந்தை பெரியார்...''-ஹெச்.ராஜாவிடம் தக் லைஃப் காட்டிய செய்தியாளர்

Published on 11/10/2022 | Edited on 12/10/2022

 

 "Thanthai Periyar..." - Reporter who showed Thak Life to H. Raja

 

அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இத்திரைப்படத்தை பல்வேறு பிரபலங்களும் பார்த்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாஜக பிரமுகர் ஹெச்.ராஜா இந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது '2024 ஆம் ஆண்டு நடக்கும் தேர்தலுக்காக பாஜக எந்தவித  கீழ்த்தர அரசியலை செய்யும் என நேற்று முன்தினம் நடந்த பொதுக்குழுவில் முதல்வர் பேசியுள்ளாரே. அதுபற்றி உங்கள் கருத்து என்ன' என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

 

அதற்கு பதிலளித்த ஹெச்.ராஜா, ''ஸ்டாலின் குழம்பிப் போயிருக்கிறார் என்று உங்களுக்கே தெரியல. காலையில் எழுந்திருக்கும் பொழுதே யாராவது பிரச்சனையை கிளப்பிருப்பாங்களா? அப்படினு பயந்துகொண்டே எழுந்திருக்க வேண்டி இருக்கிறது. முதலில் அந்த குழப்பத்தில் இருந்து ஸ்டாலின் தெளிவதற்கு அவருக்கு வாழ்த்துக்கள் சொல்கிறேன்'' என்றார்.

 

அப்பொழுது செய்தியாளர் ஒருவர் 'மதத்தை வைத்து பாஜக தூண்டுகிறார்கள்...' என கேள்வியை எழுப்ப முற்பட்ட நேரத்தில் சடாரென ஹெச்.ராஜா காட்டமாக ''இங்க பாருங்க ஆன்மீகம் இல்லாத மனிதன் யார்?'' என கேள்வி எழுப்பினார். அதற்கு செய்தியாளர் சட்டென்று 'தந்தை பெரியார்' என்று சொல்ல, சிரித்த ஹெச்.ராஜா ''யூ ஆர் தி இக்நோரண்ட்... என் சகோதரி துர்கா கூட ஆன்மீகத்தில் நம்பிக்கை உள்ள நபர்தான். மதச்சார்பற்ற அரசு என ஏன் சொல்கிறோம். அரசுக்கு மதம் இல்லை. மன்மோகன் சிங்கிற்கு மதம் உண்டா இல்லையா? மதம் உண்டு இல்லையென்றால் டர்பன் கட்டி இருக்க முடியுமா? ஆனால் அதனை நாங்கள் எதிர்க்கவில்லை. அது தனிமனிதனுக்கான மத உரிமை. நிர்வாகத்திற்குத்தான் மதம் இல்லை'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.