Skip to main content

மழையில் இடிந்த அம்மன்கோயில்... முதல் ஆளாக சென்று புனரமைப்புக்கு வித்திட்ட தமிமுன் அன்சாரி!

Published on 06/12/2020 | Edited on 06/12/2020

 

மழையில் அம்மன் கோயில் இடிந்து விழுந்ததும் முதல் ஆளாக சென்று பார்த்ததோடு, அங்கிருந்தபடியே இந்து சமய அறநிலையதுறை அமைச்சரை தொடர்பு கொண்டு புனரமைப்பு செய்ய கோரிய தமிமுன் அன்சாரிக்கு பாராட்டுக்கள் குவியத் துவங்கியுள்ளன.

 

கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் இடைவிடாமல் பெய்து வரும் கனமழையால் ஆறுகளும், வாய்க்கால்களும் உடைந்து வெள்ள நீர் புகுந்தது பொதுமக்களை பாழ்படுத்துகிறது. வீடுகளும், கட்டிடங்களும் ஆங்காங்கே இடிந்து விழுந்து சேதத்தை உண்டாக்கியிருக்கிறது.

 

இந்த நிலையில் நாகை மாவட்டத்தின் கடலோரப் பகுதியான வேதாரண்யத்தை அடுத்துள்ள தோப்புத்துறையில் பிரசித்திப் பெற்ற அம்மன்கோயில் உள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அம்மன் கோயில் இடிந்து விழுந்தது. இதை கேள்விப்பட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், நாகை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான தமிமுன் அன்சாரி நேரில் சென்று ஆய்வு செய்தார்.

 

பின்பு அந்த கிராமத்தின் இளைஞர் நற்பணி மன்றத்தினரை அழைத்து கோயிலின் பாரம்பரியம் குறித்து தனக்கு தெரிந்ததை விளக்கியதோடு, அவர்களிடமும் கேட்டறிந்தார். அதைத் தொடர்ந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனை தொடர்பு கொண்டு. தோப்புத்துறை எனது சொந்த ஊர், அதோடு இந்துக்களும் முஸ்லீம்களும் இரண்டரை நகமும் சதையுமாக கலந்து வாழக்கூடிய ஊர். எங்கள் ஊரில் உள்ள இந்து முஸ்லீம் ஒற்றுமையை கண்டு பல அரசியல் வல்லுனர்களும், சமய வழிபாட்டாளர்களும் பாராட்டியிருக்கின்றனர். இங்குள்ள பிரசித்திப் பெற்ற அம்மன் கோயில் மழையில் இடிந்து விழுந்து விட்டது. அதனை உடனே சரி செய்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என கோரிக்கை வைத்தார்.

 

இதைக் கேட்டதும் நெகிழ்ந்து போன அமைச்சர், மழை விட்டதும் உடனே அதிகாரிகளை அனுப்பி புனரமைப்பு வேலைகளை செய்வதாக உத்தரவாதம் கொடுத்திருக்கிறார். எம்.எல்.ஏ.வின் செயலை கண்டு அங்கு கூடியிருந்த  இந்து சமுதாய மக்களும், பா.ஜ.க.வை சேர்ந்த சிலரும் மனம் உருகி வாழ்த்துக் கூறினர்.

 

"தான் அனைத்து சமூகத்துக்குமானவன்  என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் தமிமுன் அன்சாரி" இது போன்ற நிகழ்வுகள் நடக்கும் வரை எத்தனை பிரிவினைவாதிகள் வந்தாலும் தமிழகத்தை யாராலும் ஒன்றும் செய்துவிடமுடியாது " என்கிறார் வேதாரண்யத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வருவது அவசியம்' - தமிமுன் அன்சாரி பேட்டி

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
'It is necessary for the India coalition to come to power' - Tamimun Ansari interview

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தமிமுன் அன்சாரி திமுக கூட்டணிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். முன்னதாக அவர் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், இன்று அண்ணா அறிவாலயத்திற்கு வந்து முதல்வரை சந்தித்து விட்டு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிமுன் அன்சாரி பேசுகையில், ''இந்த தேர்தலை பொறுத்தவரை மனிதனை ஜனநாயக கட்சி வெறும் அரசியல் காளமாக இதனைப் பார்க்கவில்லை.

மாறாக ஜனநாயகத்திற்கும் பாசிசத்திற்கும் இடையேயுமான சித்தாந்த போராட்டமாக பார்க்கிறது. அந்த அடிப்படையில் இந்த முடிவை மனிதநேய ஜனநாயக கட்சி எடுத்திருக்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து எங்களுடைய ஆதரவை வழங்கி இருக்கிறோம். இந்தியாவுடைய ஜனநாயகம், பன்முக கலாச்சாரம், அரசியல் சாசன சட்டத்துடைய மாண்புகள், சமூக நல்லிணக்கம் ஆகியவை காப்பாற்றப்பட வேண்டும் என்றால் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வருவது அவசியமாகிறது' என்றார்.

Next Story

தமிழகத்தில் பரவும் வதந்தி; காவல்துறை எச்சரிக்கை!

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
The spread in Tamil Nadu; Police alert

தமிழகத்தில் குழந்தைகளை கடத்துவதற்காக வட மாநிலங்களில் இருந்து கும்பல்கள் கிளம்பி உள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல்களை அடுத்து தமிழகத்தின் பல பகுதிகளில் ஆங்காங்கே வடமாநிலத்தவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

அண்மையில் சென்னையில் ஐடி துறையில் பணியாற்றும் திருநங்கை ஒருவர் இரவில் உணவகத்தில் சாப்பிட்டு விட்டு வரும் பொழுது அவரின் வினோத தோற்றத்தால் குழந்தை கடத்த வந்த நபர் என பிடித்த சிலர், அவரை அரை நிர்வாணமாக மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய காட்சிகள் வைரலாகி இருந்தது.

அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த ராந்தம் சோதனை சாவடி பகுதியில் வடமாநில இளைஞர் ஒருவர் குழந்தையைக் கடத்த முயன்றதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியானது. இதையடுத்து அந்த பகுதி மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சிக்கிய இளைஞரை தாக்கினர். அதன் பின்னர் அங்கு வந்த போலீசார் அந்த இளைஞரை அங்கிருந்து கூட்டிச் சென்றனர். அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

nn

அதனைத் தொடர்ந்து நேற்று திண்டுக்கல் மாவட்டம் கொம்பேறிப்பட்டியில் குழந்தை கடத்த வந்தவர் என இளைஞர் ஒருவரை அப்பகுதி மக்கள் அடித்து தாக்கினர். அங்கு வந்த போலீசார் அந்த இளைஞரை மீட்டு 108 வாகனத்தில் அழைத்துச் செல்ல முயன்றனர். ஆனால் அதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வந்த ஆம்புலன்ஸ் வாகனம் கொண்டு செல்லப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பிடிபட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவரை போல உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

nn

இந்நிலையில் நாகை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் குழந்தைகளை கடத்த வட மாநில கும்பல் வந்துள்ளதாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தகவல்களை பரப்பிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது போன்று சமூக வலைத்தளங்களில் குழந்தை கடத்தல் தொடர்பாக வரும் செய்திகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.