Skip to main content

''இங்க உட்காந்து பிச்சை எடுக்கனும்னா 1000 ரூபாய் கொடுக்கனும்'' - உயரதிகாரிகள் வரை சென்ற வீடியோ புகார்!

Published on 20/02/2021 | Edited on 20/02/2021

 

temple in incident in pudukottai

 

புதுக்கோட்டையில் இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோவில் வாசலில் பிச்சை எடுப்பதற்கு சீனியர் பிச்சைக்காரப் பெண் ஒருவர் ஆயிரம் ரூபாய் மாமூல் வசூலிப்பது தொடர்பான குற்றச்சாட்டுகள் புகார்கள் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

temple in incident in pudukottai

                                பாதிக்கப்பட்ட முதியவர்,மூதாட்டி

 

புதுக்கோட்டை இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான சாந்தநாத சாமிகள் மற்றும் வேதநாயகி அம்பாள் சன்னதி கோயில் முன்பு, யார் பிச்சை எடுத்தாலும் தனக்கு மாமூல் கொடுக்க வேண்டும் என சீனியர் பிச்சைக்காரப் பெண்ணொருவர் பிச்சைக்காரர்களிடம் பணம் வசூலித்து வந்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அந்தக் கோவிலில் பிச்சை எடுத்துவந்த முதியவர் பேசும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ''ஆயிரம் ரூபாய் கொடுத்தால்தான் இங்கே உட்காந்து பிச்சை எடுக்க முடியுமாம்'' என வேதனை தெரிவித்துள்ளார். அதேபோல் அந்தக் கோவிலில் ஏற்கனவே கணவருடன் பிச்சை எடுக்கும் மூதாட்டி ஒருவர், தனக்கும் தன் கணவனுக்கும் ஆயிரம், ஆயிரம் ரூபாய் என 2000 ரூபாய் அந்தப் பெண்மணியிடம் கொடுத்து வைத்திருப்பதாக வீடியோவில் வேதனை தெரிவித்திருக்கிறார்.

 

temple in incident in pudukottai

                                              பணம் வசூலித்த பெண்

 

இந்தக் குற்றச்சாட்டை தொடர்ந்து இந்தத் தகவலானது உள்ளூர் காவல் நிலையத்திற்குச் செல்ல, போலீசார் இது தொடர்பாக நடவடிக்கை எதுவும் எடுக்காமல் அந்த சீனியர் பிச்சைக்காரப் பெண்ணிற்கு புத்தி சொல்லி அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இந்த வீடியோ உயர் காவல் அதிகாரிகளுக்கு சென்று சேர்ந்ததையடுத்து, இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பிச்சை எடுப்பதற்கு ஆயிரம் ரூபாய் வசூல் செய்த அந்தப் பெண் தற்போது தலைமறைவாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.