Skip to main content

''கலைஞர் இருந்தபோது இருந்த தி.மு.க வேறு, தற்போது இருக்கும் தி.மு.க வேறு,''- குஷ்பு பரபரப்பு பேச்சு!

Published on 10/01/2021 | Edited on 10/01/2021

 

 'I came out of the party because there is no security in DMK' '- Khushbu's sensational speech in Trichy!

 

திருச்சி மாவட்டம் கோபி பகுதியில் உள்ள சமுதாயத் திடலில் இன்று (10/01/2021) ''நம்ம ஊர் பொங்கல்'' என்ற தலைப்பின் கீழ் பாரதிய ஜனதா கட்சியினர் பொங்கல் விழாவை கொண்டாடினார்கள். மதியம் ஒரு மணி அளவில் பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் குஷ்பு சுந்தர் பொங்கல் விழாவில் வந்து கலந்து கொள்வார் என்று அறிவித்திருந்த நிலையில், இதற்காக 150- க்கும் மேற்பட்ட பொங்கல் பானைகளை காலை 10.00 மணிக்கு திடலில் தயார் செய்து வைக்கப்பட்டிருந்தது. அவர் வர தாமதமானதால் பொங்கல் பானைகளில் மதியம் 01.00 மணியளவில் பொங்கல் பொங்கி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் மாலை 05.00 மணியளவில் விழாவிற்கு வந்த குஷ்பு, மேடையில் ஏறி அங்கு பா.ஜ.க. சார்பில் நடத்தப்பட்ட சிறு கலை நிகழ்ச்சிகளைப் பார்த்தார். 'பா.ஜ.க.விற்கு கண்டிப்பாக வாக்களியுங்கள்' என்று வாக்கு சேகரித்து விட்டு அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

 

அப்போது பேசிய அவரிடம், 234 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெறும் என்று ஸ்டாலின் கூறியிருக்கிறார் என்ற கேள்விக்கு, கடந்த தேர்தலிலும் அவர் இதை தான் பேசினார். தற்போது கலைஞர் இல்லாத ஒரு தேர்தலை சந்திக்கப் போகிறோம் இருந்தாலும் இன்று நடைபெறக்கூடிய எடப்பாடி தலைமையிலான ஆட்சி பெரிய அளவில் குற்றம் குறைகளைக் கண்டுபிடிக்க முடியாது. மிக சிறப்பாக நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.

 

 'I came out of the party because there is no security in DMK' '- Khushbu's sensational speech in Trichy!

 

ஸ்டாலின் கலைஞர் இவர்கள் இருவரையும் ஒருபோதும் ஒப்பிட்டுப் பேச முடியாது. கலைஞருடைய இடத்தை நிரப்ப முடியாது. ஜெயலலிதா இல்லாமல் அ.தி.மு.க. இந்தத் தேர்தலை சந்திக்கிறது. எடப்பாடிக்கு இது ஒரு புதிய சவாலான தேர்தலாகவே அமையும். தேசியக் கட்சிகளில் இருந்து மாநில கட்சிகள் வரை மிகப்பெரிய கட்சிகளாக இருக்கக்கூடிய பா.ஜ.க.வும், காங்கிரசும், அ.தி.மு.க.வும், தி.மு.க.வும், எந்தக் கட்சிகளும் சமூக வலைதளங்களால் உருவாக்கப்பட்டவை அல்ல.

 

பெண்களை இழிவுபடுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட உதயநிதி ஸ்டாலின் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று கூறியிருக்கும் கருத்திற்கு உங்களுடைய பதில் என்று கேட்டதற்கு, தாத்தாவுக்கு இப்படிப்பட்ட ஒரு பேரனா என்று பார்க்கும் போது மனம் வேதனையாக இருக்கிறது. நான் ஏன் அந்த கட்சியில் இருந்து வெளியே வந்தேன் என்று இந்த மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு இது புரிந்திருக்கும். கலைஞர் இருந்தபோது இருந்த தி.மு.க. என்பது வேறு தற்போது இருக்கும் தி.மு.க. என்பது வேறு, என்றார்.

 

செய்தியாளர்களைச் சந்தித்த பிறகு திடலில் இருந்து புறப்பட்டு நுழைவாயில் அருகே வரும்போது திருச்சி மாவட்ட பா.ஜ.க.வின் பொதுச்செயலாளர் தமிழ்ச்செல்வி என்பவர் கூட்ட நெரிசலில் கீழே விழுந்து மண்டை உடைந்ததால் அவருக்கு ஆறுதல் கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றார். 150- க்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் பானைகளோடு தங்களை ஒருமுறையாவது வந்து பார்ப்பார் என்று ஆவலோடு காத்திருந்த நிலையில், அவர்களுக்கு மிஞ்சியது ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. காத்திருந்த பெண்களின் கூட்டத்தை எட்டிக்கூட பார்க்காமல் மேடைக்கு அருகிலேயே காரில் ஏறி வெளியேறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.