Skip to main content

கல்விக் கொள்கையின் அடுத்த பூதத்தை களமிறக்கிய தமிழக அரசு!

Published on 19/09/2019 | Edited on 19/09/2019

மத்திய அரசின் கல்விக் கொள்கைளில் உள்ள சரத்துக்கள் மாற்றப்பட வேண்டும் என்று கல்வியாளர்கள், அரசியல் கட்சிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் போராட்டங்களை நடத்தி கோரிக்கைக்ளை முன்வைத்து வருகின்றனர். மத்திய அரசு கருத்துக் கேட்போம் என்று சொல்லிவிட்டு இருந்தாலும் தமிழக அரசு மத்திய அரசிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக ராஜாவை மிஞ்சிய விசுவாசம் காட்டி வருகிறது.

 

Tamilnadu Government to launch the next phase of education policy ... Do students plan to struggle to study?

 

நீட் என்ற அரக்கனை கொண்டு வந்து அனிதா தொடங்கி அடுத்தடுத்து மாணவர்களின் உயிர்களை குடித்தாலும் இன்னும் திருந்தவில்லை. அடுத்து இந்தி திணிப்பு. அடுத்து பள்ளிகளை இணைப்பது என்ற திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்து மாவட்டத்திற்கு சில பள்ளிகளை தேர்வு செய்து முன்மாதிரி பள்ளிகள் என்று பெயரிட்டு நடத்தி வருகிறார்கள். இதனால் கிராமங்கள் தோறும் பள்ளிகள் இருக்காது. பழைய காலம் போல பல கி.மீ தள்ளி ஒரு பள்ளி இருக்கும். அங்கே விரும்பினால் சென்று படிக்கலாம். 5, 8 ம் வகுப்புகளுக்கு பொது தேர்வு முறை. இந்த முறையால் பள்ளி செல்லாக்குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது.
 

காந்தி திருவிழா என்று விடுமுறை நாட்களிலும் வகுப்புகள். விடுமுறையிலும் மன அழுத்தம் குறைக்க முடியாமல் மன சுமையை அதிகம் ஏற்றிக் கொள்ள வழிவகுக்கும்.
 

Tamilnadu Government to launch the next phase of education policy ... Do students plan to struggle to study?

 

அடுத்த அதிரடியாக.. 16 ந் தேதி கையெழுத்திட்டு 17 ந் தேதி மாலை வெளியிடப்பட்டுள்ள மற்றொரு அறிக்கை மாணவர்களையும், பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் கொந்தளிக்க வைத்துள்ளது. அதாவது அரசுப் பள்ளிகளில் தன்னார்வலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தாங்கள் விரும்பினால் பாடம் நடத்தலாம், சிறப்பு பயிற்சிகள் கொடுக்கலாம் அதற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனுமதி தேவையில்லை. பள்ளி தலைமை ஆசிரியர் அனுமதித்தால் போதும் வகுப்புகள் எடுக்கலாம் என்பதுதான் அந்த அறிவிப்பு.

இதனால் எந்த நடக்கும் என்ற நமது கேள்விக்கு ஆசிரியர்கள் கூறும் போது.. இதனால் நடக்க கூடாதது எல்லாம் நடக்கும் என்றவர்கள். தற்காப்பு பயிற்சி முதல் பாடங்கள் வரை நல்லா நடத்துவோம் என்று வருவார்கள். அவர்களை தலைமை ஆசிரியர்கள் அனுமதித்தே தீரவேண்டும். அப்படி அனுமதி அளிக்கும் போது அவர்கள் வகுப்புகளில் பாடம் நடத்துவார்களா அல்லது வேறு ஏதாவது பயிற்சிகள் நடத்துவார்களா என்பது தெரியாது. அவர்களை தடுக்கவும் முடியாது. தற்காப்பு பயிற்சி என்ற பெயரில் வேறு பயிற்சிகள் கூட நடத்தலாம். வெளியே ஒரு மாணவிக்கு டார்ச்சர் கொடுக்கும் ஒரு இளைஞர் கூட நான் பாடம் நடத்துவேன் என்று பள்ளிக்குள் வந்து தொடர்ந்து மாணவிகளுக்கு டார்ச்சர் கொடுக்கவும் வாய்ப்புகள் உள்ளது. இவர்களுக்கு பெயர் சூப்பர் ஹீரோ. தொடர்ந்து 5 ஆண்டுகள் பயிற்சி அளித்துவிட்டால் அதே பள்ளியில் அவர்களை ஒப்பந்த பயிற்சியாளராகவும் நியமிக்கப்படுவார்கள்.

