Skip to main content

வீரப்பன் வேட்டையில் சப்-இன்ஸ்பெக்டரான 62 பேர் பதவி உயர்வு கோரி வழக்கு!

Published on 26/06/2020 | Edited on 26/06/2020
highcourt

 

தமிழகம் முழுவதும் பணியாற்றிவரும் 62 சப்-இன்ஸ்பெக்டர்கள், அடுத்தகட்டமாக, இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.  தற்போது தயாரித்துள்ள பதவிப் பட்டியலை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி உள்ளனர்.

வேலூர், திருச்சி, கோயம்புத்தூர், சென்னை, கடலூர், விழுப்புரம் உள்பட  பல இடங்களில் இருந்து, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக 62 பேர் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் சார்பாக வழக்கறிஞர்  பாலடெய்சி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 

அந்த வழக்கில், அவர்கள் கூறியிருப்பதாவது, “தமிழகம் முழுவதும், நாங்கள் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வருகிறோம். வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட எங்களுக்கு அரசு  பதவி உயர்வு வழங்கியது. கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் 2005-ஆம் ஆண்டு வரை, சப் இன்ஸ்பெக்டர் பதவி பெற்றோம். தற்போது, சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறோம். அடுத்தகட்டமாக, எங்களுக்கு இன்ஸ்பெக்டராக பதவி வழங்க வேண்டும்.  தமிழக அரசு, எங்களுக்கு பதவி வழங்காமல், கடந்த 2008-ஆம் ஆண்டு சப்-இன்ஸ்பெக்டர் ஆனவர்களுக்கு பதவி உயர்வு வழங்க ஒரு பட்டியல் தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியல் சட்டவிரோதமானது.

கடந்த 2004-ஆம் ஆண்டு பதவி பெற்ற எங்களுக்கு பதவி உயர்வு கொடுத்து விட்டுத்தான், மற்றவர்களுக்கு  பதவி வழங்க வேண்டும்.  இதனால்,  நாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம். எங்களுக்குப் பின்னே வந்த இவர்களுக்கு பதவி வழங்கினால், எங்களுக்கு பதிப்பாகிவிடும். எனவே,  தற்போது தயாரித்துள்ள அந்தப் பட்டியலை ரத்து செய்ய வேண்டும். அதற்குத் தடை விதிக்க வேண்டும். எங்கள் 62 பேருக்கு பதவிகள் வழங்கி விட்டுத்தான் மற்றவர்களுக்கு பதவி வழங்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளனர். இந்த வழக்கு, நீதிபதி மகாதேவன் முன்பாக வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.