Skip to main content

சரக்கு படுத்தும்பாடு... போலீஸ்காரரை தாக்கிய இருவர் கைது... 

Published on 19/05/2020 | Edited on 19/05/2020

 

cuddalore district


கடலூர் மாவட்டம் சிறுபாக்கத்தில் டாஸ்மாக் கடை ஒன்று இயங்கி வருகிறது. மதுப் பிரியர்களுக்கு டோக்கன் முறையில் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. வியாபாரம் படு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வேகாத வெயிலிலும் குடை பிடித்தும் தலையில் துண்டை போட்டுக்கொண்டு ஆங்காங்கே தனிமைப்படுத்துவதற்காக போட்டுள்ள வட்டத்துக்குள் அமர்ந்துகொண்டு எப்போது கூப்பிடுவார்கள் என்று காத்திருந்து காத்திருந்து மதுப் பிரியர்கள் மதுபாட்டில்களை வாங்கிச் செல்கிறார்கள்.
 


சிறுபாக்கம் டாஸ்மாக் கடையில் விளாங்காட்டூரைச் சேர்ந்த கொளஞ்சிநாதன் என்பவர் கண்காணிப்பாளராக வேலை செய்து வருகிறார். கடந்த 16 ஆம் தேதி மாலை 5 மணி அளவில் அரசு உத்தரவுப்படி டாஸ்மார்க் கடை விற்பனை முடிந்து கடை மூடப்பட்டது. கடையை மூடும் பணியை விற்பனையாளர், கண்காணிப்பாளர் ஆகியோர் செய்துகொண்டிருந்தனர். ஐந்து முப்பது மணி அளவில் டூவீலரில் வேகவேகமாக அரக்கப் பறக்க வந்த இருவர் கண்காணிப்பாளரிடம் மதுபாட்டில்கள் கேட்டுத் தகராறு செய்துள்ளனர்.
 

அப்போது அங்குப் பாதுகாப்பு பணியில் இருந்த சிறுப்பாக்கம் போலீஸ்காரர் ராஜ் என்பவர், விற்பனை நேரம் முடிந்துவிட்டது. இனிமேல் நாளைக்கு வாருங்கள் என்று கூறியுள்ளார். இதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த இருவரும், அங்கிருந்த மோட்டார் பைக்கை உதைத்து சேதப்படுத்தியதோடு கையில் வைத்திருந்த டூவீலர் சாவியால் போலீஸ்காரர் கையில் குத்திக் கிழித்துள்ளனர்.
 


இருவரும் டாஸ்மாக் கடை முன்பு போலீஸ்காரரிடம் ரகளையில் ஈடுபட்ட தகவல் வேப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதாவுக்குத் தெரிவிக்கப்பட்டது. அவர் சக போலீசாருடன் விரைந்து ஸ்பாட்டுக்கு வந்தார். டாஸ்மார்க் கடை முன்பு போலீஸ்காரரிடம் வன்முறையில் ஈடுபட்ட அந்த இருவரையும் பிடித்து விசாரித்ததில் புதூரைச் சேர்ந்த 29 வயது அருண்குமார், அவரது நண்பர் 32 வயது மணிவேல் என தெரிய வந்தது.
 

இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரில் அருள்குமார் என்பவர் வழக்கறிஞர் படிப்பு முடித்து நீதிமன்றத்தில் பயிற்சி வழக்கறிஞராகச் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் கைது செய்யப்பட்ட தகவல் சிறுபாக்கம் கிராமத்தினர் மத்தியில் பரவியது. 'எல்லாம் போதை படுத்தும் பாடு' என்கிறார்கள் சிறுபாக்கம் கிராம மக்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.