Skip to main content

எங்களிடம் பேசாவிட்டால் ஜவுளி ஏற்றுமதி முடங்கும்...?

Published on 22/02/2020 | Edited on 22/02/2020

ஜவுளி தொழிலின் கேந்திரமா இருக்கிறது ஈரோடு, பஞ்சாப், குஜராத், மேற்கு வங்கம் என தொடங்கி மகாராஷ்ட்ரா, கேரளா, கர்நாடகா என அனைத்து மாநில வியாபாரிகளும் ஈரோடு வந்து ஜவுளி ரகங்களை மொத்தமாக விற்பனைக்கு வாங்கிச் செல்வது வழக்கம். அதேபோல் தான் மஞ்சள் விற்பனையும் வட மாநில மஞ்சள் வியாபாரிகள் தங்களின் விற்பனைக்காக ஈரோடு மஞ்சளை வாங்கிச் செல்கிறார்கள். இப்படி இந்த தொழில்கள் ஏதோ வியாபாரிகள், விற்பனையாளர்களுடன் நிற்பதில்லை. இதன் பொருட்களை ஏற்றுமதிக்கும், இறக்குமதிக்கும் சுமக்கும் சுமை பணியாளர்கள் மிக முக்கியமானவர்கள்.

 

Textile exports will stop if you don't talk to us ...?

 

ஈராேட்டில் ஜவுளி சார்ந்த நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன. வெளியூர் நிறுவனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்படும் சரக்குகள், இறக்குமதி செய்யப்படும் சரக்குகளை சுமைத்தூக்கும் தொழிலாளர்கள் ஏற்றி இறக்கி வருகின்றனர். சரக்கு போக்குவரத்து நிறுவனங்களுக்கும், சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கும் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கூலி உயர்வு குறித்து பேச்சு வார்த்தை நடத்தப்படுகிறது. கூலி உயர்வு பேச்சுவார்த்தை இவ்வாண்டு நடத்தப்படவில்லை அதை தாமதிக்காமல் உடனடியாக நடத்த வேண்டும். என்பதோடு சில ஜவுளி கடை முதலாளிகள் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு விரோதமாக நீதிமன்றத்தில் போட்டுள்ள  வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு மாவட்ட அனைத்து சுமை தூக்குவோர் மத்திய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அதிமுகவின் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் தெய்வநாயகம் தலைமை வகித்தார். மற்ற சங்க தலைவர்களான விஜயகுமார், அயன்துரை, இளையராஜா, பாட்டாளி ஆறுமுகம், சிஐடியு. தங்கவேல் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.

இதில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். கூலி உயர்வு பேச்சுவார்த்தையை உடனே தொடங்கவில்லையென்றால் சுமை பணியாளர்கள் காலவரையற்ற ஸ்டைக்கில் ஈடுபடுவதாகவும் அறிவித்துள்ளனர். இதனால் ஏற்றுமதி முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கணேசமூர்த்தி உடலுக்கு துரை வைகோ அஞ்சலி!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Durai Vaiko Tribute to GaneshaMurthy 

ம.தி.மு.க.வின் பொருளாளராக இருந்த கணேசமூர்த்தி ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்.பி.யாக பணியாற்றி வந்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதி ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் ம.தி.மு.க.வுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார். வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கணேசமூர்த்தி, சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது தெரியவந்தது. கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி இன்று (28.03.2024) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்ததுடன் நேரில் சென்று உடலுக்கு அஞ்சலியும் செலுத்தினர்.

Durai Vaiko Tribute to GaneshaMurthy 

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறைக்கு இன்று மாலை நேரில் சென்று மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தியின் உடலுக்கு மாலை அணிவித்து ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ இறுதி அஞ்சலி செலுத்தினார். அதே சமயம் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும் அஞ்சலி செலுத்தினார். அனைத்துக் கட்சி முன்னணி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் துரை வைகோ இரங்கல் உரை ஆற்றினார்.

Durai Vaiko Tribute to GaneshaMurthy 

இந்த இரங்கல் கூட்டத்தில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் முத்துசாமி, மு.பெ. சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், அ.தி.மு.க. தலைமைக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி, திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி எனப் பலரும் கலந்து கொண்டனர். 

Next Story

“பேராசான் பிறந்த இடத்திலிருந்து தொடங்குகிறேன்” - கமல்ஹாசன்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
kamalhassan mnm campaign begins with erode

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தமாக ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவித்து பிரச்சாரத்தை தீவிரப்படுத்து வருகின்றனர். 

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், தி.மு.க-வுடனான கூட்டணியில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ஆதரித்து கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் விவரங்கள் சமீபத்தில் வெளியாகின. அதில் மார்ச் 29 ஆம் தேதி ஈரோட்டிலும், மார்ச் 30 ஆம் தேதி சேலத்திலும், ஏப்ரல் 2 ஆம் தேதி திருச்சியிலும், 3 ஆம் தேதி சிதம்பரத்திலும், 6 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னையிலும், 7 ஆம் தேதி சென்னையிலும், 10 ஆம் தேதி மதுரையிலும், 11 ஆம் தேதி தூத்துக்குடியிலும், 14 ஆம் தேதி திருப்பூரிலும், 15 ஆம் தேதி கோயம்புத்தூரிலும், 16 ஆம் தேதி பொள்ளாச்சியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

இந்த நிலையில் முதற்கட்டமாக ஈரோட்டில் திமுக தலைமையிலான கூட்டணியின் ஈரோடு பாராளுமன்ற வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து ஈரோடு மற்றும் குமாரபாளையத்தில் (வெப்படை) நாளை (29.03.2024 - வெள்ளிக்கிழமை) பிரச்சாரம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கமல், “மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்று கற்பித்த பேராசான் பெரியார் பிறந்த ஈரோட்டிலிருந்து என் பரப்புரையைத் தொடங்குகிறேன். இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க” எனக் குறிப்பிட்டுள்ளார்.