Skip to main content

கஞ்சா போதையில் ரீல்ஸ்; கெத்தை வெத்தாக்கிய தமிழக போலீசார்

Published on 17/12/2022 | Edited on 17/12/2022

 

 Tamilnadu police who bowed their hands and apologized for reeling under the influence of ganja

 

கிருஷ்ணகிரியில் கஞ்சா போதையில் ரிலீஸ் வீடியோக்கள் வெளியிட்டு வந்த இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்த நிலையில் அந்த இளைஞரை கையெடுத்து கும்பிட வைத்து மன்னிப்பு கேட்க வைக்கும் வீடியோவை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

 

கிருஷ்ணகிரி மாவட்டம் பழையபேட்டை பகுதியில் அதிகளவில் கஞ்சா விற்பனையாவதாகக் கிடைத்த ரகசிய தகவலை அடுத்து உதவி காவல் ஆய்வாளர் பார்த்திபன் தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது பழையபேட்டை பேருந்து நிலையம் அருகே கஞ்சா புகைத்தபடி இளைஞர் ஒருவர் ரீல்ஸ் வீடியோ செய்து கொண்டிருந்தார். அவரைப் பிடித்த போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர்.

 

அப்பொழுது இளைஞரின் செல்போனை வாங்கி பார்த்ததில் அவரது செல்போனில் கஞ்சா செடியுடன் ரீல்ஸ், கஞ்சா புதைப்பது போன்ற ரீல்ஸ் வீடியோக்கள் இருந்துள்ளது. மேலும் தன்னை ஒரு கேங்ஸ்டர் போல காட்டிக் கொண்டு இளைஞர்களை மிரட்டுவது, மிரட்டல் பார்வையுடன் நடப்பது எனப் பல்வேறு ரீல்ஸ் வீடியோக்களை எடுத்து வெளியிட்டது தெரிய வந்தது. உடனடியாக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில் அந்த இளைஞர் கிருஷ்ணகிரி மாவட்டம் பழையபேட்டையைச் சேர்ந்த அசோக் என்பது தெரிய வந்தது. ஏற்கனவே அந்த இளைஞர் மீது மூன்று அடிதடி வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது.

 

அந்த இளைஞரின் செல்போனில் காவலர்களை மிரட்டுவது போன்ற ரீல்ஸ் வீடியோக்களும் இருப்பது தெரிய வந்தது. உடனடியாக காவல்துறையினர் அவர்கள் வழியில் நடத்திய அட்வைஸ்க்கு பிறகு அந்த இளைஞர், “இனிமேல் கத்தி, கஞ்சாவுடன் வீடியோ பண்ணமாட்டேன் சார்; அடிதடிக்கு போகமாட்டேன் சார்; ரவுடிசம் பண்ணமாட்டேன் சார்; ரவுடிசம் பண்ற மாதிரி வீடியோ பண்ணமாட்டேன் சார்; போலீசை எதிர்க்கிற மாதிரி வீடியோ பண்ணமாட்டேன் சார்; எதுவும் பண்ணமாட்டேன் சார்; இந்த ஒரு தடவை என்னை மன்னித்து விடுங்கள் சார்; திருந்திடுவேன் சார் கண்டிப்பா” என மன்னிப்பு கேட்கும் வீடியோ காட்சியை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கேளிக்கை விடுதி விபத்து; மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி இருந்தது.

இது விபத்து குறித்து சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

இந்நிலையில் இந்த விபத்து குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இது குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு கிளப்பில் உள்ள மெஸ்ஸானைன் தளம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக விளக்கமிக்க வேண்டிய தேவை உள்ளது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் தற்போது நடந்து கொண்டிருக்கும் மெட்ரோ ரயில் பணிகளால் அல்ல என்பதை  சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) தெளிவுபடுத்த விரும்புகிறது.

ஏனெனில் மெட்ரோ ரயில் பணியானது, விபத்து நிகழ்ந்த கட்டிடத்திலிருந்து கிட்டத்தட்ட 240 அடி தொலைவில் உள்ளது. மேலும் விபத்து நிகழ்ந்த கட்டடத்தில் அதிர்வுகள் எதுவும் காணப்படவில்லை. சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீட்புப் பணிகளில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அதிகாரிகளுக்கு உதவி செய்ய உள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவிக்க விரும்புகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விபத்து; 3 பேர் உயிரிழந்த சோகம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Chennai Alwarpet hotel top roof incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது விபத்து குறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.