Skip to main content

வேளாண்சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் போராட்டம் அறிவிப்பு!

Published on 01/11/2020 | Edited on 01/11/2020
Tamil Nadu Farmers' Association announces struggle demanding repeal of agriculture law!

 

சிதம்பரத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சங்கத்தின் முன்னாள் மாநில பொருளாளர் என்.ஆர் ராமசாமி  நினைவு தினக் கூட்டம் நடைபெற்றது.  மாவட்ட துணைத்தலைவர்  ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.  கூட்டத்தில் மாவட்ட செயலாளர் மாதவன், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநிலத் துணைத் தலைவர் மூசா, விவசாய சங்க மாவட்ட நிர்வாகிகள் கற்பனைசெல்வம், மகாலிங்கம், மூர்த்தி. அகில இந்தியவிவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ்,  துணைப் பொருளாளர் செல்லையா தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் வாஞ்சிநாதன், உள்ளிட்ட மாவட்ட அளவில் சங்கத்தின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்துகொண்டு என்.ஆர் ராமசாமி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

கூட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி நவம்பர் 5 அன்று கடலூரில் ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும், கோமுகி அணையில் இருந்து மணிமுத்தாறு ஆற்றில் வரும் தண்ணீரை சேலம் மாவட்டத்திற்கு கொண்டு செல்ல கோமுகி அணையில் இருந்து கைகான் வளைவு என்ற திட்டத்தை அமல்படுத்த தமிழக முதல்வர் ஏற்பாடு செய்து வருகிறார். இதனால் விருதாச்சலம் கம்மாபுரம் புவனகிரி ஒன்றியம் விவசாயிகளுக்க்கு மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கும் 25 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலத்திற்கு தண்ணீர் வருவது தடைப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது எனவே இதை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்காச்சோள விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் பிரீமியம் தொகை கட்டுவதற்கான காலத்தை நீட்டிக்க வேண்டும். படைப்புழுவால் மக்காச்சோளம் பயிர் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே படைப்புழு அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பாதிக்கப்பட்ட நிலங்களை கணக்கெடுப்பு நடத்தி நிவாராணம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். பயிர்  இன்சூரன்ஸ் உள்ள குளறுபடிகளை நீக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

டெல்டா விவசாயிகளுக்கு 3 ஆண்டுகால நிலுவை இன்சுரன்ஸ் தொகையை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். கரும்பு பயிருக்கான ஊக்கத் தொகை டன் ஒன்றுக்கு ரூ13,750 தீபாவளிக்குள் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். நெல்லிகுப்பம் இஐடி ஆலையில் ஒரு சதவீதத்துக்கும் மேல் கழிவு பிடித்தம் செய்வதை தடுத்து நிறுத்தி, பிடித்தம் செய்த தொகையை திருப்பி வாங்கி கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அம்பிகா ஆரூரான் ஆலை கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை பெற்றுத் தர தமிழ்நாடு அரசு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

சம்பா பயிருக்கு கடைமடை வரை தண்ணீர் செல்ல பொதுப்பணித்துறை ஏற்பாடு செய்ய வேண்டும். குறிப்பாக திருச்சின்னபுரம் வாய்க்கால், குமரி வாய்க்கால், ராதா வாய்க்கால், சந்திரன் வாய்க்கால், பெருமாள் ஏரியை தூர்வார நெய்வேலி சமூக மேம்பாட்டு  நிதியை பெற்று முழுமையாக தூர்வார ஏற்பாடு செய்ய வேண்டும். பண்ருட்டி மலட்டாறு தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க வேண்டும். பிரதமர் கிசான் திட்டத்தில் தகுதியான விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டுள்ளது மீண்டும் அவர்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரம் கோவில் குளத்தில் குளிக்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம்

Published on 04/02/2024 | Edited on 04/02/2024
man who went to bathe in the Chidambaram temple pool drowned

சிதம்பரம் இளமையாக்கினார் கோவில் தெருவில் பழம்பெரும் சிவன் கோவில் உள்ளது.  இந்த கோவிலில் சனிக்கிழமை மாலை திருநீலகண்ட நாயனாரின் குருபூஜை விழா நடைபெற்றது. இவ்விழாவில் கோவில் குளத்தில் இறங்கி சுவாமி மற்றும் பக்தர்கள் நீராடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பலர் குளக்கரையில் கூடியிருந்தனர். சுவாமிக்கு குளக்கரையில் பூஜை நடந்து தீர்த்தவாரி நடைபெற்றது. 

இதனைத் தொடர்ந்து அங்கிருந்து பக்தர்களும் பொதுமக்களும் குலத்தில் நீராடச் சென்றனர் அப்போது கோவில் தெருவை சேர்ந்த வெங்கடேசன்(47) என்பவர் கோயில் குளத்தில் இறங்கி நீராடினார். சிறிது தூரம் தண்ணீரில் நீந்தி சென்று குளத்தின் நடுவே உள்ள மண்டபம் அருகே நீரில் மூழ்கியுள்ளார். மீண்டும் அவர் வெளியே வரவில்லை. 

இதைப் பார்த்த அப்பகுதியில் இருந்த திமுக நகர்மன்ற உறுப்பினர் ஜேம்ஸ் விஜயராகவன் தீயணைப்பு மற்றும் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பெயரில் நகர காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சம்பந்தப்பட்ட வெங்கடேசனை குளத்தில் இறங்கி ரப்பர் படகு மூலம் தேடும் பணியில் ஈடுபட்டனர் தொடர்ந்து ஒரு மணி நேரம் தேடிய நிலையில் அவரது உடல் சடலமாக மீட்கப்பட்டது.  இது குறித்து சிதம்பர நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  குளத்தில் மூழ்கிய தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில்  சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story

விமரிசையாக நடைபெற்ற நடராஜர் கோவில் ஆருத்ரா தேர் திருவிழா

Published on 26/12/2023 | Edited on 26/12/2023
Nataraja Temple Arudra Chariot Festival held critically

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆண்டுக்கு இருமுறை தேர் மற்றும் ஆருத்ரா தரிசன விழா நடைபெறும். ஆனி மாதத்தில் ஆனி திருமஞ்சன தேர்த்திருவிழாவும், மார்கழி மாதத்தில் ஆருத்ரா தேர் மற்றும் தரிசன விழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டிற்கான மார்கழி ஆருத்ரா தேர் மற்றும் தரிசன விழா விமர்சையாக நடைபெற்றது.

முன்னதாக அதிகாலை ஐந்து மணிக்கு சாமி, கோவில் கருவறையிலிருந்து தேருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து காலை 8 மணிக்கு தேர் நிலையிலிருந்து புறப்பட்டது. இதில் விநாயகர், சண்டிகேஸ்வரர், நடராஜர், சிவகாமசுந்தரி, முருகன் உள்ளிட்ட தேர்கள் நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தது. தமிழகம் மட்டுமல்லாமல், பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாட்டிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் ஒன்று கூடி தேரை வடம் பிடித்து இழுத்தனர். 

இதனைத் தொடர்ந்து இன்று மாலை தேர் நிலைக்கு வந்தவுடன் ஆயிரம் கால் மண்டபத்திற்கு சாமிகளை எடுத்துச் சென்று மகா அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து நாளை மதியம் 3 மணிக்குள் ஆருத்ரா தரிசன விழா நடைபெறும். காவல்துறை பக்தர்களுக்கு எந்த ஒரு இடையூறும் ஏற்பட ஏற்படாத வகையில் தீவிர காவல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.