Skip to main content

காட்டிக் கொடுத்த கண்காணிப்பு கேமரா... நகை கொள்ளையில் மாணவன் உட்பட 4 பேர் கைது!

Published on 14/04/2022 | Edited on 14/04/2022

 

Surveillance camera betrayed ... 4 arrested including student in robbery of kg of jewelery!

 

நெல்லை மாவட்டத்தின் வீரவநல்லூரின் மெயின் பஜாரில் அலி ஜூவல்லர்ஸ் என்ற நகைக்கடை வைத்திருகு்கும் மைதீன்பிச்சை கடந்த ஏப்ரல் 11- ஆம் தேதி அன்று இரவு தன் நகைக்கடையைப் பூட்டிவிட்டு நகைப்பையுடன் வீட்டுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்த போது, வேவு பார்த்து பின்தொடர்ந்த மர்ம நபர்கள் அவரை வெட்டிவிட்டு 5 கிலோ தங்க நகை மற்றும் 75 ஆயிரம் ரொக்கம் ஆகியவைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர். 

 

மாவட்டத்தில் நடந்த இந்த அதிகபட்ச கொள்ளைச் சம்பவத்தை நக்கீரன் இணையதளத்தில் வெளியிட்டிருந்தோம். சம்பவம் நிகழ்ந்த இடத்தை காவல்துறை உயரதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்தக் கொள்ளையில் ஈடுபட்டவர்களைப் பிடிப்பதற்காக மாவட்ட காவல்துறை எஸ்.பி.யான சரவணன், 6 தனிப்படைகளை ஏ.எஸ்.பி. மாரிராஜன் தலைமையில் அமைத்தார்.

 

தனிப்படையினர், சம்பவம் நடந்த இடத்திற்கு அருகே இருந்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆராய்ந்தனர். அதில் நம்பர் பிளேட் இல்லாத கருப்பு நிற பைக்கில் வந்த மூன்று நபர்கள் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இருப்பினும், கொள்ளை சம்பவம் நடந்த இடத்தின் செல்போன் டவர் சிக்னல்களையும் ஆராய்ந்தனர். அதில் ஒரு நம்பரிலிருந்து தொடர்ந்து பேசியதும், சம்பவத்திற்குப் பிறகு அந்த நம்பர் சுவிட்ச் ஆஃப் ஆகி பின் இரவு 09.00 மணிக்கு மேல் ஆன் செய்யப்பட்டது தெரியவர, சந்தேகத்திற்குரிய அந்த நம்பர் செல்லுக்குரியவர் பாறையடி காலனியின் சுதாகர் என்பதை விசாரணையில் உறுதிசெய்தனர். இதையடுத்து, அந்த நபரைப் பிடித்து தங்கள் பாணியில் விசாரித்த காவல்துறையினரிடம், அவரும், அவரது கூட்டாளிகளும் இந்தக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளதை வெளிப்படுத்தியிருக்கிறார்.

Surveillance camera betrayed ... 4 arrested including student in robbery of kg of jewelery!

அவரது வாக்குமூலம்படி தொடர்ந்து விசாரணை நடத்திய தனிப்படையினர், அதே காலனியைச் சேர்ந்த அழகு சுந்தரம் என்பவர் மூளையாகச் செயல்பட்டு கொள்ளையை நடத்தியது தெரியவந்தது. சுதாகர் உள்ளிட்ட 4 பேரைக் கைது செய்த தனிப்படையினர், அவர்களிடமிருந்து 2.75 கிலோ நகைகளை கைப்பற்றினர்.

 

கொள்ளை நடத்திய இவர்கள் அங்கிருந்து காருகுறிச்சி வழியாக, திருப்புடை மருதூர் வந்து நகைகளைப் பங்கு போட்டுள்ளனர். தலைமறைவான அழகு சுந்தரத்தை தேடி வருகிறோம் என்கின்றனர் காவல்துறையினர்.

 

"கொள்ளையில் தொடர்புடையவர்கள் அந்த ஏரியாவைச் சேர்ந்தவர்கள் தான். தலைமறைவான அழகு சுந்தரத்திடம் மீதமுள்ள நகைகள் இருப்பதாகப் பிடிபடடவர்கள் தெரிவித்துள்ளனர். அவரை விரைவில் பிடித்துவிடுவோம்" என்றார் மாவட்ட எஸ்.பி.யான சரவணன்.

