
தமிழகத்தில் கரோனாதடுப்பு நடவடிக்கை காரணமாக பள்ளி, கல்லூரிகள் முழுமையாக மூடப்பட்டுள்ள நிலையில், அரியர்ஸ்வைத்திருக்கும் மாணவர்கள் தேர்வுக் கட்டணம் செலுத்தி இருந்தாலே தேர்ச்சி பெற்றதாகதமிழக அரசுஅறிவித்தது. இந்நிலையில்அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழும தலைவர் அனில் சகஸ்ரபுதே அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தருக்கு கடிதத்தின் வாயிலாகபொறியியல் படிப்புகளுக்கான அரியர் தேர்வு ரத்து செய்திருக்கும் தமிழக அரசின் முடிவு தவறானது எனத்தெரிவித்துள்ளார்.
அரியர்தேர்வு ரத்து குறித்துதமிழக அரசிடம்இருந்துஎந்த கடிதமும்வரவில்லை,உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணையின்போது ஏ.ஐ.சி.டி.இ தனது முடிவைத் தெரிவிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)