Skip to main content

பிரதமரிடம் தமிழக முதலமைச்சரின் கோரிக்கைகள்!

Published on 17/06/2021 | Edited on 17/06/2021

 

TAMILNADU CHIEF MINISTER MKSTALIN PRESSMEET AT DELHI

டெல்லியில் பிரதமர் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (17/06/2021) மாலை 05.00 மணிக்கு சந்தித்தார். அப்போது, தமிழகத்தின் கோரிக்கை அடங்கிய மனுவை பிரதமரிடம் தமிழக முதலமைச்சர் வழங்கினார். 

 

பின்னர் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்தியுள்ள கோரிக்கைகள் என்னென்ன என்பது குறித்து விளக்கமளித்தார்.

 

அப்போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது, "தமிழகத்திற்கு கூடுதலாகத் தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்தினேன். செங்கல்பட்டு, குன்னூர் தடுப்பூசி மையங்களில் உற்பத்தியைத் தொடங்க கோரிக்கை வைத்துள்ளேன். நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவுத்தேர்வுகளையும் ரத்துச் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தேன். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை விரைந்து அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினேன். திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கையைத் திரும்பப் பெற வேண்டும் எனவும் பிரதமரிடம் வலியுறுத்தினேன். சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக்க வேண்டும் என வலியுறுத்திள்ளேன்.

 

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளேன். சேது சமுத்திரத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளேன். இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கவும் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளேன். மேகதாது அணை கட்ட வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளேன். தமிழகத்திற்கான நிதி ஆதாரங்களை ஒன்றிய அரசு விடுவிக்கவும் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளேன். 

 

மூன்று வேளாண் சட்டங்களையும் ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளேன். நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டை நிறைவேற்ற வேண்டும். ஜி.எஸ்.டி. நிலுவைத்தொகை, காவிரி பிரச்சனை, கச்சத்தீவு மீட்பு தொடர்பாகவும் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளேன்.

 

மின்சாரத் திருத்தச் சட்டம், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும். இட ஒதுக்கீட்டின் அளவுகோலை மாநிலங்களே நிர்ணயிக்க அதிகாரம் வழங்க வேண்டும். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க நிரந்தர தீர்வு தேவை என்று வலியுறுத்தியுள்ளேன். கோதாவரி- காவிரி நதிகள் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். நாடு முழுவதும் இலவச கட்டாயக் கல்வியை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளேன்.

 

ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் நீதிமன்ற போக்கைப் பொறுத்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும். கரோனா தடுப்பூசிகள் போதுமான அளவு வழங்குவதாக பிரதமர் உறுதி அளித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பு மகிழ்ச்சியானதாகவும், மனநிறைவாகவும் இருந்தது. எந்த கோரிக்கைகள் தொடர்பாகவும், எந்த நேரத்திலும் தன்னைத் தொடர்புக் கொள்ளலாம் என பிரதமர் கூறினார்". இவ்வாறு தமிழக முதலமைச்சர் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.