Skip to main content

ஜொலிக்கும் தஞ்சை பெருவுடையார் கோயில்... இருண்டுகிடக்கும் உடையாளூர் ராஜராஜ சோழன் சமாதி!

Published on 04/02/2020 | Edited on 04/02/2020

தமிழர்களின் கட்டிடக்கலையை உலகிற்கு பறைசாற்றிவரும் தஞ்சை பெருவுடையார் கோயில் குடமுழுக்கு விழாவால் மாவட்டம் முழுவதும் விழாக்கோலம் பூண்டிருக்கிறது. சுற்றுலா பயணிகளும், ஆன்மீக பக்தர்களும், சாரை சாரையாக வந்த வண்ணமே இருக்கின்றனர்.

இந்த நிலையில் தஞ்சை பெருவுடையார் கோயிலை கட்டிய ராஜராஜ சோழனின் நினைவிடமாக குறிப்பிடப்படும் உடையாளூர் பகுதி எப்படி இருக்கிறது என்பதை அறிய அங்கு பயணித்தோம்.

thanjai temple festival king Rajaraja Cholan place not maintained government

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து தெற்கு நோக்கி ஆறாவது கிலோமீட்டரில் இருக்கிறது உடையாளூர் என்கிற கிராமம். அந்த கிராமத்திற்கு செல்லும் வழியிலேயே இடதுபுறமாக சின்னதாக ஒரு தகவல்கூறும் பிளக்ஸ் போர்டு ஒன்று மரத்தில் தொங்கியது, இருபுறமும் வீடுகள் நெருக்க, குருகலான வழியில் ராஜராஜசோழனின் நினைவிடத்தை நோக்கி சென்றோம், அந்த இடத்திற்கு சென்றதும் நமக்கு பகிர் என்று ஆனது. வயதான இரண்டு பாட்டிகள் நெல்லை உலர்த்திக்கொண்டு தலையை கோதிக்கொண்டிருந்தனர் மற்றபடி யாரும் வந்து போனதற்கான அடையாளமே இல்லாமல் இருந்தது.

பெருவுடையார் கோயில் மூலம் உலகம் முழவதும் உள்ள தமிழர்கள் கட்டிடக்கலையில் மார்தட்டிக்கொள்ள செய்த பேரரசன் ராஜராஜ சோழனின் இறுதிகாலம் குறித்தான சந்தேகம் இன்னும் இருந்துகொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் அவரது உடல் உடையாளூரில் தான் அடக்கம் செய்யப்பட்டது என பேசப்படுகிறது. இந்த விவகாரத்தில் தலையிட்ட நீதிமன்றம், ஆய்வு செய்ய உத்தரவிட்டது, அதன்படி ஆய்வுகள் நடத்தப்பட்டு அறிக்கைகள் சமர்பிக்கப்பட்டுள்ளது.

thanjai temple festival king Rajaraja Cholan place not maintained government

இது ஒருபுறம் இருக்க, ராஜராஜசோழனின் சமாதி இங்குதான் உள்ளது என பலதரப்பட்ட மக்களும் நம்புகின்றனர், மற்ற விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் சமாதிக்கு வந்து செல்கின்றனர்.

இந்தநிலையில் தஞ்சை கோயிலுக்கு வரும் ஐந்தாம் தேதி குடமுழுக்கு நடக்க இருக்கிறது, அதற்காக யாகபூஜைகள் மூன்று நாட்களாக நடந்து வருகிறது. பாதுகாப்புகள் பலபடுத்தப்பட்டு கலர் சீரியல் லைட்டுகளால் ஜொலித்து வருகிறது. ஆனால் அந்த கோயிலை கட்டிய ராஜராஜசோழனின் சமாதியோ லைட் இல்லாமல் கிடக்கிறது.

