Skip to main content

"இந்த ஆப் எல்லாம் வச்சிருந்தா உடனே டெலிட் பண்ணுங்க"- டி.ஜி.பி. சைலேந்திர பாபு அறிவுறுத்தல்! 

Published on 16/06/2022 | Edited on 16/06/2022

 

tamilnadu police dgp Sylendra Babu IPS video speech peoples loan apps

 

ஆன்லைன் மோசடி அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் கவனமாக இருக்க தமிழக காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திர பாபு இ.கா.ப., அறிவுறுத்தியுள்ளார். 

 

டி.ஜி.பி. சைலேந்திர பாபு இ.கா.ப. வெளியிட்டுள்ள காணொளியில், "ஆன்லைன் Fraud- ஆ பத்தி தொடர்ந்து நாம பேசிட்டு இருக்கிறோம். இப்ப சமீப காலத்தில் சில நாட்களுக்கு முன்னதாக, ஒரு பயங்கரமான ஆன்லைன் மோசடி நடந்துக் கொண்டிருக்கிறது. ஆன்லைன்ல உங்களுக்கு லோன் வாங்குறத்துக்காக, லோன் ஆப் நிறைவ வந்திருக்கு. அந்த லோன் ஆப் நீங்க டவுன்லோடு பண்ணிட்டு, லோன் அப்லே பண்ண சொல்லுவாங்க. அப்லே பண்ண சொல்லும் போது ஒரு போட்டோ கேப்பாங்க. 

 

அதே மாதிரி உங்களுடைய கான்டெக்ஸ் லிஸ்ட்ல நாலஞ்சு பேர சொல்லுங்க, அவங்களுடைய ஈமெயில் ஐடி கொடுங்க, கான்டெக்ட் டீடெய்ல்ஸ் கொடுங்கன்னு கேட்டு வாங்கிட்டு, லோன் அப்லே பண்ணுவீங்க. ரூபாய் 3,000, ரூபாய் 4,000, ரூபாய் 5,000 என்று லோனும் உங்களுக்கு கொடுத்துடுவாங்க. இப்போ நீங்க அனுப்பன போட்டோவ, அதை ஆபாசமாக சித்தரித்து உங்களுக்கு அனுப்பி, இந்த மாதிரி நீங்க 10,000 ரூபாய் கொடுத்துடுங்க. இல்ல, இந்த போட்டோவ உங்க கான்டெக்ட்ல இருக்கற அனைவருக்கும் அனுப்பிடுவோம். அப்படி, உங்களைப் பயமுறுத்தி ரூபாய் 10,000 வாங்குவாங்க. ரூபாய் 50,000 வாங்குவாங்க, ரூபாய் 1,00,000 வாங்குவாங்க. 

 

அப்படி உங்களுக்கு நிம்மதி போயிடும். இந்த போட்டோவ மத்தவங்க பாத்தாங்கனா என்ன நினைப்பாங்க அப்படிங்கற மாதிரி உங்களுக்கு பயம் வந்திடும். அது உண்மையில்லை என்றாலும் மத்தவங்க நம்பமாட்டாங்க. இப்படி ஒரு தர்ம சங்கடமான சூழ்நிலையில் உங்கள சிக்க வைச்சி, பிளாக் மெயில் பண்ணி நிறைய பணம் வாங்கற நிகழ்ச்சி நடந்திருக்கிறது. 

 

நமது காவல்துறை அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையை எடுத்துட்டு இருக்கிறார்கள். இந்த ஆப்ப எல்லாம் முடக்கறத்துக்கும் முயற்சிப் பண்ணிருக்கோம். ஆனால், தொடர்ந்து பல்வேறு விதமான ஆப் எல்லாம் தொடர்ந்து வந்துட்டு தான் இருக்கும். நீங்கள் இன்னில இருந்து ஏமாறக் கூடாது என்பதற்காக இந்த செய்தியை சொல்றோம்" என்று கூறினார். 

 

அத்துடன் மோசடி ஆப்களின் பெயர்களைப் பட்டியலிட்ட டி.ஜி.பி., Euvalt, Masen Rupee, Lory loan, Wingo Loan, cici Loan, City loan இந்த ஆப்கள் மோசடியான ஆப்கள். இந்த ஆப்களை எல்லாம் டவுன்லோடு பண்ணிடாதீங்க. ஒருவேளை பண்ணிடீங்கன்னா கூட, அத உடனே டெலிட் பண்ணிடுங்க. பாதுகாப்பாக இருங்க; இது தமிழக காவல்துறையினர் வேண்டுகோள் என்று தெரிவித்துள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

செஞ்சுரிக்கு மத்தியில் சிலிர்க்க வைத்த மழை

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
summer rain in madurai

பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து வரும் நிலையில் ஒரு சில இடங்களில் பெய்த மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மதுரையின் நகரப் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.

மதுரையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதுரையின் நகரப் பகுதி மற்றும் கோரிப்பாளையம், தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஒரு சில இடங்களில் நீர் தேங்கியதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிறிது சிரமத்திற்கு உள்ளாகினர்.

மதுரையின் பழங்காநத்தம், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மழை பெய்த நிலையில் பிற்பகலுக்கு மேல் தற்பொழுது கோரிப்பாளையம் தல்லாகுளம் பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. அதேபோல் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பின்படி நீலகிரி, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், சேலம், நாமக்கல், கரூர், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, சிவகங்கை ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.