Skip to main content

10% இட ஒதுக்கீட்டிற்கு 16 கட்சிகள் எதிர்ப்பு...5 கட்சிகள் ஆதரவு!

Published on 08/07/2019 | Edited on 08/07/2019

உயர்வகுப்பு ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக, அனைத்துக்கட்சி கூட்டம் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், ஏழை உயர்வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு என்பது சமூக நீதிக்கு எதிரானது என கூறி கமல் 10% இட ஒதுக்கீட்டை எதிர்ப்பதாக தெரிவித்தார்.

 

TAMILNADU ALL PARTIES MEETING OVER 10% QUOTA 16 PARTIES AGAINST, 5PARTIES ONLY SUPPORT

 

 

அதே போல் திராவிட கழக தலைவர் வீரமணி பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழை உயர்வகுப்பினருக்கு மத்திய அரசு வேறு விதத்தில் உதவலாம், 10% இட ஒதுக்கீட்டில் அரசு நல்ல முடிவு எடுத்தால், அரசுக்கு நல்ல பெயர் கிடைக்கும் என கருத்து தெரிவித்தார். 10% இட ஒதுக்கீட்டில் இருந்து தமிழக அரசு விலக்கு பெற வேண்டும் என மதிமுக கோரிக்கை. சட்டமன்ற உறுப்பினர்களான கருணாஸ் மற்றும் தமீமுன் அன்சாரி 10% இட ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு . துணை முதல்வர் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி  கூட்டம் நிறைவு பெற்றது.

 

 

 

TAMILNADU ALL PARTIES MEETING OVER 10% QUOTA 16 PARTIES AGAINST, 5PARTIES ONLY SUPPORT

 

 

 

இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில் 10% இட ஒதுக்கீட்டிற்கு திமுக, மதிமுக, மக்கள் நீதி மய்யம், திராவிட கழகம், நாம் தமிழர் உள்ளிட்ட 16 கட்சிகள் எதிர்ப்பும், புதிய தமிழகம், காங்கிரஸ், பாஜக, மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் , தமிழ் மாநில காங்கிரஸ்  உள்ளிட்ட 5 கட்சிகள் மட்டுமே 10% இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். கூட்டத்தின் முடிவில் பேசிய தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 10% இட ஒதுக்கீடு விவகாரத்தில் அரசு நல்ல முடிவு எடுக்கும் என தெரிவித்தார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.