Skip to main content

நடிகர் விஜய் சேதுபதிக்கு தமிழக அரசு பாதுகாப்பு வழங்கவேண்டும்; ரசிகர்கள் ஆர்ப்பாட்டம்!

Published on 22/10/2020 | Edited on 22/10/2020

 

 Tamil Nadu government have to give protection  Actor Vijay Sethupathi  Fans demonstrate

 

நடிகர் விஜய் சேதுபதியின் குடும்பத்தினரை குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக செய்தி வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருவாரூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி திரைப்படம் எடுக்கப்பட இருந்தது. அந்தப் படத்திற்கு நடிகர் விஜய் சேதுபதி நடிக்க ஒத்துக்கொண்டதற்கு, தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரணும் “தமிழகத்தின் தலை சிறந்த கலைஞரின் எதிர்காலம் பாதிப்படையக்கூடாது அதனால், இப்படத்திலிருந்து விலகிக் கொள்ளுங்கள்” என அறிக்கை வாயிலாக விஜய் சேதுபதிக்கு வேண்டுகோள் விடுத்தார். அதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி விலகுவதாக அறிவித்துள்ளார்.

 

இருந்தபோதும், விஜய்சேதுபதி குறித்தும் அவரது குடும்பத்தினர் மற்றும் மகள் குறித்தும் சமூக வலைதளங்களில் அவதூறாகச் செய்திகள் வெளியிட்டுப் பரபரப்பாக்கினர். இதற்குப் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

 

இந்நிலையில், திருவாரூர் பழைய பேருந்து நிலையம் எதிரே மாணவர் அமைப்பினரும் நடிகர் விஜய் சேதுபதியின் ரசிகர் மன்றத்தினரும் சேர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், அவதூறாகச் செய்தி வெளியிட்டு பரப்பியவர்களைக் கைது செய்து, கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் விஜய் சேதுபதிக்கு உரியப் பாதுகாப்பை தமிழக அரசு வழங்கவேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பினர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
A rumor spread on WhatsApp; TN Fact Finding Committee Explained

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென பயங்கர வெடிச்சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அச்சமடைந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர் என செய்தி வெளியாகியது. மேலும், விமான விபத்து நடந்ததாக வாட்ஸ்அப் குழுக்களிலும் வதந்தி செய்தி பரவியது. இதனால் திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “மேற்கண்ட தகவல் பொய்யானது. இந்திய விமானப்படை தஞ்சையில் இருந்து கோடியக்கரை வரை விமான ஒத்திகையை நடத்தியுள்ளது. விமானம் புறப்படும் போது காற்று உயர் அழுத்தத்தில் விடுவிக்கப்படும் (Airlock Release). இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியை நில அதிர்வு எனத் தவறாக பரப்பி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்த முறையான முன்னறிவிப்பானது விமானப்படை தரப்பில் முன்பே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான விபத்து நிகழ்ந்ததாகவும் பொய்யான புகைப்படங்களும் பரவி வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

பாஜக மாவட்ட நிர்வாகியின் காரில் ஆயுதங்கள்; 4 பேர் கைது

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
BJP district executive's car; 4 arrested

திருவாரூரில் பாஜக மாவட்ட நிர்வாகியின் காரில் பயங்கர ஆயுதங்கள் இருந்த நிலையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவாரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நின்றுகொண்டிருந்த பாஜக மாவட்ட துணைத் தலைவர் சதா.சதீஷ் என்பவரது சொகுசு காரில் பயங்கர ஆயுதங்கள் இருந்தது தெரிய வந்தது. உடனடியாக காரை சோதனை செய்த போலீசார் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். காரில் ஆயுதங்களுடன் இருந்த தினேஷ், தேவராஜ், விக்டர், பாரதி செல்வம் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் ஆயுதங்கள் இருந்த சொகுசு காரையும் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.