 

பிடிபட்ட கொள்ளையர்களில் சுதாகர் என்பவர் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு மாணவனாம். சம்பவம் நடந்து ஓவர் நைட்டில் கொள்ளைர்கள் பிடிபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மயிலாடுதுறையில் சிறுத்தை; அம்பாசமுத்திரத்தில் கரடி; வைரலாகும் வீடியோ காட்சிகள்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Leopard in Mayiladuthurai; Bear in Ambasamudra; Videos go viral

கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில் வனவிலங்குகள் கிராமங்களை நோக்கி படையெடுக்கும் நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. மயிலாடுதுறையில் அண்மையில் தென்பட்ட சிறுத்தையை பிடிக்கும் பணியானது ஏழு நாட்களுக்கும் மேலாக இன்று வரை தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், அம்பாசமுத்திரத்தில் வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் புகுந்த கரடி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்த, நபர் ஒருவரை கரடி துரத்துவதும், அந்த நபர் தலைதெறிக்க ஓடும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை ஒட்டியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் புலி, சிறுத்தை, கரடி, யானை, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் இருக்கும் நிலையில், தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு மலை ஓரத்தில் உள்ள கிராமங்களில் விலங்குகள் தஞ்சம் புகுவது வாடிக்கையாகி வருகிறது.

Leopard in Mayiladuthurai; Bear in Ambasamudra; Videos go viral

இந்த நிலையில் இன்று அதிகாலை கல்லிடைக்குறிச்சி பகுதிக்கு கரடி ஒன்று வந்துள்ளது. அதிகாலை வீட்டை விட்டு வெளியே வந்த ஒருவர், கரடியைப் பார்த்தவுடன் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி ஓடினார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த அம்பாசமுத்திரம் வனச்சரகர் நித்யா தலைமையிலான வனத்துறையினர் ஊருக்குள் புகுந்த கரடியைத் தேடி வருகின்றனர். பொதுமக்களுக்கு எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டு வருகிறது.

Next Story

சோதனை மேல் சோதனை; ஹர்திக் பாண்டியாவுக்கு விபூதி அடித்த சகோதரர்!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Police action Hardik Pandya's brother for Money laundering case

முன்னணி இந்திய கிரிக்கெட் அணி வீரரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாகவும் பொறுப்பு வகித்து வருபவர் ஹர்திக் பாண்டியா. முன்னதாக ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. அதன் பிறகு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வந்த ஹர்திக் பாண்டியா அந்த அணியிலும் கேப்டனாகத் தொடர்ந்தார். ஆனால், மும்பை அணியின் நட்சத்திர வீரர், ரோகித் ஷர்மாவின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டு ஹர்திக் பாண்டியாவிற்கு சென்றதால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். இந்த ஆண்டு கேப்டன் ஹர்திக் பாண்டியா செல்லும் இடங்களில் எல்லாம் அவருக்கு மோசமான வரவேற்பு கிடைக்கிறது. ஆனாலும், ரசிகர்கள் முன்வைக்கும் விமர்சனங்களுக்கு மத்தியில் ஹர்திக் பாண்டியா மும்பை அணியை கேப்டனாக வழி நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், ஹர்திக் பாண்டியா தன் சகோதரர் ஒருவரால் மேலும் ஒரு பிரச்சனைக்கு ஆளாகி இருக்கிறார். ஹர்திக் பாண்டியாவின் உடன்பிறந்த சகோதரர் க்ருணால் பாண்டியா. இவரும் இந்திய அணியிலும், ஐபிஎல் போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட் அணிக்காகவும் விளையாடி வருகிறார். கிரிக்கெட் சகோதரர்கள் இருவரும் பிஸினஸிலும் காலூன்ற நினைத்துள்ளனர். அதற்கு பாண்டியா சகோதரர்களின், ஒன்றுவிட்ட சகோதரர் வைபவ் பாண்டியா துணையாக வந்துள்ளார். மூவரும் சேர்ந்து, கடந்த 2021 ஆம் ஆண்டு ‘பாலிமர்’ என்ற நிறுவனத்தை தொடங்கினர். அதில், ஹர்திக் பாண்டியா மற்றும் க்ருணால் பாண்டியா தலா 40 சதவீதம் என்றும், ஒன்றுவிட்ட சகோதரர் வைபவ் பாண்டியா 20 சதவீதம் என்றும் முதலீடு செய்தனர். ஒப்பந்தத்தில் லாபத்தையும் இதே விகிதத்தில் பங்கிட்டுக் கொள்ள முடிவு செய்து கொண்டனர். இதில், ஹர்திக் மற்றும் க்ருணால் இருவருமே முழு நேர கிரிக்கெட் வீரர்கள் என்பதால் நிறுவனத்தை நிர்வகிக்கும் பொறுப்பை சகோதரர் வைபவ் பாண்டியா எடுத்துக்கொண்டுள்ளார்.

