Skip to main content

போட்டியில் கலந்துகொள்ள முடியாமல் போன தமிழ்நாடு மாணவர்கள்; அமைச்சர் விளக்கம்  

Published on 10/06/2023 | Edited on 10/06/2023

 

Tamilnadu students who could not participate in the competition; Minister's explanation

 

தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழக மாணவர்கள் கலந்து கொள்ளாததை அடுத்து அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

 

அகில இந்திய பள்ளிக் குழுமம் சார்பில் நடத்தப்படும் தேசிய விளையாட்டுப் போட்டி ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் நடைபெறும். அதே போல், இந்த ஆண்டும் டெல்லியில் கடந்த ஜூன் 6 ஆம் தேதி துவங்கியுள்ள தேசிய விளையாட்டுப் போட்டி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டிகள் வரும் 12 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தேசிய விளையாட்டுப் போட்டியில் தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களும் கலந்து கொள்வர். ஆனால், இந்த  ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் போட்டியில் கலந்துகொள்ளவில்லை. இது சர்ச்சையான நிலையில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்து அது குறித்துப் பேசினார். 

 

அதில் அவர் பேசியதாவது, “கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளில் இந்த விளையாட்டு போட்டிகள் நடைபெறவில்லை. அந்த நேரத்தில் அரசுத் துறை அதிகாரிகள் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் பங்கேற்று இருந்தார்கள். அதனால் இந்த ஆண்டில் நடைபெறவிருந்த விளையாட்டு போட்டிகளில் அரசு அதிகாரிகளின் தகவல் பரிமாற்றத்தின் ஏற்பட்ட குழப்பத்தினால் தான் தமிழக மாணவர்கள் கலந்துகொள்ள இயலாமல் போனது. இதற்கு தமிழக அரசு, அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இதுபோன்ற தவறுகள் இனிமேல் நடக்காமல் பார்த்துக் கொள்வோம்" என்று தெரிவித்தார். 

 

இது பற்றி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது, "பள்ளி மாணவர்கள் மே மாதத்தில் தங்களது தேர்வுகளை முடித்துவிட்டு அவரவர் ஊருக்கு சென்றதால் இந்த போட்டியை ஏற்பாடு செய்வதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், நம்முடைய கவனத்திற்கு சுற்றறிக்கை வந்ததும் அதை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிப்பது தான் கடமை. ஆனால் அதில் தவறு நடந்துள்ளது. அதனால் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

அமைச்சர் உதயநிதி பிறந்தநாள்; எம்எல்ஏ தலைமையில் ரத்த தானம்!

Published on 30/11/2023 | Edited on 30/11/2023

 

Blood donation lead by MLA or Minister Udhayanidhi  birthday in Cuddalore

 

கடலூரில் திமுக இளைஞரணி செயலாளரும் தமிழ்நாடு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா திமுக சார்பில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ. ஐயப்பன் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். 

 

முன்னாள் மாவட்ட பொருளாளர் வி.எஸ்.எல். குணசேகரன், அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் அசோக் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  முகாமில் இளைஞர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர். இதில் கூட்டுறவு சங்கத் தலைவர் ஆதி பெருமாள், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், மாநகராட்சி கவுன்சிலர்கள் கீதா குணசேகரன், கர்ணன், சரத் தினகரன், மகேஸ்வரி, விஜயகுமார், பாருக் அலி, கீர்த்தனா, ஆறுமுகம், ராதிகா, பிரேம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மருத்துவர் பிரவீன் ஐயப்பன் செய்திருந்தார்.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

''எனக்கு விருப்பம் இல்லை'' - மறுத்த அமைச்சர் உதயநிதி

Published on 27/11/2023 | Edited on 27/11/2023

 

 "I have no choice" - Minister Udayanidhi refused

 

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினின் 46 வது பிறந்தநாள் திமுகவினர் மத்தியில் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது ‘குடியரசுத் தலைவர், ஆளுநர் அதிகாரங்கள்’ என்ற புத்தகத்தை முதல்வருக்கு வழங்கினார்.

 

தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அமைச்சர்கள் பொன்முடி, சேகர்பாபு, சி.வி.சண்முகம், தா.மோ. அன்பரசன் உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர். இதனையடுத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்தநாளை முன்னிட்டு பெரியார் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செய்தார்.

 

இந்நிலையில் காரில் ஏறிய உதயநிதியை சூழ்ந்துகொண்ட செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 'முதலில் நடிகர், பின்னர் எம்.எல்.ஏ இப்போது அமைச்சராக இருக்கீங்க இந்த பிறந்தநாளை எப்படி பாக்குறீங்க?' என்ற கேள்விக்கு, ''எல்லா பிறந்தநாளை போன்றுதான் இந்த பிறந்தநாளும். இந்த பிறந்த நாளில் கொஞ்சம் கூடுதல் பொறுப்பு. காலையில் இருந்து தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சமூகநீதி காவலர் வி.பி.சிங் சிலையை முதல்வர் திறந்து வைத்துள்ளார்'' என்றார்.

 

'உங்கள் பிறந்த நாளில் தொண்டர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு, ''டிசம்பர் 17 சேலத்தில் நடக்கும் மாநாட்டை வெற்றியடைய செய்ய வேண்டும். அந்த பொறுப்பை முதல்வர் இளைஞரணிக்கு கொடுத்துள்ளார்'' என்றார்.

 

'சார் உங்களுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்க வேண்டும் என தொண்டர்கள் சிலர் சொல்கிறார்களே' என்ற கேள்விக்கு, 'எந்த தொண்டர் சொன்னாங்க' என்றார். போஸ்டர் எல்லாம் ஒட்டியிருக்காங்க, என செய்தியாளர் சொல்ல ''எங்க ஒட்டியிருக்காங்க'' என உதயநிதி கேட்க, அண்ணா அறிவாலயம் முன்பே ஒட்டியிருக்காங்க என செய்தியாளர் சொன்னார். அதற்கு ''நான் பார்க்கவில்லை பார்த்துவிட்டு சொல்கிறேன். எனக்கு விருப்பம் இல்லை'' என்றார்.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்