Skip to main content

டாஸ்மாக் ஊழியரின் கண்களில் மிளகாய் பொடி தூவி 2 லட்சம் பணம் கொள்ளை!

Published on 18/08/2022 | Edited on 18/08/2022

 

Tasmac employee was robbed of 2 lakhs by sprinkling chilli powder in his eyes!

 

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே பட்டிவீரன்பட்டி அரசு டாஸ்மார்க் கடையில் மேற்பார்வையாளராகப் பணிபுரியும் முருகன், சித்தூர் டாஸ்மாக் கடையில் பணிபுரியும் அழகுமணி ஆகிய இருவரும் தங்கள் கடைகளில் மது விற்பனைப் பணத்தை எடுத்துக் கொண்டு ஒரு இருசக்கர வாகனத்தில் வத்தலக்குண்டு வங்கி நோக்கி வந்துள்ளனர்.

 

இவர்கள் இருவரும் எம்.வாடிப்பட்டி குறுக்கு சாலையில் வந்துக் கொண்டிருந்த போது, பின்னால் இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்த இரண்டு இளைஞர்கள், டாஸ்மார்க் மேற்பார்வையாளர்கள், சென்ற வாகனத்தின் மீது மோதியுள்ளனர். மோதிய வேகத்தில் அந்த இளைஞர்கள், வந்த வாகனம் நிலைத் தடுமாறியதில் இளைஞர் இருவரும் கீழே விழுந்தனர். அதனைப் பார்த்த மேற்பார்வையாளர்கள் இருவரும் இளைஞர்களைத் தூக்க முற்பட்ட போது கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த இளைஞர்கள் முருகன் கண்ணில் மிளகாய்ப்பொடியை தூவி விட்டு, அவர் கையில் வைத்திருந்த ரூபாய் 2 லட்சம் பணத்தைப் பறித்தனர்.

 

அழகுமணி ஓடிவந்த போது, கத்தியைக் காட்டி மிரட்டி விட்டு, பணத்தை எடுத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பினர். இச்சம்பவத்தில், மேற்பார்வையாளர் அழகுமணி கொண்டு வந்த ரூபாய் 2.50 லட்சம் பணம் பெட்டியில் இருந்ததால், அவை கொள்ளையர்களுக்கு தெரியாமல் தப்பியது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக, டாஸ்மார்க் மேற்பார்வையாளர் முருகன், பட்டி வீரன்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

 

சம்பவ இடத்திற்கு வந்த நிலக்கோட்டை டி.எஸ்.பி. முருகன் செய்த விசாரணையில் மேற்பார்வையாளர் முருகன் தனது உள்ளாடையில் ரூபாய் 25 ஆயிரம் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. கொள்ளை சம்பவம் நடந்தது தொடர்பாகவும், முருகன் உள்ளாடைக்குள் பணத்தை மறைத்து வைத்திருந்தது தொடர்பாகவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

இதனிடையே பணம் கொள்ளை போனது குறித்து முருகன், மாவட்ட டாஸ்மார்க் நிறுவனத்திற்கு தகவல் கொடுத்தார். ஆனால் டாஸ்மார்க் நிறுவனமோ, கொள்ளை போனதாக சொல்லப்படுகிற டாஸ்மாக் பணத்தை பேங்கில் கட்டிவிட்டு வேலையைக் காப்பாத்திக்கோ. அப்புறம் விசாரணையைப் பாத்துக்கலாம் என்று பதில் வர, பணத்தைப் புரட்ட காவல்நிலையத்தில் இருந்து ஓடினார் முருகன். உதவிக்கு வந்த சூப்பர்வைசர்கள் விக்கித்து போய் நின்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடித்துவிட்டு அடிக்கடி தகராறு; தந்தையைக் கொன்ற 15 வயது சிறுவன்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
incident in thoothukudi; police investigation

கன்னியாகுமரியில் பேரனின் மதுப்பழக்கத்தைத் தட்டிக்கேட்ட பாட்டி, தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதேபோல் மது போதையில் தாயை அடித்து துன்புறுத்தி வந்த தந்தையை 15 வயது மகனே கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் மேலும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் செல்சீனி காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் சக்தி-அனுசியா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவர் சக்தி சமையல் செய்யும் வேலை செய்து வருகிறார்.  குடிப்பழக்கத்திற்கு அடிமையான சக்தி மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவி அனுசியாவை துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில்  நேற்று இரவு வணக்கம் போல மது அருந்திவிட்டு வந்த சக்தி, மனைவி அனுசியாவை அடித்து காயப்படுத்தியுள்ளார்.

தந்தையின் இந்தச் செயலால் மன உளைச்சலில் இருந்த மூத்த மகனான 15 வயது சிறுவன், ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தந்தை சக்தி மீது சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சக்தி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

குடிப்பழக்கத்தை தட்டிக்கேட்ட பாட்டியை கொன்ற பேரன்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Grandson attack grandmother for drunkenness

குடிப்பழக்கத்தை கண்டித்த பாட்டியை பேரனே கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ளது சாரூர். இந்த பகுதியில் வசித்து வந்தவர் தாசம்மாள் (80). இவருடைய மகன் புஷ்பராஜ் என்பவருக்கு அஜித் மகன் இருக்கிறார். அவருக்கு வயது 23.

குடும்ப பிரச்சனை காரணமாக புஷ்பராஜின் மனைவியை பிரிந்து சென்று விட்டார். இதனால் புஷ்பராஜூம் அவருடைய மகன் அஜித்தும் தாசம்மாளுடன் வசித்து வந்தனர். அண்மையில் உடல்நிலை சரியில்லாமல் புஷ்பரஜ் இறந்து விட்டார் .

அதன் பிறகு பாட்டியுடன் அஜித் மட்டும் வசித்து வந்தார். அந்த பகுதியில் பெயிண்டிங் வேலைகளுக்கு சென்று வந்த அஜித் குடிப்பழக்கத்திற்கு நாளடைவில் அடிமையாகி விட்டார். இந்நிலையில் பாட்டி  தாசம்மாள் பெயரில் உள்ள 15 சென்ட் நிலத்தை தன்னுடைய பெயருக்கு எழுதி வைக்கும்படி அஜித் மது அருந்திவிட்டு ரகளை செய்து வந்துள்ளார்.

வழக்கம்போல் நேற்று இரவு 11 மணிக்கு மது குடித்துவிட்டு வந்த அஜித் பாட்டி தாசதாசம்மாளிடம் இது தொடர்பாக சண்டை போட்டுள்ளார். அப்பொழுது பாட்டி தட்டி கேட்டுள்ளார். மதுபோதையில் இருந்த அஜித் தாசம்மாளை கீழே தள்ள, சுவரில் தலை மோதி சம்பவ இடத்திலேயே தாசம்மாள் உயிரிழந்தார். தான் தாக்கியதால் பாட்டி இறந்ததை அறிந்துகொண்ட அஜித் பயத்தில் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.