Skip to main content

அரசு பள்ளி மாணவர்களின் வீடு தேடி சென்று பாடம் கற்பிக்கும் ஆசிரியை; காரைக்கால் நெகிழ்ச்சி

Published on 07/08/2020 | Edited on 07/08/2020

 

 

கரோனா எனும் கொடிய வைரஸ் ஒட்டுமொத்த மக்களையும் கதிகலங்க வைத்து வருகிறது. பள்ளிகள், கல்லூரிகள் தொடர்விடுமுறையால்  குழந்தைகள் வீட்டில் முடங்கி கிடக்கின்றனர். தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்பு என்கிற பெயரில் பாடம் கற்பித்து வருகின்றனர்.

 

ஆனால் அரசு பள்ளி மாணவர்களோ, மன புழுக்கத்துடன், விடுமுறை திகட்டி வெதும்பி நிற்கின்றனர். அவர்கள் மனரீதியாக பாடத்தை விட்டு வேறு செயலுக்கு சென்றுவிடக்கூடாது, கல்வி பாதையிலிருந்து விலகிவிடக்கூடாது என்பதற்காக ஆசிரியை ஒருவர் மாணவர்கள் இருக்கும் வீடுதேடி சென்று பாடம் கற்பித்து வருவது பெருத்த வரவேற்பை பெற்றிருக்கிறது.

 

காரைக்கால் தந்தை பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக இருக்கும் இரா,மேகலா என்பவர்தான் இந்த அர்ப்பணிப்பு பணியை செய்துவருகிறார். ஆசிரியை மேகலா இயல்பாகவே சமூக நலனிலும், மாணவர்கள் மீதும் அக்கறை கொண்டவராக இருந்ததால் புதுச்சேரி அரசின் நல்லாசிரியர் விருதை பெற்றிருக்கிறார் என்கிறார்கள் காரைக்கால் பகுதியை சேர்ந்தவர்கள்.

 

பலதரப்பட்ட மக்களின் வாழ்த்துகளை பெற்றுவரும் ஆசிரியை மேகலா கூறுகையில்," கரோனா பொதுமுடக்கத்தால் போதும், போதும் என்கிற அளவில் அவர்களுக்கு விடுமுறை கிடைத்துவிட்டது. தனியார் பள்ளிகள் தங்களது மாணவர்களை ஆன்லைன் வகுப்பில் கவனம் செலுத்தவைத்துள்ளனர். ஆனால் அரசு பள்ளி மாணவர்களின் மனநிலை கேள்விக்குறியாக மாறியிருக்கின்றது. இதை நான் நன்கு உணர்ந்தேன். என்னிடம் படிக்கும் மாணவர்களின் நலன் குறித்து விசாரிப்பதற்காக திருநள்ளாறு, அதிபடுகை, பூ மங்கலம், பிள்ளைதெருவாசல் போன்ற கிராமங்களுக்கு அவ்வப்போது சென்று வந்தேன். அவ்வப்போது அவர்களுடன் உரையாடினேன் அப்போது மாணவர்கள் நோட்டு புத்தகங்களை எடுத்து, எழுதவோ படிக்கவோ செய்வதில்லை, அதை முற்றிலுமாக மறந்துவிட்டார்கள் என்பதை புரிந்து கொண்டேன். அதோடு கிடைக்கும் செல்போனை பயன்படுத்தி மனரீதியாகவும், உடல் ரீதியாக மாற்றமடைவதையும் உணர்ந்தேன்.

 

எப்போதுமே விடுமுறையை விரும்பும் மாணவர்கள் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் படிக்க வேண்டும் என்று விரும்புவதை நான் பார்த்தேன் அதன் பிறகு பிள்ளை தெரு வாசல் பகுதியில் உள்ள அரசு பள்ளி மாணவர்களின் வீட்டுத் திண்ணைகளில் அமர்ந்து காலை ஏழு முப்பது மணி முதல் 9 மணி வரையும் திருநள்ளாறு அருகே உள்ள கிராமப் பகுதியில் மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் கடந்த 10 நாட்களாக பாடம் நடத்தி வருகிறேன்.

