Skip to main content

கரும்பு விவசாயி சின்னம் திட்டமிட்டு மறைக்கப்பட்டிருக்கிறது...- சீமான்

Published on 16/04/2019 | Edited on 16/04/2019

சென்னை சேப்பாக்கத்தில் பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில்,

 

நாம் தமிழருக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டது. ஆனால் வாக்கு இயந்திரத்தில் விவசாயி சின்னம் மட்டும் மற்ற சின்னங்களை விட தெளிவற்ற நிலையில் சிறியதாக பதிவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கில் இறுதி கட்டத்தில் எதுவும் செய்யமுடியாது என்று உச்சநீதிமன்றமும் சொல்லிருச்சு.

 

 

seeman

 

கடைசியாக இருப்பது மக்கள் மன்றம்தான் எனவே உங்கள் மூலமாக என் மக்கள்கிட்ட சின்னம் மறைக்கப்பட்டிருக்கிறது ரொம்ப சின்னதாகவும், மங்கலாகவும் உள்ளது என மக்களிடம் எடுத்தும் சொல்லும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.

 

மத்திய, மாநில அரசின் அழுத்தத்தால் இது நிகழ்ந்திருக்கிறது என நினைக்கிறீர்களா?

 

வாய்ப்பிருக்கிறது, தென் மாநிலத்தில் போட்டியிடும் எனக்கும், பவன் கல்யாணுக்கும்  மட்டும்தான் இது. தென்மாநிலத்தில் புதிய ஆற்றலாக வளர்ந்து வருகிறோம் எனும்போது அப்படித்தான் யோசிக்க தோணுகிறது. சுயேட்சை வேட்பாளர்களுக்கு கொடுக்கப்பட்ட சின்னங்கள் தெளிவாக அச்சிடப்பட்டுள்ள நிலையில் எங்கள் சின்னம் மட்டும்  மறைக்கப்பட்டிருக்கிறது. காரணம் வளர்த்திட கூடாது அதிக வாக்குகளை பெற்றிடக்கூடாது புதிய ஆற்றல் வந்திற கூடாது என்கிற நோக்கம் தான். 

 

நாங்கள் எடுத்து வைக்கிற, நான் ஒரு தேசிய இனத்தின் மகன், என் இனம் என்கிறேன், என் மலை, என் காடு, என் வளம் என்கிறேன். நாங்கள் வரும்போது உங்கள் இஷ்டத்துக்கெல்லாம் ஓஎன்ஜிசி குழாயை போட்டு மீத்தேன், ஈத்தேன் எடுக்க முடியாது. அப்போ எரிபொருளுக்கு என்ன செய்வேன் என்றெல்லாம் கேட்க கூடாது. சிங்கப்பூர் சின்ன நாடு அதுவும் ஈத்தேன் மீத்தேன் எடுக்கிறது மக்கிய மரக்கழிவு மற்றும் குப்பையிலிருந்து எடுக்கிறது. அவ்வளவு சின்ன நாடு அதை செய்யும்போது இவ்வளவு பெரிய நாடு மண்ணின் வளத்தை அழித்ததுதான் அதை எடுக்கணும்னா என்ன?

 

 

அணுவுலையாலதான் மின்சாரம் தயாரிக்க முடியுமா ஏன் காற்றாலை இல்லையா? மாற்று மின் பெருக்கத்துக்கு வழி இல்லையா? அதையெல்லாம் செய்யாமல் இந்த நாசகார திட்டங்களை இந்த அரசு என் மண்ணில் செய்ய நினைக்கிறது. இவ்வளவு மலைகள் இருக்கிறது ஆனால் நியூட்ரினோ திட்டத்தை  மேற்குத்தொடர்ச்சி மலையில்தான் செய்ய என்ன தேவை வருகிறது. இதிலிருந்தே தெரியவில்லையா தகப்பன் இல்லாத வீடு போல தலைவன் இல்லாத நாடாக தறிகெட்டு நிற்கிறது. வருபவர் போகிறவர் எல்லாம்  நாசகார திட்டங்களை கொண்டுவர நினைக்கிறார்கள். இந்த மண்ணின் பிள்ளைகளாக எங்கள் மண்ணின் வளத்தை பாதுக்காக்க சண்டை போடுவோம் அதனால் எங்களை போன்ற அரசியல் கட்சிகள் வளர்ந்திட கூடாது என நினைக்கிறார்கள்.

