Skip to main content

டார்கெட் வேலுமணி! சிக்கிய ஆவணங்களால் சிக்கலில் எடப்பாடி! 

Published on 28/03/2022 | Edited on 28/03/2022

 

Target Velumani! Edappadi Get in trouble with complicated documents!

 

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு, அலுவலகம் மற்றும் அவரின் உறவினர்கள், உதவியாளர்கள் வீடு என லஞ்ச ஒழிப்புத்துறையினர் இரண்டு முறை சோதனையிட்டுள்ளனர். இந்நிலையில் எஸ்.பி.வேலுமணி தொடர்பான ரெய்டு குறித்து விவரம் அறிந்தவர்களிடம் கேட்டப்போது அதிச்சியான பல தகவல்கள் கிடைத்தன. 

 

முதல்முறையாக கடந்த ஆகஸ்ட்டில் வேலுமணி தொடர்பான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ரெய்டு நடத்தியபோது, அவருக்கு முன்கூட்டியே தகவல் கிடைத்துவிட்டது. அதனால் உஷாரான வேலுமணி, மறைக்க வேண்டிய ஆவணங்களை எல்லாம், ஒரு வாகனத்தில் ஏற்றி, அதை எங்கும் நிறுத்தாமல் சுற்றிக்கிட்டே இருக்கச் செய்ததால், ரெய்டுக்குப் போன டீம், பெரிதாக எதையும் கைப்பற்றலை. உடனே, என்னிடம் எதுவும் இல்லை. வேண்டுமென்றே பழிவாங்க இந்த ரெய்டு நடத்தப்பட்டதுன்னு வேலுமணி எகிறிக் குதித்தார். ஆனால் இந்த முறை, அதாவது கடந்த 16-ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி. பவானீஸ்வரி, ரொம்பவும் சீக்ரெட்டா இந்த ரெய்டு ஆபரேசனைக் கையாண்டார்.

 

Target Velumani! Edappadi Get in trouble with complicated documents!

 

இதில், வேலுமணியின் நட்பு வட்டத்தில் இருந்தாலும், சந்தேகப் பட்டியலில் இல்லாத கோவையைச் சேர்ந்த அவரது உதவியாளர் சந்தோஷ் மற்றும் அவர் தொடர்பில் இருக்கும் வழக்கறிஞர் நவீன் ஆகியோரின் வீடுகளுக்குள் ரெய்டு டீம் அதிரடியாகப் புகுந்தது. அங்கேதான் ஆவணப் புதையல்கள் கட்டுக்கட்டாக கிடைத்தன. அவற்றைப் பார்த்த அதிகாரிகளே அதிர்ச்சியில் வாயைப் பிளந்திருக்கிறார்கள்.

 

காரணம், கிடைத்த ஆவணங்கள் அரசியலையே புரட்டிப் போடக்கூடிய அளவுக்கு முக்கியமானவை. வேலுமணி தொடர்பான சொத்து ஆவணங்களை மட்டும் தேடிப்போன ரெய்டு டீமிற்கு, புதிய புதிய ஆவணங்கள் லட்டு லட்டா கிடைத்திருக்கு. குறிப்பாக, முன்னாள் முதல்வர் எடப்பாடி தொடர்பான பல ஆவணங்கள் அதில் இருந்திருக்கு. அதேபோல் கொடநாட்டில் கொள்ளையடிக்கப்பட்ட ஆவணங்களும் அங்கே இருந்திருக்கு. இதுதவிர ஈஷா மைய ஜக்கி வாசுதேவ் தொடர்பான அரிய ஆவணங்களும் கிடைத்திருக்கு. அந்த ஆவணங்களின்படி, நித்தியானந்தா பாணியில் மாலத்தீவு அருகே ஜக்கியும் ஒரு தீவை வாங்கியிருப்பதாக தெரிகிறது. 

 

இதெல்லாம் பிடிபட்டதால் ஷாக்கான வேலுமணி மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர், இந்த விவகாரத்தில் இருந்து தப்பிக்க மத்திய மண்டலத்தைச் சேர்ந்த ஒரு அமைச்சரின் சகோதரர் மூலமும், தென் மாவட்ட அமைச்சர் ஒருவர் மூலமும் ஆட்சித் தலைமையிடம் தூதுவிட்டிருப்பதாக பேசப்படுகிறது. ஆனால், அவர்களுக்கு சாதகமான சிக்னல் கிடைக்காததால் அவர்களின் பதட்டம் தொடருகிறது என்கிறார்கள்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எடப்பாடி பழனிசாமி மீது தயாநிதிமாறன் அவதூறு வழக்கு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Dayanithimaran defamation case against Edappadi Palaniswami

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதற்கிடையே நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “மத்திய சென்னை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தயாநிதி மாறன், அவருடைய நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் 75 சதவீதத்தை செலவு செய்யவே இல்லை. அப்படியென்றால், இவர் எப்படி செயல்பட்டிருப்பார் என்பதை மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்” எனப் பேசி இருந்தார்.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் எம்.பி. சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், “தொகுதி மேம்பாட்டு நிதியை 75% பயன்படுத்தவில்லை என சென்னை புரசைவாக்கத்தில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சு தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு விசாரணை அடுத்த மாதம் 14 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. 

Dayanithimaran defamation case against Edappadi Palaniswami

இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த தயாநிதிமாறன், “என் பெயருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசிய எடப்பாடி பழனிசாமி 24 மணி நேரத்தில் மன்னிப்பு கோர கால அவகாசம் வழங்கி இருந்தேன். இருப்பினும் அவர் மன்னிப்பு கோரவில்லை. ஆகையால் நீதிமன்றத்தில் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளேன். இதுவரை 95 சதவீத நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியைப் பயன்படுத்தியுள்ளேன்”எனத் தெரிவித்தார். 

- படங்கள் : எஸ்.பி. சுந்தர்

Next Story

இறுதிக்கட்ட பரப்புரை; சேலத்தில் எடப்பாடி 'ரோட் ஷோ'

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
 Final campaign; Edappadi 'Road Show' in Salem

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. இதற்கிடையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தஙளது வேட்பாளர்களை அறிவித்து தீவிரப் பிரச்சாரங்கஙளை நடத்தி வருகின்றனர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. இன்னும் ஒரு மணி நேரத்தில் தேர்தல் பரப்புரை முடிவடைய இருக்கின்ற நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர பரப்புரையில் இறங்கியுள்ளது. இந்நிலையில் சேலத்தில் எடப்பாடி பழனிசாமி 'ரோட் ஷோ' என்னும் வாகன பேரணியைத் தொடங்கியுள்ளார். சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் தொடங்கி சேலம் டவுன் வரை இந்த ரோட் ஷோ நடைபெறுகிறது. திறந்தவெளி வாகனத்தில் கை அசைத்தபடி வேட்பாளருடன் எடப்பாடி பழனிசாமி வாகன பேரணி நடத்தி வருகிறார். அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் இருந்து வின்சென்ட், திருவள்ளுவர் சிலை, முதல் அக்ரகாரம், சின்ன கடைவீதி, கடைவீதி உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் சென்று இறுதியாகக் கோட்டை மாரியம்மன் கோவில் பகுதியில் பிரச்சாரத்தை நிறைவு செய்ய இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.