Skip to main content

“மக்களே உழவாரப்பணி செய்வதன் மூலம் கோவிலை மீட்டெடுக்க முடியும்” - கார்த்திகேயன்

Published on 24/05/2024 | Edited on 24/05/2024
temple can be reclaimed by people themselves  says Karthik Arasan

தமிழ்நாடு கோவில்கள் சிந்துவெளி நாகரிகத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படுகிறது. கோயில்கள் என்பது தெய்வத்தை வழிபடுவதற்காக மட்டுமல்ல கலை மற்றும் கலாச்சாரத்தைப் பாரம்பரியத்தை நிலைநிறுத்தும் இடமாக இருந்து வருகிறது. அந்த வகையில் பாரம்பரிய கட்டமைப்புகள் அரசர்களுக்குப் பிறகு அரசர்களாலும், வம்சத்திற்குப் பிறகு வம்சத்தாலும் பாதுகாக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வந்தனர். எனவே, நமது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாத்தல், புனரமைத்தல் ஆகியவை இந்த நிலத்தின் அரசர்களின் முதன்மையான குறிக்கோளாக இருந்தன. மாநிலம் முழுவதும் உள்ள உயரமான மற்றும் அற்புதமான கோயில்கள் அவற்றின் வெற்றிக்குச் சாட்சியாக நிற்கின்றன.

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி வந்த பிறகு அரசர்களால் நிர்வகிக்கப்பட்ட கோயில்கள் ‘அரசாங்கத்தின்’ மேற்பார்வையின் கீழ் வந்தது. முதல் அத்தகைய ஒழுங்குமுறை, கோவில்களின் நிர்வாகமானது, சென்னை ஒழுங்குமுறை 1817 ஆகும். இது கோவில்களுக்கான மானியங்கள் மற்றும் கொடைகள் முறையாகப் பயன்படுத்தப்படுகிறதா அல்லது தனியார் தனிநபர்களின் நலனுக்காகத் திசைதிருப்பப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கும். அதைத் தொடர்ந்து, 1927ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையச் சட்டம் உருவாக்கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு, தற்போதைய தமிழ்நாடு இந்து சமய அறநிலையச் சட்டம், 1959 அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கோயில் நிர்வாகத்திற்கென தனித் துறை உருவாக்கப்பட்டது.

தற்போது இந்து சமய மற்றும் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலும் நிர்வாகத்திலும் சுமார் 44,121 மதநிறுவனங்கள் உள்ளன, அவற்றில் 1966 மடங்கள், 42155 கோயில்கள், இதில் 8450 கோயில்கள் பழமையானவை, அவை100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டவை மற்றும் கிட்டத்தட்ட 21000 கோவில்களுக்குச் சீரமைப்பு தேவைப்படுகிறது. மேலும் கோயில்களின் தரவுத்தளத்திலிருந்து தரவுகள் உள்ள 40695 கோயில்களில் 32935 கோயில்கள் நல்ல நிலையில் உள்ளன. 6414 கோயில்கள் சீரமைக்கப்பட வேண்டும், 530 கோயில்கள் பகுதி சிதிலமடைந்தவை, 716 கோயில்கள் கடுமையாக சிதிலமடைந்துள்ளன.

தமிழக  அரசு திணைக்களத்தால் அடையாளம் காணப்பட்ட பாழடைந்த நிலையில் இருந்த இந்த பழங்கால கட்டமைப்புகளைப் புதுப்பித்து மீட்டெடுப்பதே பார்வையாக இருந்தது. எனவே, போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இக்கோயில்களைப் புதுப்பிக்கவும், புனரமைக்கவும் வல்லுநர்களிடம் இருந்து தேவையான உள்ளீடுகளுடன் போர்க்கால அடிப்படையில் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மே, 2021 முதல்  இன்றுவரை கிட்டத்தட்ட 1636 கோவில்களுக்கான கும்பாபிஷேகங்கள் இந்து சமய மற்றும் அறநிலையத்துறையால் நடத்தப்பட்டன. கோயில்கள் சொந்தமான ஏராளமான சொத்துக்கள்  ஆக்கிரமிப்பு மற்றும் வழக்குகளில் உள்ளதால், கோயில்களால் வருமானம் ஈட்டமுடியவில்லை.

ஆகையால் இந்த அரசு ஆக்கிரமிப்புகளுக்கு உட்பட்ட கோவில்களுக்குச் சொந்தமான 1000 ஏக்கர்  சொத்துக்களை மீட்கப்பட்டு தற்போது வருவாய் ஈட்ட வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதே போலக் கோயில்களில் அன்னதானத் திட்டம், திணைக்களம் இப்போது மாநிலம் முழுவதும் உள்ள ஏராளமான கோயில்களின் பல்வேறு செயல்பாடுகள் மற்றும் விழாக்களை நேரடியாக ஒளிபரப்புகிறது.  இப்படி ஏராளமான புதுவகையாக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்துவந்தாலும் தற்போதுள்ள இந்த அவரவர் வாழும் பகுதியில் உள்ள கோயில்களுக்கு அவர்களே உழவாரப்பணி செய்துகொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவு கொடுத்த மேலும் மக்களின் மத்தியிலும் கொண்டுசேர்க்கவேண்டும் எனச் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
 