 

 

தரகர்களை தேர்ந்தெடுக்க கூடிய தேர்தல் அமைப்புதான் இங்கே இருக்கிறதே தவிர எளிய மக்களில் இருந்து தலைவர்களை தேர்ந்தெடுக்கும் அமைப்பு இல்லையே. எல்லாருமே முதலாளிகள். முதலாளிகள் தான் கோடி கொடுத்து சீட் பெறுகிறார்கள், காசு கொடுத்து ஓட்டு பெறுகிறார்கள் முதலாளிகளுக்கான அதிகாரம்தான் திரும்ப திரும்ப கட்டமைக்கப்படுகிறது. 

 

மக்களுக்கான ஆட்சியோ, அதிகாரமோ இங்கு நிறுவப்படவில்லையே. இவ்வளவு அடக்குமுறையையும் எதிர்கொண்டு நாங்கள் வளர்கிறோம் என்று அனுபவிக்கிற எங்களுக்குத்தான் தெரியும்.  கொடி ஏற்ற விடமாட்டார்கள், நாங்கள் கூட்டம் நடத்த அனுமதி கேட்டால் நாங்கள் கேட்ட இடத்தை விட்டு மக்கள் வரவே முடியாத சந்தில் இடம் தருவார்கள். இப்பொழுது அதிகாரத்தில் உள்ளவர்கள் வெற்றியை பெறவில்லை வெற்றியை வாங்குகிறார்கள்.

 

 

ஒரு இளம்தலைமுறை எப்படி நம்பிக்கையோடு எழுந்துவரும். ஒரு ஜனநாயகத்தின் மேல எவ்வளவு வெறுப்பு வரும். எதுவுமே சரியில்லை என்ற உணர்வு வராதா, அந்த சிந்தனை வராமல் இருக்க மயக்குவதற்கு சாதிய போதையை தூண்டுவது, மத போதையை தூண்டுவது, சாராயத்தை ஊற்றி கொடுப்பது, திரைக்கவர்ச்சியை வைத்து மயக்கிபோடுவது சிந்திக்கவே விடாமல் செய்வதுதான் இந்த அதிகாரமும், ஆட்சியாளர்களும் செய்யும் வேலை.

 

 

மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் நீட் தேர்வுக்கு அதிமுக விலக்கு கோரவில்லை அதேபோல் மத்திய  அமைச்சர் நிதின் கட்கரி எட்டுவழி சாலை முறைப்படி கொண்டுவரப்படும், என கூறியுள்ளனர் அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

 

 

எட்டுவழி சாலைபோடுவதை இவர்கள் தீர்மானிக்க முடியாது. இது சாகர்மாலா திட்டத்தினுடைய கிளை திட்டம். பீம்ஸ் ஸ்டெக் என்ற அமைப்பு செயல்படுத்துகிறது. நமது நாட்டின் வளத்தை கொள்ளையடிக்கத்தான் சாலை போக்குவரத்து, தொடர்வண்டி போக்குவரத்து, வானூர்தி போக்குவரத்து எல்லாத்தையும் கடல் போக்குவரத்தில் இணைக்க இந்த முயற்சி. எட்டுவழி சாலை போடுவேன் என்பது அவர்களின் முடிவு. ஆனால் அது நடக்கவே நடக்காது என்பது மக்களின் முடிவு என்று கூறினார்.

