Skip to main content

ஆசிரியையின் கணவர் திடீர் மரணம் - கொலையா? தற்கொலையா? மாறுபட்ட தகவல்களால் போலீசார் குழப்பம்!

Published on 17/08/2022 | Edited on 17/08/2022

 

teacher husband incident police investigation in salem district police investigation

 

 

கெங்கவல்லி அருகே தனியார் பள்ளி ஆசிரியையின் கணவர் சந்தேகத்திற்குரிய வகையில் இறந்து கிடந்தார். அவரை மர்ம நபர்கள் கொலை செய்திருக்கலாம் என்றும், அவரே கை, கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் மாறுபட்ட தகவல்கள் கிடைத்ததால் காவல்துறையினர் குழப்பம் அடைந்துள்ளனர்.

 

சேலம் மாவட்டம், கெங்கவல்லி தெற்கு வீதியைச் சேர்ந்தவர் மோகன். ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலரான இவருடைய மகன் முருகன் என்கிற சதீஷ் (வயது 42). இவருடைய மனைவி வனிதா (வயது 30). இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகன் இருக்கிறான். 

 

வனிதா, தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். அதே பள்ளியில்தான் அவர்களின் மகனும் படிக்கின்றான். திருமணம் ஆன நாளில் இருந்தே முருகன் எங்கேயும் வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். இதனால் வனிதாதான் குடும்பச் செலவுகளை கவனித்து வந்துள்ளார். 

 

முருகனுக்கு கஞ்சா மற்றும் மதுப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் ஊரில் பலரிடம் கடன் வாங்கியுள்ளார். நாளடைவில் கடன் கொடுத்தவர்கள் பணத்தைத் திருப்பிக் கேட்டு அவருக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர். 

 

இதனால் அவர் தற்போது குடியிருந்து வரும் வீட்டை விற்று, அதன்மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு கடனை அடைத்து விடலாம் என முடிவு செய்துள்ளார். இதற்காக அவர், அமுதா என்பவரிடம் வீட்டை விற்க முடிவு செய்துள்ளார். 

 

இதற்காக அமுதா, அவருக்கு வங்கி கணக்கு மூலம் 7 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். முருகன், வங்கியில் 3 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்ததால், அதற்கான தொகையையும் கொடுத்திருந்தார். இந்தப் பணத்தைக் கொண்டு அவர் யார் யாரிடம் கடன் வாங்கியிருந்தாரோ அவர்களுக்கு திருப்பிக் கொடுத்து வந்தார். 

 

இந்நிலையில், செவ்வாய் கிழமை (ஆக. 16), வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றிருந்த வனிதாவும், அவருடைய மகனும் மாலையில் வீடு திரும்பினர். வீட்டிற்கு வந்து பார்த்தபோது அங்கு, முருகன் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தார். 

 

கை, கால்களில் கத்தியால் வெட்டப்பட்டதற்கான காயங்கள் இருந்தன. சடலத்தைப் பார்த்து வனிதாவும், மகனும் கதறி அழுதனர். இதுகுறித்து கெங்கவல்லி காவல்நிலையத்தில் வனிதா புகார் அளித்தார். 

 

காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 

வீடு விற்பது தொடர்பாக அமுதா என்பவர் வங்கி கணக்கு மூலம் செலுத்தியிருந்த பணத்தை, கடன்காரர்களுக்கு கொடுப்பதற்காக முருகன் பணத்தை எடுத்து வந்துள்ளார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அவரை வீடு வரை பின்தொடர்ந்து வந்து, கொலை செய்துவிட்டு, வீட்டிலிருந்த பணத்தை திருடிச் சென்றிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகித்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.