
அ.தி.மு.க.வைச் சேர்ந்த திருப்பத்தூர்மாவட்டச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணி வீடு மற்றும் அவருக்குநெருக்கமானவர்களுக்குச்சொந்தமான வீடுகள், அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள்எனத்தமிழ்நாடு, கர்நாடகாவில் 35 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் செப்டம்பர் 16- ஆம் தேதி காலை முதல் மாலை 06.00 மணி வரை அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனை முடிவுக்கு வந்துள்ள நிலையில் அதில், இந்தரெய்டில்கணக்கில் வராத 36 லட்சத்து ஆயிரத்து 60ரூபாயும், அமெரிக்க டாலர்கள் 1.80 லட்சம்,ரோல்ஸ்ராய்ஸ்உட்பட 9 ஆடம்பரகார்களும், 4 கிலோ 987 கிராம் தங்கமும், 47 கிராம்வைரமும், 7.2 கிலோ வெள்ளி, சொத்து ஆவணங்கள் போன்றவற்றைக் கைப்பற்றப்பட்டது.
கே.சி.வீரமணி வருமானத்திற்குஅதிகமாகச்சொத்து சேர்த்ததாகவழக்குபதிவு செய்யப்பட்டுள்ள நிலையில்,ஜோலார்பேட்டையில்உள்ள கே.சி.வீரமணியின்இல்லத்திற்குப்பின்புறம் காலி பகுதியில் சுமார் 275யூனிட்மணல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கான உரிய ஆவணங்கள் தற்போதைக்கு இல்லை என்றும் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 275யூனிட்மணல் தொடர்பாககனிமவளத்துத்துறைக்குத்தகவல் கொடுக்கப்பட்டு புகார் அளிக்கப்பட்டது.அந்த புகாரின் அடிப்படையில் நேற்றுஜோலார்பேட்டையில்உள்ள கே.சி.வீரமணியின்வீட்டுக்குச்சென்ற வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கனிமவளத் துறை அதிகாரிகள், வீட்டின்பின்புறமாகக்குவிக்கப்பட்டிருந்த மணலை ஆய்வு செய்தனர். ஆனால் அதில் லஞ்ச ஒழிப்புத்துறை குறிப்பிட்டஅளவைவிடக்கூடுதலாக மொத்தம் 550 ஒருயூனிட்மணல் உள்ளது தெரியவந்தது. உயரமான அளவில் மணலை கொட்டாமல்தட்டையாகப்பரப்பி வைக்கப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது. கே.சி.வீரமணியின்வீட்டுப்பகுதியில் கொட்டி வைக்கப்பட்டுள்ள மணலின் சந்தை மதிப்பு 33 லட்சம் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உரியபில்இல்லாத பட்சத்தில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு சட்டவிரோத மணல் பதுக்கல் பிரிவில்வழக்குப்பதிவு செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)