Skip to main content

8 ஆண்டுகளுக்கு பின் திறக்கப்பட்ட கோயில் - போலிஸ் பாதுகாப்போடு திருவிழா 

Published on 20/10/2018 | Edited on 20/10/2018
k1

 

வேலூர் மாவட்டம், காட்பாடி பனமடங்கி அடுத்த காளாம்பாட்டு கிராமத்தில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த காளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் காளம்பட்டு கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள ஏழு கிராம மக்கள் வழிபட்டு வந்தனர். அப்போது சுமார் 20 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் அந்த கோயில் முன்பு குவிவர். இதனால் பெரும் ஆட்டம் - பாட்டத்துடன் திருவிழா நடைபெற்று வந்தது.

 

இந்த கோவில் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திருவிழா நடத்துவதிலும் கோவில் உரிமை கொண்டாடுவதில் இருதரபினர்க்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. அது பெரும் மோதலை ஏற்படுத்தும் சூழலை ஏற்படுத்தியால் முக்கிய பிரமுகர்கள், அதிகாரிகள் திருவிழா நடத்துவதை தடை செய்து, கோயிலை பூட்டினர். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு காளியம்மன் கோவில் பூட்டப்பட்டது. 

 

எங்களுக்கு தான் கோயிலில் முழு உரிமை, அதனை அங்கீகரிக்க வேண்டும்மெனக்கேட்டு இருதரப்பினதும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அந்த வழக்கின் தீர்ப்பு சமீபத்தில் வழங்கப்பட்டது. அதில், காளியம்மன் கோவில் ஊருக்கு பொதுவானது எந்த சாதிக்குமானதல்ல என்று கூறி தீர்ப்பளித்துள்ளது. அதனை அடுத்து காட்பாடி வட்டாட்சியர் ஜெயந்தியை மற்றும் வருவாய்துறை அதிகாரிகளின் முன்னிலையில் கோவில் திறக்கப்பட்ட ஒரு குழு அமைத்து நிர்வாகம் செய்ய வருவாய்த்துறை உத்தரவிட்டது.

 

k

 

8 ஆண்டுகளாக பூட்டப்பட்டே கிடந்த கோயில் திறக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை அக்டேபார் 19ந்தேதி, ஏழு ஊர் கிராம மக்கள் இணைந்து காளியம்மனுக்கு அலங்காரம் செய்து கொலுவைத்து தங்கள் கிராமங்களில் இருந்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்து அம்மனுக்கு பொங்கலிட்டு வழிபட்டனர். எட்டு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் இந்த திருவிழா தங்களுக்கு மிகவும் சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளதாக அக்கிராம மக்கள் தெரிவித்தனர்.

 

இந்த திருவிழாவில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க 50க்கும் அதிகமான போலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போலிஸ் பாதுகாப்பு இருந்ததால் எந்த தரப்பினரும் பிரச்சனை செய்யாமல் திருவிழா இன்றும் நடந்து வருகிறது என்பது குறிப்பிடதக்கது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சார்வரி வருடம் முழுக்க என்ன பலன்? இன்னல்கள் தொடருமா? 

Published on 06/05/2020 | Edited on 06/05/2020
sas



2020 ஏப்ரல் 14 அன்று தமிழ் வருடமான சார்வரி வருடம் தொடங்கியது. இந்த சார்வரி வருட பாடல்:-
 

சார்வரி ஆண்ட தனிற் சாதி பதினெட்டுமே 
தீரமறு நோயால் திரிவார்கள் - மாரியில்லை
பூமி விளை வில்லாமற் புத்திரரும் மற்றவரும்
ஏமமின்றிச் சாவார் இயம்பு.
 

என இவ்வருடத்தைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. 
 

ஒரு வருடத்தின் தன்மையைப் பற்றி இவ்வளவு மோசமாக கூறியிருக்கிறார்கள் எனில் அதில் விஷயம் இருக்கத்தான் வேண்டும். 
 

இந்த சார்வரி வருடம் முழுவதும் உள்ள கோட்சார நிலை சற்றே திகிலடையச் செய்கிறது.
 

சார்வரி வருடம் 2020 ஏப்ரல் முதல் 2021 ஏப்ரல் வரை இருக்கும். 
 

முக்கியமான கோட்சார நிகழ்வுகளை காண்போம். 
 

1. 2020 மே 4ஆம் தேதி செவ்வாய் கும்ப ராசிக்கு மாறுவார். இதன் மூலம், செவ்வாய், சனி, குரு என மூன்று கிரக சேர்க்கையிலிருந்து, செவ்வாய் நகர்ந்து விடுவார்.


மேலும் செவ்வாய் சூரியனை பார்க்கும் பார்வையும் விலகிவிடும். இப்போது சூரியன், குரு, சனி என மூன்று கிரகமும் ஹேப்பி அண்ணாச்சிதான். இந்த செவ்வாய் நகர்வு உலகத்தை லேசாக மூச்சுவிட செய்யும். உலக ஆரோக்கியத்தில் சிறு கீற்று ஒளிரும்.
 

