Skip to main content

கேரள நீர்வளத்துறை அமைச்சருக்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் கடிதம்!

Published on 03/03/2022 | Edited on 03/03/2022

 

Tamil Nadu Water Resources Minister letter to Kerala Water Resources Minister!

 

கேரள நீர்வளத்துறை அமைச்சருக்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று (03/03/2022) கடிதம் எழுதியுள்ளார். 

 

அந்த கடிதத்தில், "தமிழகத்தின் வறட்சிக்கு இலக்காகும் மதுரை. திண்டுக்கல், தேனி, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள விவசாயிகள் மற்றும் பொது மக்களின் குடிநீர், நீர்பாசனம் போன்ற வாழ்வாதார தேவைகளை நிறைவு செய்ய முல்லைப் பெரியாறு அணை மிகவும் இன்றியமையாததாகும் என்பதை தாங்கள் அறிவீர்கள். எனவே, முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நீர் கிடைக்கப் பெற வேண்டும் என்பது அம்மாவட்டங்களின் விவசாயிகளுக்கு மிகவும் உணர்வு பூர்வமானதாக உள்ளது. இரு மாநில மக்களின் பாதுகாப்பு நலன்களை கருத்தில் கொண்டு, முல்லை பெரியாறு அணையை மிகுந்த கவனத்துடன் தமிழக அரசு பராமரித்து வருகிறது.

 

உச்சநீதிமன்றத்தின் 27/02/2006 மற்றும் 07/05/2014 நாளிட்ட ஆணைகளை நிறைவேற்றவும், மத்திய நீர்வளக் குழுமத்தின் வழிகாட்டுதலின்படியும், முல்லைப் பெரியாறு அணையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகளுக்குத் தேவைப்படும் பொருட்கள் மற்றும் இயந்திரங்களை அணைப் பகுதிக்கு கொண்டுச் செல்ல தேவையான அனுமதி வழங்குவதை கேரள அரசின் வனத்துறை மற்றும் நீர்வளத் துறை தாமதப்படுத்தி வருவதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.

 

உச்சநீதிமன்ற ஆணையின்படி முல்லைப் பெரியாறு அணையின் எஞ்சிய பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்வதற்கு 15 மரங்களை வெட்டி அப்புறப்படுத்துவது மிகவும் இன்றியமையாதது என்பதால், கேரளா அரசின் அரசாணை நிலை எண் 23/2021. வனம் மற்றும் வன உயிரினத் துறை, நாள் 11/11/2021 மூலம் மரங்களை வெட்டுவதற்கு அளித்த அனுமதியை ரத்து செய்து வெளியிட்ட ஆணைகளைத் திரும்பப் பெறவும், மேற்படி 15 மரங்களை வெட்டுவதற்கு அனுமதி வழங்குவதற்கும் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு உங்களை இத்தருணத்தில் கேட்டுக்கொள்கிறேன்.

 

மத்திய நீர்வள குழுமத்தால் பரிந்துரைக்கப்பட்டவாறு முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் நிலநடுக்கத்தினை அளவிடும் கருவிகளை அமைக்க வேண்டும் என கேரள மாநில அரசு தொடர்ந்து கேட்டுவருவதை தங்களுக்கு நினைவுபடுத்துகிறேன். ஐதராபாத்திலுள்ள புவி இயற்பியல் ஆய்வு நிறுவனம் மூலம் மேற்படி கருவிகளை அணைப் பகுதியில் அமைப்பதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். மேலும் அக்கருவிகள் நிறுவுவதற்கு ஆயத்தமாக உள்ளன. இருந்தபோதிலும், நிலநடுக்கத்தினை அளவிடும் கருவிகளைப் பொருத்துவதற்கு தேவையான மேடை மற்றும் தூண்கள் அமைக்கப் பயன்படுத்தப்படவுள்ள கட்டுமான பொருட்களை அணைப் பகுதிக்கு கொண்டு செல்ல கேரள அரசின் வனத்துறை அனுமதிக்கவில்லை என எனது அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

 

எனவே, நீண்டகாலமாக நிலுவையில் உள்ள இப்பிரச்சனையில் தாங்கள் நேரடியாக தலையிட்டு, தேவையான கட்டுமான பொருட்களை வல்லக்கடவு வனச்சாலை வழியாக முல்லைப் பெரியாறு அணைப்பகுதிக்கு கொண்டு செல்லவும், அவ்வனச்சாலையை சீரமைக்கவும்.15 மரங்களை வெட்டி அப்புறப்படுத்தவும் தேவையான ஒப்புதலை வழங்கிட தொடர்புடைய தங்கள் மாநில அலுவலர்களுக்கு அறிவுறுத்துமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.

 

மேலும், உச்சநீதிமன்ற ஆணையை நாம் விரைந்து நிறைவேற்றும் வகையில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு தங்களை கேட்டுக்கொள்கிறேன்." இவ்வாறு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கேரள மாநில நீர்வளத்துறை அமைச்சருக்கு எழுதிய நேர்முக கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.