Skip to main content

சாக்கில் கட்டி வீசப்பட்ட பாட்டியும் பேத்தியும்! - தென்காசியில் பரபரப்பு!

Published on 20/02/2021 | Edited on 20/02/2021

 

tenkasi district incident police investigation

தென்காசி மாவட்டம், கீழப்புலியூரில் குடியிருப்பவர் கோமதியம்மாள் (வயது 55). இவரது மகள் சீதாவை அதே ஊரைச் சேர்ந்த முருகன் என்பவருக்கு மணம் முடித்துக் கொடுத்திருக்கிறார். முருகன் சீதா தம்பதியருக்கு மூன்று வயதில் ஒரு மகனும், ஒன்றரை வயதில் உத்தரா என்ற மகளும் உள்ளனர். மருமகன் முருகன் ராணுவத்தின் காஷ்மீர் பகுதியில் பணிபுரிந்து வருகிறார். அதன் காரணமாக கோமதியம்மாள் தன் மகள் சீதா மற்றும் பேரக்குழந்தைகளுடன் ஒன்றாகவே குடியிருந்து வருகிறார்.

 

tenkasi district incident police investigation

 

இந்த நிலையில், தன் மகளுடன் இருக்கும் கோமதியம்மாள் தன்னிடம் உள்ள பணத்தைக் கொண்டு தனது சொந்தக்காரர்களுக்கு வட்டிக்குக் கொடுத்து வந்திருக்கிறார். இந்தச் சூழலில், கடந்த ஜனவரி 12- ஆம் தேதி அன்று காலை கோமதியம்மாள் பணம் வாங்கி வருவதாகத் தன் மகள் சீதாவிடம் சொல்லி விட்டுத் தன் ஒன்றரை வயதுப் பேத்தி உத்தராவையும் அழைத்துக் கொண்டு போனவர் பொழுதாகியும் வீடு திரும்பவில்லையாம்.

 

tenkasi district incident police investigation

 

இதையடுத்து, உறவினர்கள் பாட்டியையும் பேத்தியையும் பல இடங்களில் தேடியும் கிடைக்காமல் போகவே தென்காசி காவல் நிலையத்தில் இது குறித்துப் புகார் கொடுத்துள்ளனர். அது விசாரணையில் உள்ள நிலையில், ராணுவத்தில் இருக்கும் முருகனும் ஆட்கொணர்வு மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார்.

 

tenkasi district incident police investigation

 

இந்த நிலையில் குற்றாலம் காவல் லிமிட்டில் வருகிற மத்தளம் பாறையின் முத்துமாலைக் காட்டுப் பகுதி சாலையின் புதரிலிருந்து அழுகிய வாடை வரவே, தகவல் அறிந்த குற்றாலம் ஆய்வாளர் ஆடிவேல் தலைமையிலான போலீசார் ஸ்பாட்டிற்கு வந்தனர். புதரிலிருந்த மூட்டையை அவிழ்த்துப் பார்த்ததில் அதில் வயதான பெண், ஒரு குழந்தை என இருவரது அழுகிய உடல் இருப்பதைக் கண்டு உறவினர்களுக்குத் தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து பார்த்ததில் அது காணாமல் போன கோமதியம்மாளும், பேத்தி உத்தரா என்றும் தெரிய வர பதை பதைப்பில் உறவினர்கள் கதறினர்.

 

tenkasi district incident police investigation

 

இது குறித்து விசாரணை நடத்திய குற்றாலம் காவல் நிலைய போலீசார் கோமதியம்மாளை அறிந்தவர்களில் சந்தேகத்திற்கிடமான இரண்டு பேரைப் பிடித்து ரகசிய இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வட்டிக்குப் பணம் கொடுக்கல், வாங்கலில் நடந்த சம்பவமாகத் தெரிகிறது. பேத்தியையும், பாட்டியையும் கொலை செய்து வேறு எங்கோ மறைத்து வைத்திருந்து விட்டு சாக்கு மூட்டையில் இங்கே கொண்டு வந்து போடப்பட்டது போன்று தெரிகிறது என போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. விசாரணை பல கோணத்தில் போகிறது என்கிறார்கள்.

 

பாட்டியும், ஒன்றரை வயது பேத்தியும் கொலை செய்யப்பட்டது தென்காசி வட்டாரத்தில் பீதியைக் கிளப்பியிருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

வெள்ளியங்கிரி மலை ஏறிய இளைஞருக்கு நேர்ந்த துயரம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy befell the young man who climbed the Velliangiri mountain

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது டிரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர்.

மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். இந்நிலையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறி சாமி தரிசனம் செய்துவிட்டு, கீழே இறங்கியபோது 7 வது மலையில் திருப்பூரை சேர்ந்த வீரக்குமார் (வயது 31) என்பவர் கடந்த 18 ஆம் தேதி தவறி விழுந்தார். இதனால் அவரின் கை மற்றும் வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

உடல்நலக் குறைவால் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய 7 பேர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக் உயர்ந்துள்ளது. முன்னதாக சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது எனவும், கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத் தீயை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.