2. ஜுன் 21 அன்று சூரிய கிரகணம் நடக்கிறது. அன்று சூரியன், சந்திரன், ராகு என மூன்று கிரகங்களும் மிருக சீரிட நட்சத்திரத்தில்  ஒன்று கூடி நிற்கிறார்கள். மிருக சீரிடம் என்பது செவ்வாய் சார நட்சத்திரம். செவ்வாய் இந்த நேரத்தில் மீன ராசியில் அமர்ந்துள்ளார். அவர் தனது நான்காம் பார்வையால் சூரியன், சந்திரன், ராகுவை பார்க்கிறார். இவர்களுடன் வக்கிர புதனும் உள்ளார். இது ஒரு மோசமான அமைப்பு.
 

3. ஆனி மாதம் அதாவது ஜூன் 18 முதல் ஜூலை 16 வரை செவ்வாய் பார்வையின் சூரியனும் ராகுவும் இருப்பர். கேதுவும் சூரியன், ராகுவை பார்வையிடுவார். இதன் மூலம் செவ்வாய், சூரியன், ராகு, கேது எனும் பாவிகள் சேர்க்கை இருப்பதாக ஆகிறது. இது கெடுதல் செய்யும் அமைப்பு. இவர்களை ஒரு சுப கிரகமும் பார்க்கவில்லை.
 

4. ஜூலை 16 அன்று சூரியன் காலசர்ப தோஷத்திலிருந்து விலகி, கடகத்திற்கு மாறிவிடுவார். இதனால் உலகம் சற்றே முன்னேற்றம் அடையத் தொடங்கும். 
 

5. அடுத்து குரு, ராகு, கேது பெயர்ச்சி நடக்கும். வாக்கியப்படி, செட்பம்பர் 1ந் தேதி, திருக்கணிதப்படி செப்டம்பர் 25 அன்று ராகு ரிஷபத்துக்கும், கேது விருச்சிகத்துக்கும் மாறுவர். 
 

6. டிசம்பர் 24 அன்று செவ்வாய், மேச ராசிக்கு செல்வார். அங்கிருந்து தனது எட்டாம் பார்வையால், கேதுவை நோக்குவார். ஆக செவ்வாய், கேது சம்பந்தம் உண்டாகிறது.  இவ்விளைவு நன்மை தராது.
 

7. 2021ம் வருடம் ஜனவரி 4ஆம் தேதி மறுபடியும் ராகு, கேதுகளுக்குள் மற்ற அனைத்து கிரகமும் அடைப்பட்டுக்கொள்ளும். இரண்டாவதாக ஒரு கால ஸர்ப தோஷம் உண்டாகும்.
 

8. 2021 பிப்ரவரி 22ந் தேதி செவ்வாய், ரிஷப ராசிக்கு மாறி, அங்குள்ள ராகுவுடன் கை கோர்த்துக் கொள்வார். செவ்வாய், ராகு இணைவு மோசமான கோட்சார நிலை ஆகும். 
 

9. 2021 சித்திரை மாதம், பிலவ வருட 1ந் தேதி அன்று செவ்வாய், ராகுவைவிட்டு நீங்கி, மிதுனத்தில் நுழைவார்.
 

ஆக இந்த சார்வரி வருடம் முழுவதுமே, கோட்சாரம் பூச்சாண்டியாக பயமுறுத்துகிறது. எப்போது என்னாகுமோ என்று நடுக்கமாக இருக்கிறது.
 

ஆக 2021 ஏப்ரல் 14 வரை, ஒரு நன்மையான செயல்களும் நடக்க வாய்ப்பில்லை.
 

இந்த சார்வரி வருடத்தில் வருஷாதி கிரங்கள் குருவும், சனியும், ராகு கேதுவுக்குள் உள்ளனர். மேலும், ராகு கேதுக்களுடன் செவ்வாய் தொடர்பும் அதிகமாக உள்ளது.

எனவே சார்வரி வருடத்தில் ஜாக்ரதையாக இருக்கவும்.
 

சரி, இதற்கு பரிகாரம்தான் என்ன? 
 

காளியை வணங்குவதே ஒரே பரிகாரம். மேலும் சில காளிகளுக்கு ஆடு, கோழி போன்ற பலி கொடுப்பதும் நிவர்த்தி தரும் பரிகாரம் ஆகும். அப்புறம் உங்களுக்கு தெரிந்த தெய்வம், தெரியாத சாமி, பக்கத்து ஊர் பகவான், எதிர் தெரு அம்மன், அறிந்த தெய்வம், அறியாத கடவுள் என எல்லா தெய்வத்தையும் விழுந்து விழுந்து வணங்குங்கள். செய்த பாவம் தீர வேறு வழி?

-ஆர். மகாலட்சுமி