Police action Hardik Pandya's brother for Money laundering case

இதனையடுத்து வைபவ், தனது இரு சகோதரர்களுக்கும் தெரியாமல் அதே தொழிலில் ஈடுபடும் மற்றொரு நிறுவனத்தை ரகசியமாக துவக்கியுள்ளார். இது ஹர்திக், க்ருணால் பாண்டியாக்களுடன் செய்து கொண்ட ஒப்பந்த விதிகளுக்கு எதிரானது என்று தெரிந்தும் அவர் செய்ததாக கூறப்படுகிறது. மறுபுறம், சகோதரர்கள் மூவரும் இணைந்து கடந்த 2021 ஆம் ஆண்டு தொடங்கிய நிறுவனத்தின் லாபம் படிப்படியாக குறைய ஆரம்பித்துள்ளது. இதைக் கவனித்த ஹர்திக் பாண்டியா என்ன பிரச்சனை என நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்துள்ளார். அதில், ஹர்திக் பாண்டியாவிடம் சொல்லாமல் வைபவ் சொந்தமாக தனி நிறுவனத்தை தொடங்கி இருப்பது தெரிய வந்ததுள்ளது. தங்கள் குடும்பத்தில் ஒரு நபராக இருந்த வைபவ் பாண்டியாவை நம்பி, பாண்டியா சகோதரர்கள் புது நிறுவனத்தைத் தொடங்கிய நிலையில், அவரே இப்படி செய்தது பாண்டியா சகோதரர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வைபவ் பாண்டியா ரகசியமாக புதிய கம்பெனி தொடங்கியதால் பழைய கம்பெனிக்கு 3 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அதோடு ஹர்திக் பாண்டியாவிடம் சொல்லாமல் பழைய கம்பெனியில் தனக்கான லாபத்தின் சதவீதத்தை 20 சதவீதத்தில் இருந்து 33.3 சதவீதமாக வைபவ் அதிகரித்துக்கொண்டதாக கூறப்படுகிறது. அத்துடன் முதலில் மூன்று பேர் சேர்ந்து தொடங்கிய கூட்டு நிறுவனத்தில் கிடைத்த பணத்தை அடிக்கடி தனது சொந்த நிறுவனத்திற்கு வைபவ் மாற்றிக் கொண்டுள்ளார். பாண்டியா சகோதரர்களுக்கு தெரியாமல் இதுவரை ஒரு கோடி ரூபாய் வரை வைபவ் மாற்றியதாக தகவல் சொல்லப்படுகிறது. ஒருகட்டத்தில் ஹர்திக் பாண்டியாவிற்கு நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வந்த அதிர்ச்சி பின்னணி முழுமையாக தெரிய வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, ஹர்திக் பாண்டியா தன்னை ஏமாற்றிய வைபவிடம் விளக்கம் கேட்டு வாக்குவாதம் செய்ததாகவும், உடனே உனது பெயரை களங்கப்படுத்திவிடுவேன் என்று ஹர்திக் பாண்டியாவை வைபவ் மிரட்டியதாக தகவல் சொல்லப்படுகிறது.

இதையடுத்து, ஒன்று விட்ட சகோதரரால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஹர்திக் பாண்டியா, வைபவிற்கு எதிராக மும்பை பொருளாதார குற்றப் பிரிவு போலீஸில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து வைபவை கைது செய்து 5 நாள்கள் போலீஸ் காவலில் விசாரித்து வருகின்றனர். வைபவ் மொத்தம் 4.3 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளதாக ஹர்திக் பாண்டியா தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. விரிவான விசாரணைக்குப் பிறகே, மோசடி சம்பவம் குறித்து தகவல்கள் முழுமையாக தெரியவரும் என போலீசார் தகவல் தெரிவிக்கின்றனர். பிரபல கிரிக்கெட் வீரருக்கு சகோதரரால் நடந்த  மோசடி, கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.