இதுகுறித்து அங்கு நெல் உலர்த்திக் கொண்டிருந்த வயதான பாட்டிகள் காளியம்மாள், கன்னியாயிடமும் கேட்டோம், "தினசரி யாராவது ஒருவர் வெளியூரிலிருந்து சமாதியை பார்க்க வருவாங்க ஆனா நாளைக்கு தஞ்சாவூர்ல கும்பாபிஷேகம், இங்க கூட்டம் தாங்காதுன்னு நினைத்தோம், ஆனா ஒரு காக்கா குருவிக்கூட வரல," என்றனர்.

thanjai temple festival king Rajaraja Cholan place not maintained government

பூசாரி நடராஜனோ, "அந்த காலத்தில் இந்த பகுதியை காடாக இருந்தது, ராஜராஜ சோழன் தனது இறுதி காலத்தின் இங்கு பழையார் எனும் இடத்தில் அரண்மனைக்கட்டிக்கொண்டு வாழ்ந்துள்ளார். தஞ்சை கோயிலை போலவே பழையாரில் சோமநாதர் கோயிலையும் கட்டி வழிபட்டிருக்கிறார். அந்த கட்டிடம் தற்போது முண்டம்போலவே இருக்கிறது, மீதமுள்ள பகுதி சிதைந்து கிடக்கிறது. தஞ்சை குடமுழுக்குக்காக, கோபுரத்தின் மீது இருந்த செடிகொடிகளை சுத்தம் செய்திருக்காங்க, அங்கு வாழ்ந்த அரசனின் உடலை ஒரு கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள இந்த உடையாளூரில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக பல கல்வெட்டு ஆதாரங்கள் கூறுகின்றனர். குடமுழுக்கு முடிந்ததும் இங்கு கவனம் செலுத்துவார்கள் போல தெரிகிறது." என்கிறார்.

thanjai temple festival king Rajaraja Cholan place not maintained government

பல கோடி ரூபாய் செலவில் தஞ்சை பெரிய கோயிலுக்கு குடமுழுக்கு நடந்துவருகிறது, ஆயிரம் ரூபாய் செலவு செய்து கோயிலை கட்டிய மாமன்னனின் சமாதிக்கு ஒரு லைட் போடவில்லையே என்பதே தமிழ் ஆர்வலர்களின் வருத்தமாக இருக்கிறது.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கல்லணை கால்வாய்க்கரை வீரமாகாளியம்மன் கோயில் முளைப்பாரித் திருவிழா!

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
Kallanai Canal Bank Veeramakaliamman Temple Mulaipari Festival

தை முதல் நாளில் தொடங்கும் திருவிழாக்கள் கிராமங்களில் களைகட்டி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மாசிமகத் திருவிழா கிராம மக்களை குதூகலப்படுத்தியது. அதிலும் புதுக்கோட்டை மாவட்டம் குளமங்கலம் வில்லுனி ஆற்றங்கரையில் எழுந்தருளியுள்ள ஆசியாவில் உயரமான குதிரை சிலை கொண்ட பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயில் மாசிமகத் திருவிழாவில் லட்சம் பேர் திரண்டிருந்தனர். ஆட்டம், பாட்டமும், சர்க்கஸ் கலை நிகழ்ச்சிகளும் பஞ்சமில்லாமல் நடந்தது.

Kallanai Canal Bank Veeramakaliamman Temple Mulaipari Festival

அதே போல தான், புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு கிராமத்தில் கல்லணைக் கால்வாய் ஆற்றங்கரையில் எழுந்தருளியுள்ள வீரமாகாளியம்மன் கோயில் திருவிழா கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன் தொடங்கி நடந்து வருகிறது. காப்புக் கட்டியதும் ஒவ்வொரு வீட்டிலும் விரதமிருந்து மண் சட்டிகள், உட்பட பல்வேறு பாத்திரங்களில் நவதானிய விதைகள் தூவி வீட்டுக்குள்ளேயே வைத்து சிறப்பு வழிபாடுகளுடன் வளர்த்து வந்த முளைப்பாரியை தாரை தப்பட்டை முழங்க வான வேடிக்கைகளுடன் கிராம மக்கள் நேற்று ஊர்வலமாக தூக்கிச் சென்று, மண்ணடித் திடலைச் சுற்றி ஒன்று சேர்ந்து கல்லணைக் கரையோரம் உள்ள பெரிய குளத்தில் விட்டனர். 

