Skip to main content

தமிழக சிறைகளில் கரோனா தனிமை வார்டுகள் அமைப்பு! கைதிகளுக்கு கரோனா பரிசோதனை கட்டாயமாகிறது!!

Published on 05/04/2020 | Edited on 05/04/2020

தமிழக சிறைகளுக்கு புதிதாக வரும் கைதிகளுக்கு கரோனா வைரஸ் மருத்துவப் பரிசோதனை கட்டாயமாகிறது. இதற்காக, ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறைகளில் கரோனா சிகிச்சைக்கென தனிமை வார்டுகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

கரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொற்று ஏற்படுவதில் இருந்து காத்துக்கொள்ள ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் 3 அடி தொலைவில் இடைவெளியைக் கடைப்பிடிக்கும் சமூக விலகல் அவசியம் என்கிறது சுகாதாரத்துறை. 

நோய்த்தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தமிழக சிறைச்சாலைகளில் கைதிகளிடையே நெருக்கத்தைக் குறைக்கும் நோக்கில், முதல்கட்டமாக 2400 விசாரணைக் கைதிகள் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். நன்னடத்தை விதிகளின் கீழ் பரோல் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

tamilnadu prison corona ward arranged dig police order

புதிதாக சிறைக்கு வரும் கைதிகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக, ஒவ்வொரு சிறையிலும் புதிய கைதிகளுக்காக தனிமை வார்டுகள் தொடங்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளன. மாவட்டத்திற்கு ஒரு சிறை வீதம் 37 சிறைகளில் கரோனா சிகிச்சைக்கான தனிமை வார்டுகள் அமைக்க சிறைத்துறை டிஐஜி சுனில்குமார் சிங் உத்தரவிட்டுள்ளார்.

கரோனா தனிமை வார்டுகள் அமைக்கப்பட உள்ள சிறைகளில் ஏற்கனவே உள்ள கைதிகளை, அருகில் உள்ள மற்ற சிறைகளுக்கு மாற்றவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 

சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை ஆத்தூர் கிளைச்சிறையில் இருந்த கைதிகள் 20 பேர் சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டு உள்ளனர். கிருஷ்ணகிரி சிறையில் இருந்த 7 பெண் கைதிகள் சேலம் பெண்கள் சிறைக்கும், நாமக்கல் சிறையில் இருந்த 3 கைதிகள் ராசிபுரத்திற்கும் மாற்றப்பட்டு உள்ளனர். 

''புதிதாக வரும் கைதிகள் மற்றும் ஏற்கனவே பரோலில் சென்று விட்டு மீண்டும் சிறைக்கு திரும்பும் கைதிகளை தனிமை வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கும் வகையில் சிறைச்சாலைகளில் கரோனா தனிமை வார்டுகள் அமைக்கப்பட்டு வருகின்றன,'' என சிறைத்துறை அதிகாரிகள் கூறினர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.