Skip to main content

சாக்கில் கட்டி வீசப்பட்ட பாட்டியும் பேத்தியும்! - தென்காசியில் பரபரப்பு!

Published on 20/02/2021 | Edited on 20/02/2021

 

tenkasi district incident police investigation

தென்காசி மாவட்டம், கீழப்புலியூரில் குடியிருப்பவர் கோமதியம்மாள் (வயது 55). இவரது மகள் சீதாவை அதே ஊரைச் சேர்ந்த முருகன் என்பவருக்கு மணம் முடித்துக் கொடுத்திருக்கிறார். முருகன் சீதா தம்பதியருக்கு மூன்று வயதில் ஒரு மகனும், ஒன்றரை வயதில் உத்தரா என்ற மகளும் உள்ளனர். மருமகன் முருகன் ராணுவத்தின் காஷ்மீர் பகுதியில் பணிபுரிந்து வருகிறார். அதன் காரணமாக கோமதியம்மாள் தன் மகள் சீதா மற்றும் பேரக்குழந்தைகளுடன் ஒன்றாகவே குடியிருந்து வருகிறார்.

 

tenkasi district incident police investigation

 

இந்த நிலையில், தன் மகளுடன் இருக்கும் கோமதியம்மாள் தன்னிடம் உள்ள பணத்தைக் கொண்டு தனது சொந்தக்காரர்களுக்கு வட்டிக்குக் கொடுத்து வந்திருக்கிறார். இந்தச் சூழலில், கடந்த ஜனவரி 12- ஆம் தேதி அன்று காலை கோமதியம்மாள் பணம் வாங்கி வருவதாகத் தன் மகள் சீதாவிடம் சொல்லி விட்டுத் தன் ஒன்றரை வயதுப் பேத்தி உத்தராவையும் அழைத்துக் கொண்டு போனவர் பொழுதாகியும் வீடு திரும்பவில்லையாம்.

 

tenkasi district incident police investigation

 

இதையடுத்து, உறவினர்கள் பாட்டியையும் பேத்தியையும் பல இடங்களில் தேடியும் கிடைக்காமல் போகவே தென்காசி காவல் நிலையத்தில் இது குறித்துப் புகார் கொடுத்துள்ளனர். அது விசாரணையில் உள்ள நிலையில், ராணுவத்தில் இருக்கும் முருகனும் ஆட்கொணர்வு மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார்.

 

tenkasi district incident police investigation

 

இந்த நிலையில் குற்றாலம் காவல் லிமிட்டில் வருகிற மத்தளம் பாறையின் முத்துமாலைக் காட்டுப் பகுதி சாலையின் புதரிலிருந்து அழுகிய வாடை வரவே, தகவல் அறிந்த குற்றாலம் ஆய்வாளர் ஆடிவேல் தலைமையிலான போலீசார் ஸ்பாட்டிற்கு வந்தனர். புதரிலிருந்த மூட்டையை அவிழ்த்துப் பார்த்ததில் அதில் வயதான பெண், ஒரு குழந்தை என இருவரது அழுகிய உடல் இருப்பதைக் கண்டு உறவினர்களுக்குத் தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து பார்த்ததில் அது காணாமல் போன கோமதியம்மாளும், பேத்தி உத்தரா என்றும் தெரிய வர பதை பதைப்பில் உறவினர்கள் கதறினர்.

 

tenkasi district incident police investigation

 

இது குறித்து விசாரணை நடத்திய குற்றாலம் காவல் நிலைய போலீசார் கோமதியம்மாளை அறிந்தவர்களில் சந்தேகத்திற்கிடமான இரண்டு பேரைப் பிடித்து ரகசிய இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வட்டிக்குப் பணம் கொடுக்கல், வாங்கலில் நடந்த சம்பவமாகத் தெரிகிறது. பேத்தியையும், பாட்டியையும் கொலை செய்து வேறு எங்கோ மறைத்து வைத்திருந்து விட்டு சாக்கு மூட்டையில் இங்கே கொண்டு வந்து போடப்பட்டது போன்று தெரிகிறது என போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. விசாரணை பல கோணத்தில் போகிறது என்கிறார்கள்.

 

பாட்டியும், ஒன்றரை வயது பேத்தியும் கொலை செய்யப்பட்டது தென்காசி வட்டாரத்தில் பீதியைக் கிளப்பியிருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.