 

Tamilnadu Government to launch the next phase of education policy ... Do students plan to struggle to study?


அதாவது மத்திய அரசிக் கல்விக் கொள்கையில் இப்படியான அம்சங்கள் உள்ளது. அதனால்தான் வேண்டாம் என்று கருத்து சொல்லியும் போராட்டம் நடத்தியும் வருகிறார்கள். மத்திய அரசு இந்த திட்டங்களை அறிவித்ததோ இல்லையோ தன்னுடை ராஜவிசுவாசத்தை காட்ட தமிழக அரசு முந்திக் கொண்டு மாணவர்களிடம் திணிக்கிறார்கள். இதனை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்தியே காலத்தை வீணாக்குவதால் தேர்ச்சி விகிதம் குறையும். தேர்ச்சி விகிதம் குறைவதால் பழைய படியே மாணவர்களை மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தி பள்ளிக்கு செல்வதை தடை செய்வதுடன் பள்ளி செல்லாக்குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதாவது படித்தால் வேலை கேட்பார்கள் அதனால் அடிப்படையிலேயே படிக்கவிடாமல் செய்துவிட்டால் வேலை கேட்க வரமாட்டார்கள் அல்லவா என்கிறார்கள்.

இன்றும், நாளையும் அடுத்த அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

சார்ந்த செய்திகள்

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.

Next Story

'ஐயம் களையப்பட வேண்டும்'- ஆசிரியர் மன்ற மாநில பொதுச்செயலாளர் கோரிக்கை

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
nn

'மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களின் வாக்குரிமை பாதுகாக்கப்படவேண்டும். எனவே அஞ்சல் வாக்கு மற்றும் தேர்தல் பணிச்சான்று கிடைக்கப்பெறாத ஆசிரியர், அரசு அலுவலர்களின் ஐயம் களையப்படவேண்டும்' என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொதுச் செயலாளர் மன்றம் நா.சண்முகநாதன் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது, 'தமிழ்நாட்டில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் எதிர்வரும் 19.04.2024 அன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கு மக்களவைத் தேர்தல் பணிகளில் தமிழ்நாட்டின் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் வாக்குச்சாவடி அலுவலர் பொறுப்புகள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இவ்வாறு வாக்குச்சாவடி அலுவலர்களாக பணியமர்த்தப்பட்டுள்ள ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்கு(postal vote) உரிமையின் மூலமாகவும் , தேர்தல் பணிச் சான்று(election duty certificate) கிடைக்கப்பெற்று பணியாற்றும் வாக்குச்சாவடிகளில் வாக்கினை செலுத்துவது மூலமாகவும் தங்களது ஜனநாயக கடமையை செவ்வனே ஆற்றி வந்துள்ளனர் என்பது காலம் காலமாக இருந்து வரும் நடைமுறை மரபாகும்.

ஆனால் தற்போதைய மக்களவைத் தேர்தலுக்கான இவ்வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இதுவரையிலும் மூன்று கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையிலும் அஞ்சல் வாக்குகள் கோரியவருக்கு அஞ்சல் வாக்குகளும் வழங்கப்படவில்லை.தேர்தல் பணிச்சான்று கோரியவருக்கும் தேர்தல் பணிச்சான்றும் வழங்கப்படவில்லை. மாநிலத்தின் பெரும்பாலான மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களின் இதற்கு மெத்தனப்போக்கு காரணமாகும்.  வாக்குரிமை பறிப்புக்கு இணையானதாகும் என்று வலுவாகப் பேசப்படுகிறது.

nn

தமிழ்நாட்டின் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களிடம் பரவலாக பரவி வரும் பேரச்சம் மற்றும் பெரும் ஐயம், மனப்பதற்றம், மனக்கொந்தளிப்பினை அதிகரித்துள்ளது. புதுக்கோட்டை  மாவட்டத்தில் மறியல் போராட்டம் வரை சென்றுள்ளது. நூறு சதவிகிதம் வாக்குப் பதிவினை முதன்மை நோக்கங்களில் ஒன்றாக கொண்டுள்ள தேர்தல் ஆணையத்தின் இலக்கினை நிறைவேற்றும் வகையில் தேர்தல் பணிகளில் பணியமர்த்தப்படும் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களுக்கு அஞ்சல் வாக்குச்சீட்டும், தேர்தல் பணிசான்றும் உடன் கிடைக்கப் பெறச்செய்து வாக்கு உரிமையை பாதுகாத்துத் தந்திட வேண்டுமாய் தமிழ்நாடு தலைமைத்தேர்தல் அலுவலரிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது' என தெரிவித்துள்ளார்.