இது குறித்து பொதுநலவழக்கு பதிவு செய்யாத கார்த்திகேயன் பேசியபோது, “எவ்வழியோ குடிமகனும் அவ்வழி என்பது போலத் தமிழர்களின் கலை பண்பாடு கலாச்சாரம் போன்றவற்றை முழுமையாகப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கொடுப்பதே நம்முடைய கடமையாக உள்ளது. இந்த அரசு அருமையாகச் செயல்பட்டு வருகிறது. அதே போல அந்தந்த பகுதிகளில் உள்ள பல கோயில்கள் அரசுக்கே தெரியாமல் அழிவு நிலை கிடப்பதால் அந்த மக்களே தூய்மை செய்து புதுப்பித்தல் செய்யும் பணிக்கு ஒப்புதல் கொடுத்தால் மேலும் கோயில்களை காப்பற்றபடும் என்பதையும் மனதில் கொண்டு மார்ச் மாதம் வழக்குப் பதிவு செய்தோம். அதற்குத் தீர்ப்பு ஏப்ரல் மாதம் 30.04.24. தேதி நடைமுறைப்படுத்தலாம் என உத்தரவு கொடுத்திருந்தது . இதனால் அழிவு நிலையில் உள்ள கோயில்களையும் பாதுகாத்தல், தூய்மைப்படுத்துதல், குளம் சீரமைத்தல், மூலமாகப் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் மீட்டெடுக்கமுடியும்” என்றார்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

கோவிலில் யாகம் வளர்த்த பக்தர்கள்; விரட்டி விரட்டி கொட்டிய தேனீக்கள்

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
Devotees who raised sacrifices in the temple; Banished bees

கரூர் மாவட்டம் அருகே உள்ளது நெரூர் பகுதி இந்தப் பகுதியில் பழமை வாய்ந்த பெருமாள் கோவில் ஒன்று உள்ளது. இந்த நிலையில் இந்தக் கோவிலில் வழிபாடு நடத்துவதற்காக கும்பகோணத்தில் இருந்து ஆறு பக்தர்கள் அந்தக் கோவிலுக்கு வந்துள்ளனர். இதனால் கோவிலில் யாகம் செய்து பூஜை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதற்காக யாக குண்டம் அமைக்கப்பட்டு யாகம் வளர்க்கப்பட்டது. தீயில் உருவான புகை கோயில் முழுக்க பரவியது. அப்பொழுது கோவில் வளாகத்திலேயே இருந்த மரத்தில் தேன்கூடு ஒன்று இருந்தது. அதிகப்படியான புகையால் தேன் கூட்டில் உள்ள தேனீக்கள் கிளம்பின.

கோவிலில் இருந்த பக்தர்கள் அனைவரையும் தேனீக்கள் கொட்ட தொடங்கியது. உடனடியாக அனைவரும் கோவிலுக்கு உள்ளேயே ஒளிந்து கொண்டனர். தொடர்ந்து கரூர் தீயணைப்பு துறை எனக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக அங்கு வந்த தீயணைப்பு படையினர் பாதுகாப்பு உடை, முக கவசம் ஆகியவற்றை அணிந்து கொண்டு உள்ளே சென்று பக்தர்களை சலனமில்லாமல் ஒவ்வொருவராக வெளியே கொண்டு வந்தனர். மீட்கப்பட்ட அனைவரும் கரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். யாகம் வளர்த்த புகையால் தேன் கூட்டிலிருந்து தேனீக்கள் கிளம்பி, கொட்டிய சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

தேர் சரிந்து ஒருவர் பலி! - 5 பேர் காயம்

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
One lost life, 5 injured as chariot falls in Pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா மாத்தூர் ராமசாமாபுரம் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழா கடந்த வாரம் காப்புக்ட்டுதலுடன் தொடங்கி நடந்து வருகிறது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத் திருவிழா இன்று மாலை 4 மணிக்கு நடக்க இருந்தது. இந்த நிலையில் தேர் அலங்கார சீரமைப்புப் பணிகள் தொடங்கி நடந்தது. இன்று காலை பலர் தேர் அலங்காரப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தேரின் உச்சியில் வைக்கப்பட வேண்டிய பெரிய குடம் ஏற்றப்பட்ட போது தேர் சக்கரத்திற்கு மேலே சரிந்து ஒரு பக்கமாக விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

அப்போது தேரின் மேல் இருந்து வேலை செய்து கொண்டிருந்தவர்கள் மற்றும் தேருக்கு கீழே நின்றவர்கள் என பலர் சாய்ந்த தேருக்குள் சிக்கிக் கொண்டனர். இதில் மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சபாபதி மகன் மகாலிங்கம் (60) தேருக்குள் சிக்கி உயிரிழந்தார். மேலும், தேர் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த கீரமங்கலம் மேற்கு பகுதியைச் சேர்ந்த கணேசன் மகன் கோபு(45), கணபதி (50), சேந்தன்குடி தர்மலிங்கம் மகன் ஆறுமுகம் (46), மற்றும் மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் அழகர் (46), வீரையா மகன் விஜயகுமார் (36) ஆகியோர் படுகாயமடைந்து பேராவூரணி, புதுக்கோட்டை, திருச்சி ஆகிய ஊர்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.