Skip to main content

கூடுதல் விலைக்கு விற்கும் டாஸ்மாக்!-கொடைக்கானல் குமுறல்!

Published on 07/07/2022 | Edited on 07/07/2022

 

TT

 

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள், தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் வேலையை நன்றாகவே பார்க்கின்றன. எப்படி தெரியுமா? திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு பிரகாரம், மலைப்பிரதேசமான கொடைக்கானலில் மதுபாட்டில்களைத் திரும்பப்பெறும் நடைமுறை,  கடந்த ஜூன் 15-ஆம் தேதி முதல் அமுலுக்கு வந்துள்ளது. அதன்படி, மது வாங்குவோர் டாஸ்மாக்கில் அரசு நிர்ணயித்த விலையைக் காட்டிலும் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாகத் தந்து, பின்னர் காலி பாட்டிலைத் திரும்ப ஒப்படைத்து, அந்த 10 ரூபாயைத் திரும்பப் பெற்றுக்கொள்ளவேண்டும்.  

 

இது நடைமுறைக்கு ஒத்துவராத விஷயம் எனக் குடிமகன்கள் ஏன் குமுறுகின்றனர்?

 

 Tasmac selling at an additional price!

 

அரசு நிர்ணயித்த ஒரு குவாட்டர் ரம் விலை குறைந்தபட்சம் ரூ.130 ஆகும். தமிழ்நாடு முழுவதும் ரூ.5 கூடுதலாக வைத்து ரூ.135-க்கு விற்கின்றனர். கொடைக்கானல் மலைப்பிரதேசம் என்பதால், இன்னும் கூடுதலாக ரூ.5 விலைவைத்து  குவாட்டர் ரம் ரூ.140-க்கு விற்றனர். மாவட்ட ஆட்சியரின் அறிவிப்புக்குப் பிறகு ரம் குவாட்டர் விலை ரூ.150-ஆக எகிறிவிட்டது. மது குடித்துவிட்டு ஸ்டிக்கர் ஒட்டிய பாட்டிலை ஒப்படைத்தால் மட்டுமே ரூ.10 திரும்பக் கிடைக்கும்.

 

சுற்றுலாப் பயணிகளில் அநேகம்பேர், டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் வாங்கிக்கொண்டு, விடுதி அறைகளிலோ, வேறு எங்கோ வைத்துத்தான் குடிக்கின்றனர். உள்ளூர்வாசிகளும்கூட, மது பாட்டில்களை வாங்கி வீட்டுக்குப் போய்த்தான் குடிக்கின்றனர். ஒரு பாட்டிலுக்கு ரூ.10 திரும்பக் கிடைக்கும் என்பதற்காக, அந்த பாட்டிலை எடுத்துக்கொண்டு சுற்றுலாப் பயணிகளோ, உள்ளூர்வாசிகளோ திரும்பவும் அதே டாஸ்மாக் கடைக்குப் போவார்களா? ஆக, ஒவ்வொரு மது பாட்டிலுக்கும் அரசு நிர்ணயித்த விலையைக் காட்டிலும் கூடுதலாக ரூ.20-ஐ  கொடைக்கானலில் மதுப்பிரியர்கள் தந்தாக வேண்டியதிருக்கிறது.

 

‘இது அநியாயமல்லவா?’ என்று மதுப்பிரியர்கள் டாஸ்மாக் கடைகளில் வாதிடும்போது “கட்டிங் கொடுக்கணும். போலீஸ் வந்தால் சரக்கு கொடுக்கணும். நாங்க எத்தனை பேரைத்தான் சமாளிக்கமுடியும்? தமிழகத்தில் இரவு நேரத்தில் போலீஸ் ஏட்டையா வந்து மாமூல் வாங்காத டாஸ்மாக் கடை உண்டா? பார் உண்டா?” எனத் தங்கள் பங்கிற்குப் புலம்பித் தள்ளுகிறார்கள்.  

 

மது சம்பந்தப்பட்ட விஷயம் என்பதாலோ என்னவோ, அனைத்துத் தரப்பிடமிருந்தும் புலம்பல் சத்தம் கேட்கிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

3 நாள்கள் விடுமுறை; மதுக்கடைகளில் குவிந்த மதுப்பிரியர்கள்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Drinkers gathered in bars for holiday due to election

மக்களவைத் தேர்தலையொட்டி 3 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டதையொட்டி செவ்வாய்க்கிழமை (16-04-24) இரவு மதுக்கடையில் மதுப்பிரியர்களின் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.

மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் ஏப்ரல் 17, 18, 19 ஆகிய 3 நாட்கள் அரசு (டாஸ்மாக்) மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி டாஸ்மாக் கடையுடன் இணைந்து செயல்படும் மதுக்கூடங்கள், ஏப்ரல் 2 முதல் எப்ரல் 11 வரை (ஏப்ரல் 6 நீங்கலாக) அனைத்து மதுக்கூடங்களும் மூடப்படும். இந்த 3 நாள்களில் மதுபானங்களை விற்பனை செய்தாலோ அல்லது வேறு இடங்களுக்கு மதுபாட்டில்களை கொண்டு சென்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று (16-04-24) இரவுடன் மதுக்கடைகள் 3 நாள்களுக்கு மூடப்படும் என்பதால், திருச்சியில் மதுப்பிரியர்கள் தங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் குவிந்தனர். ஏராளமானோர் கடைகளை முற்றுகையிட்டு 3 நாள்களுக்குத் தேவையான மதுவகைகளை வாங்கிச்சென்றனர். இதனால் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

Next Story

மக்களவைத் தேர்தல்; மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Lok Sabha elections; Orders to close liquor shops!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

அதில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில், மக்களவைத் தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளை மூட டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து டாஸ்மாக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. 

இந்த நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி ஏப்ரல் 17,18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்த சுற்றறிக்கை, அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4ஆம் தேதியும் மதுக்கடைகளை மூட டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.