 

பாடத்தை மட்டும் நான் கற்றுக்கொடுக்கவில்லை, கையெழுத்து பயிற்சி ஸ்போக்கன் இங்கிலீஷ், தமிழ் இலக்கியத்தை வாசிக்க பழகுதல் கணித வாய்ப்பாடுகளை நினைவு கூறுதல் போன்ற பயிற்சிகளை அளித்து வருகிறேன்." என்கிறார் ஆர்வமாக.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.

Next Story

'ஐயம் களையப்பட வேண்டும்'- ஆசிரியர் மன்ற மாநில பொதுச்செயலாளர் கோரிக்கை

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
nn

'மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களின் வாக்குரிமை பாதுகாக்கப்படவேண்டும். எனவே அஞ்சல் வாக்கு மற்றும் தேர்தல் பணிச்சான்று கிடைக்கப்பெறாத ஆசிரியர், அரசு அலுவலர்களின் ஐயம் களையப்படவேண்டும்' என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொதுச் செயலாளர் மன்றம் நா.சண்முகநாதன் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது, 'தமிழ்நாட்டில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் எதிர்வரும் 19.04.2024 அன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கு மக்களவைத் தேர்தல் பணிகளில் தமிழ்நாட்டின் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் வாக்குச்சாவடி அலுவலர் பொறுப்புகள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இவ்வாறு வாக்குச்சாவடி அலுவலர்களாக பணியமர்த்தப்பட்டுள்ள ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்கு(postal vote) உரிமையின் மூலமாகவும் , தேர்தல் பணிச் சான்று(election duty certificate) கிடைக்கப்பெற்று பணியாற்றும் வாக்குச்சாவடிகளில் வாக்கினை செலுத்துவது மூலமாகவும் தங்களது ஜனநாயக கடமையை செவ்வனே ஆற்றி வந்துள்ளனர் என்பது காலம் காலமாக இருந்து வரும் நடைமுறை மரபாகும்.

ஆனால் தற்போதைய மக்களவைத் தேர்தலுக்கான இவ்வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இதுவரையிலும் மூன்று கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையிலும் அஞ்சல் வாக்குகள் கோரியவருக்கு அஞ்சல் வாக்குகளும் வழங்கப்படவில்லை.தேர்தல் பணிச்சான்று கோரியவருக்கும் தேர்தல் பணிச்சான்றும் வழங்கப்படவில்லை. மாநிலத்தின் பெரும்பாலான மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களின் இதற்கு மெத்தனப்போக்கு காரணமாகும்.  வாக்குரிமை பறிப்புக்கு இணையானதாகும் என்று வலுவாகப் பேசப்படுகிறது.

nn

தமிழ்நாட்டின் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களிடம் பரவலாக பரவி வரும் பேரச்சம் மற்றும் பெரும் ஐயம், மனப்பதற்றம், மனக்கொந்தளிப்பினை அதிகரித்துள்ளது. புதுக்கோட்டை  மாவட்டத்தில் மறியல் போராட்டம் வரை சென்றுள்ளது. நூறு சதவிகிதம் வாக்குப் பதிவினை முதன்மை நோக்கங்களில் ஒன்றாக கொண்டுள்ள தேர்தல் ஆணையத்தின் இலக்கினை நிறைவேற்றும் வகையில் தேர்தல் பணிகளில் பணியமர்த்தப்படும் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களுக்கு அஞ்சல் வாக்குச்சீட்டும், தேர்தல் பணிசான்றும் உடன் கிடைக்கப் பெறச்செய்து வாக்கு உரிமையை பாதுகாத்துத் தந்திட வேண்டுமாய் தமிழ்நாடு தலைமைத்தேர்தல் அலுவலரிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது' என தெரிவித்துள்ளார்.