மேலும் முளைப்பாரியுடன் கொண்டு வந்த படையல் பொருட்களை ஒரே இடத்தில் குவித்து வைத்து படையலிட்டு வழிபட்டனர். இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Next Story

தஞ்சை ஆணவக்கொலை; மேலும் மூன்று பேர் கைது

Published on 12/01/2024 | Edited on 12/01/2024
Tanjore Massacre; Three more people were arrested

தஞ்சையில் நடந்த ஆணவக்கொலை சம்பவத்தில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள நெய்வவிடுதி பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் ஐஸ்வர்யா (19). இவரும், பூவாளூர் பகுதியைச் சேர்ந்த நவீன் (19) என்பவரும் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போதே காதலித்து வந்துள்ளனர். இருவரும் திருப்பூர் மாவட்டம் அரவப்பாளையத்தில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களது காதலுக்கு ஐஸ்வர்யாவின் குடும்பத்தார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால், இருவரும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். மேலும், இவர்கள் இருவரும் திருப்பூரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துத் தங்கி வந்துள்ளனர்.

இதையடுத்து, இவர்கள் திருமணம் செய்தது ஐஸ்வர்யாவின் பெற்றோருக்குத் தெரியவந்தது. இது தொடர்பாக, ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள் பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து, கடந்த 2 ஆம் தேதி பல்லடம் காவல்துறையினர், ஐஸ்வர்யாவை சமாதானப்படுத்தி அவரது தந்தை மற்றும் உறவினர்களுடன் அனுப்பி வைத்தனர். அதன் பின்னர், கடந்த 3 ஆம் தேதி நவீனை தொடர்பு கொண்ட அவரது நண்பர்கள், ‘ஐஸ்வர்யாவை அவரது தந்தை மற்றும் உறவினர்கள் அடித்து துன்புறுத்தி கொலை செய்து எரித்துவிட்டனர்’ என்று கூறியுள்ளனர்.

இதில் அதிர்ச்சியடைந்த நவீன், ஒரத்தநாடு பகுதிக்குச் சென்றுள்ளார். மேலும், அவர் இந்த சம்பவம் குறித்து வாட்டாத்திக்கோட்டை காவல் நிலையத்தில் ஐஸ்வர்யா ஆணவக் கொலை செய்யப்பட்டதாக புகார் அளித்தார். அவர் அளித்த அந்த புகாரின் அடிப்படையில், நெய்வவிடுதி மற்றும் பூவாளூர் பகுதிகளுக்குச் சென்று காவல்துறையினர் கடந்த 8ம் தேதி விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், ஐஸ்வர்யா மர்மமான முறையில் இறந்துள்ளதாகத் தெரியவந்தது.

இதையடுத்து, ஐஸ்வர்யா உடல் எரிக்கப்பட்ட சுடுகாட்டிற்கு காவல்துறையினர் சென்று பார்த்தபோது, அங்கு உடல் எரிக்கப்பட்ட பின் சாம்பல் கூட இல்லாததை கண்ட அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக இருந்த ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள், அவரது மனைவி ரோஜா, ஐஸ்வர்யாவின் பெரியம்மா பாசமலர், அவரது சகோதரி விளம்பரசி, மற்றொரு சகோதரி இந்து ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில், ஐஸ்வர்யா கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள் அவரது மனைவி ரோஜா இருவரையும் போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த மற்றவர்களையும் அடையாளம் கண்ட போலீசார் விசாரணை செய்து திருச்செல்வம், சின்ராஜ், முருகேசன் ஆகிய 3 பேரை இன்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்கு அனுப்பியுள்ளனர். இதே சம்பவத்தில் மேலும் சிலரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் மேலும் 3 பேர் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

பல்லடம் போலீசார் திருமணம் செய்துள்ள ஒரு தம்பதியை வழக்குப்பதிவு செய்யாமல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் புகார் கொடுத்தவர்களுடன் அனுப்பிவைத்ததால் தான், இப்படி ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு எழுப்பும் நிலையில், பல்லடம் காவல் நிலைய ஆய்வாளர் முருகையன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.