Skip to main content

சென்னையில் குவியும் செவிலியர்கள்.....

Published on 13/02/2020 | Edited on 13/02/2020

கருவில் தொடங்கி கல்லறை வரை மருத்துவப் பணி என்றால் அது கிராம சுகாதாரச் செவிலியர்களின் தன்னலமற்ற சேவைதான். அப்படி மக்களுக்காக முழுமையாக தங்களை ஈடுபடுத்தி செவிலியர் பணியில் ஈடுபட்டு வரும் கிராம சுகாதார செவிலியர்களை அரசு பழிவாங்கும் நோக்கத்தோடு ஏராளமான வேலைகளை திணிப்பதும், பணி மாறுதல், சஸ்பெண்ட் உள்ளிட்ட நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
 

கடந்த சில மாதங்களாக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் கீழ் இயங்கும் கிராம சுகாதார செவிலியர்கள் கடும் மன உளைச்சளில் உள்ளார்கள். தமிழக சுகாதாரத் துறையின் செயலாளர் பீலாராஜேஷ், செவிலியர்களுக்கும், மருத்துவர்களுக்கும் பணிப்பளுவை அதிகரிக்கும் வகையில் ஆய்வுக் கூட்டம், வீடியோ கான்பரன்ஸ் உள்ளிட்டவையை தொடர்ந்து நடத்தி வருகிறார் என்ற குற்றச்சாட்டை மருத்துவர்கள், செவிலியர்கள் முன்வைத்துள்ளனர்.

tamilnadu government hospital nurse arrive at chennai health department


இதைக் கண்டித்து மருத்துவத் துறை பணியாளர்கள் மாநிலம் முழுவதும் பல கட்ட போராட்டங்களையும் நடத்தி உள்ளார்கள். இதன் தொடர்ச்சியாக நாளை (14.02.2020) வெள்ளிக்கிழமை ஒட்டுமொத்த கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் பகுதி, சமுதாய செவிலியர்கள் (VHN, SHN, CHN) என அனைவரையும் உள்ளடக்கிய கூட்டு போராட்ட குழுவின் சார்பாக சென்னையில் உள்ள மாநில தலைமை சுகாதாரப் பணிகள் இயக்குனர் (DMS) அலுவலகம் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். இதற்காக மாநிலம் முழுவதில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான கிராம சுகாதார செவிலியர்கள், மருத்துவத்துறை பணியாளர்கள் சென்னையில் குவிந்து வருகிறார்கள்.
 

சுகாதாரத்துறை செவிலியர்களின் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் 13- ஆம் தேதி மாலை துறையின் உயரதிகாரிகள் செவிலியர் சங்க நிர்வாகிகளை அழைத்து போராட்டத்தை கைவிடுங்கள், மீறி போராட்டம் நடத்தினால், அதில் கலந்துக் கொள்ளும் அனைவரையும் சஸ்பெண்ட் செய்வோம் என அதிகாரிகள் கூறியதாகவும், ஆனால் திட்டமிட்டப்படி எங்கள் போராட்டம் நடக்கும் என அதிகாரிகளிடம் உறுதியாக தெரிவித்ததாக செவிலியர் சங்க நிர்வாகிகள் கூறுகின்றனர். 
 

மக்களுக்கு நல்வாழ்வு கொடுக்க சிகிச்சை கொடுக்கும் சுகாதாரத்துறைக்கு செவிலியர்கள் போராட்டம் என்ற சிகிச்சையை கொடுக்கிறார்கள். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

வெள்ளியங்கிரி மலை ஏறிய இளைஞருக்கு நேர்ந்த துயரம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy befell the young man who climbed the Velliangiri mountain

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது டிரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர்.

மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். இந்நிலையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறி சாமி தரிசனம் செய்துவிட்டு, கீழே இறங்கியபோது 7 வது மலையில் திருப்பூரை சேர்ந்த வீரக்குமார் (வயது 31) என்பவர் கடந்த 18 ஆம் தேதி தவறி விழுந்தார். இதனால் அவரின் கை மற்றும் வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

உடல்நலக் குறைவால் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய 7 பேர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக் உயர்ந்துள்ளது. முன்னதாக சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது எனவும், கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத் தீயை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.