Skip to main content

"கிசான் திட்டத்தில் ரூபாய் 110 கோடி வரை முறைகேடு" -வேளாண்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி பேட்டி!

Published on 08/09/2020 | Edited on 08/09/2020

 

 

Tamilnadu agricultural department secretary gagandeep sing bedi press meet at chennai

 

தமிழகம் முழுவதும் கிசான் திட்ட முறைகேட்டில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளில் சி.பி.சி.ஐ.டி போலீசார் தீவிரம் காட்டி வருகின்றன.

 

இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக வேளாண்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, கிசான் முறைகேடு தொடர்பாக விளக்கம் அளித்தார். 

 

அப்போது அவர் கூறியதாவது, "பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் வருடத்திற்கு ரூபாய் 6,000 மூன்று தவணைகளாக உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. கிசான் திட்டத்தின் கீழ் குடும்பத்தில் ஒருவரால் மட்டுமே பயன்பெற முடியும். நேரடியாக மக்களோ, விவசாயிகளோ முறைகேட்டில் ஈடுபட்டது குறைவாகவுள்ளது. இடைத்தரகர்களே முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். கிசான் திட்டத்தில் தகுதியற்ற நபர்களுக்கு ஒரு ரூபாய் கூட போகக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம். அப்பாவி மக்களிடம் தகவல்களைப் பெற்று இடைத்தரகர்கள் கிசான் திட்டத்தில் விண்ணப்பித்துள்ளனர். பாஸ்வேர்டுகளைப் பயன்படுத்தி தனிநபர்கள் முறைகேட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிசான் முறைகேடு தொடர்பாக விசாரிக்க 10 குழுக்கள் அமைக்கப்பட்டன.


ஆகஸ்ட் மாதத்தில் சுமார் 6 லட்சம் பேர் வரை கிசான் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்தனர். விவசாயிகளே நேரடியாக கிசான் திட்டத்தில் பதிவு செய்துகொள்ளும் முறை தற்போது உள்ளது. கிசான் திட்டத்தில் தகுதியான நபர்களை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு தேர்வு செய்யும். கரோனா பணம் வருவதாக விவசாயிகளைக் கணினி மையங்கள் ஏமாற்றியது கண்டறியப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி, விழுப்புரம், வேலூர், கடலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் ஏமாற்றப்பட்டுள்ளனர். கிசான் திட்ட முறைகேட்டில் வேளாண்துறை இயக்குனர் அளித்த புகாரின் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. கிசான் திட்டத்தில் முறைகேடாக பணம் பெற்றவர்களிடம் இருந்து பணத்தைத் திரும்ப பெற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

 

கிசான் திட்ட முறைகேடு விவகாரத்தில் இதுவரை ரூபாய் 32 கோடி நேரடியாக மீட்கப்பட்டுள்ளது. நேரடியாக வங்கிக் கணக்கில் இருந்தே பணத்தைத் திரும்ப பெற மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

 

கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக 80 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கிசான் திட்ட முறைகேடு புகாரில் இதுவரை 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முறைகேடு சம்பவத்தில் 34 அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விசாரணை அடிப்படையில் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கிசான் முறைகேட்டில் ஈடுபட்ட யாரும் தப்ப முடியாது. குற்றவாளி தனி நபராக இருந்தாலும், அரசு அதிகாரியாக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். 

 

Ad

 

தமிழகத்தில் கிசான் திட்டத்தின் கீழ் ரூபாய் 110 கோடி வரை முறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 41 லட்சம் தகுதி வாய்ந்த விவசாயிகள் தமிழகத்தில் உள்ளனர். அவர்களுக்கு அரசின் மானிய தொகை கிடைக்கும். தகுதியான அனைத்து விவசாயிகளுக்கும் மத்திய அரசின் மானியத் தொகை நிச்சயம் கிடைக்கும். அடுத்த தவணைத் தொகைகள் செலுத்தப்படுவதற்கு முன் முறைகேடுகள் சரி செய்யப்படும்." இவ்வாறு வேளாண்துறை செயலர் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.