Skip to main content

ஆர்ப்பாட்டம் அறிவித்த திமுக... பேச்சுவார்த்தை நடத்தி உறுதி அளித்த வட்டாட்சியர்...

Published on 16/08/2020 | Edited on 16/08/2020
dmk

 

அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், குழுமூர் கிராமத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழகத்திற்கு சொந்தமான நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு சில அத்தியாவசிய வசதிகள் ஏற்படுத்தித் தரவேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி 18-8-2020 ஆம் தேதி கலை 9 மணி அளவில் குழுமூர் நேரடி நெல்கொள்முதல் நிலையத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக செந்துறை ஒன்றிய திமுக ஒன்றிய செயலாளர் மு. ஞானமூர்த்தி தலைமையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது தொடர்பாக 15-8-2020 ஆம் தேதி காலை 12 மணி அளவில் வட்டாட்சியர் முத்துக் கிருஷ்ணன் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 

 

இதில் திமுக ஒன்றிய செயலாளர் மு. ஞானமூர்த்தி, குழுமூர் ஊராட்சி மன்ற தலைவர் பூபதி, ஒன்றியக் குழு உறுப்பினர் ம. ரெங்கநாதன், அரியலூர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் திரு. உமாசங்கர் மகேஷ்வரன், கொள்முதல் அலுவலர் எஸ். வரதராஜன், செந்துறை காவல் உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன்,மாத்தூர் பகுதி வருவாய் ஆய்வாளர் ராஜேந்திரன், கிராம நிர்வாக அலுவலர் பாளவந்தார், ஆகியோர் கலந்து கொண்டனர். 

 


பேச்சுவார்த்தையின்போது, விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் நெல் மூட்டைகளை பாதுகாக்கும் பொருட்டு கிடங்கு அமைக்க கோரியதற்கு மேற்கண்ட கிராம புல எண் 234/1 -1.48.5ஹெக்டேர் வண்டிப்பாதை புறம்போக்கில் தற்போது பயன் பாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், வனத்துறை அலுவலர் குடியிருப்பு மற்றும் வங்காரம் சாலை ஆகியவற்றிற்காக ஒதுக்கப்பட்ட இடத்தினை தவிர்த்து மீதமுள்ள நிலத்தினை அளவீடு செய்து சுமார் 1 ஏக்கர் இடத்தினை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழகத்திற்கு நில உரிமை மாற்றம் செய்வதற்கான கருத்துருக்கள் அனுப்பி வைக்கப்படும் என வட்டாட்சியரால் தெரிவிக்கப்பட்டது.

 

மேற்படி கருத்துருக்கள் அனுப்பி வைக்கப்பட்ட பின்னர் மேற்கண்ட இடத்தில் மூன்று மாத காலத்திற்குள் நெல் கொள்முதல் கிடங்கு மற்றும் களம் அமைத்து தரப்படும் என்று அரியலூர் நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளரால் தெரிவிக்கப்பட்டது. 

 

மேலும் டோக்கன் கொடுக்கப்பட்டு கொள்முதல் செய்யப்படாத நெல்லை வரும் திங்கள் முதல் முழுவதும் கொள்முதல் செய்துவிடுவதாக மேலாளரால் உருதியளிக்கப்பட்டது. 

 

பருத்தி கொள்முதல் நிலையம் துவங்குவதற்கு சம்பந்தப்பட்ட துறையை கலந்து ஆலோசித்து அதற்கான இடத்தையும் ஒதுக்கி தருவதாக வட்டாட்சியர் உறுதி அளித்தார். 

 

மேற்கண்ட விவரங்களை தெரிவிக்கப்பட்டதன் பேரில் திமுக கட்சி சார்பில் 18-8-2020 அன்று நடத்தப்படுவதாக இருந்த ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது. 

 

பேச்சுவார்த்தையில் திமுக மாவட்ட இலக்கிய அணி பொருளாளர் ஆர். விசுவநாதன், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் துரை. தேன்துளி, ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளரும் ஒன்றிய குழு உறுப்பினருமான ஆ. தமிழ்மாறன், ஒன்றிய தொண்டர் அணி அமைப்பாளர் வீரா. இராசேந்திரன், ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் இர. ஆனந்த்ராஜ், குழுமூர் கழக முன்னோடிகள் மகாலிங்கம், செல்வராசு, இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.