 

 

நாம் தமிழர் கட்சியின் சின்னமான கரும்பு விவசாயி சின்னம் வாக்குப்பதிவு  இயந்திரத்தில் தெளிவாக இல்லை, எனவே வாக்குபதிவு இயந்திரத்தில் தெளிவாக சின்னத்தைப்  பதியக்கோரி உச்சநீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக மனு தாக்கல் செய்திருந்தது குறிப்படத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'சின்னம் கிடைக்காதவர்கள் பொறாமையில் பேசுகிறார்கள்' - ஜி.கே. வாசன் பதில்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
'Those who don't get the symbol speak in envy'-GK Vasan Answer

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த கரும்பு விவசாயி சின்னத்திற்குப் பதிலாக மைக் சின்னம் கொடுக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து சின்னம் தொடர்பான பிரச்சனையில் மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் சிக்கின. மதிமுக பம்பரம் சின்னம் கேட்ட நிலையில், தேர்தல் ஆணையம் அச்சின்னத்தை தர முடியாது எனத் தெரிவித்திருந்தது. அதேபோல் விசிகவும் பானை சின்னம் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.

அண்மையில் புதிய சின்னமான மைக் சின்னத்தை அறிமுகப்படுத்திய நாம் தமிழர் கட்சியின் சீமான், ''தங்களுடைய கட்சிக்கு மட்டுமல்லாது மதிமுகவிற்கும் சின்னம் ஒதுக்குவதில் தேர்தல் ஆணையம் சுணக்கம் காட்டுகிறது. இரண்டு தொகுதியில் போட்டியிட்டால் தான் கேட்கும் சின்னம் கொடுக்கப்படும் எனச் சொல்கிறது. அப்படி பார்த்தால் விசிக இரண்டு தொகுதிகளில் தானே போட்டியிடுகிறது அவர்களுக்காவது  கேட்கும் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்க வேண்டும். இதே பாஜக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ், அமமுக ஆகிய கட்சிகளுக்கு கேட்கும் சின்னம் கிடைத்துள்ளது. பாஜக கூட்டணியில் இருந்தால் கேட்ட சின்னம் கிடைத்திருக்கும்'' எனத் தெரிவித்திருந்தார்.

nn

இந்த நிலையில், காஞ்சிபுரத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''சில கட்சிகளுக்கு சின்னங்கள் கிடைக்கவில்லை என்று அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பொறாமையோடு பேசிக் கொண்டிருக்கிறார்கள். நீதிமன்றமே ஒரு தெளிவான உத்தரவை கொடுத்திருக்கிறது. முறையாக கணக்கு வழக்குகளை கொடுத்தால் உங்களுக்கு சின்னம் கிடைக்கும். அதை சரிவர செய்யாமல் எங்களுக்கு எங்களுடைய சின்னம் வேண்டும் என்று கேட்டால் சட்டத்திலேயே அதற்கு இடம் கிடையாது. தேர்தல் ஆணையம் நினைத்தவர்களுக்கு நினைத்ததை கொடுக்க முடியாது. அதற்கான அதிகாரம் அவர்களுக்கு இந்தியாவில் கிடையாது. நம்முடைய சின்னம் முக்கியம் என்றால் சின்னத்திற்கு ஏற்ற அரசியல் கட்சிகள் தங்களுடைய கோட்பாடுகளை முறையாக சரியாக செய்திருக்க வேண்டும். அது அவர்களுடைய கடமை'' என்றார்.

Next Story

'நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம்' - அதிகாரப்பூர்வமாக அறிவித்த சீமான்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
'Mike symbol for Naam Tamilar Party'-Seeman official announcement

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் நிலையில், சின்னம் தொடர்பான பிரச்சனையில் சிக்கியிருந்தது. சின்னம் உறுதியாகும் முன்னரே 40 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்தி இருந்தார். குறிப்பாக நாம் தமிழர் கட்சியில் கிருஷ்ணகிரி தொகுதியில் வீரப்பன் மகள் வித்யா ராணி அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி (mike) சின்னம் ஒதுக்கப்பட்டதை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதற்கான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய சீமான், ''மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி என்ற முழக்கத்தை முன்வைத்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளோம். தேர்தல் ஆணையம் தன்னாட்சி அமைப்பாக செயல்படவில்லை. இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஒலிவாங்கி ( MIKE) சின்னத்தில் போட்டியிடும். நாம் தமிழர் எப்படி 7 விழுக்காடு வாக்கை பெற்றது என்பதுதான் எல்லோருக்கும் வியப்பு. இந்த தேர்தலில் என்ன நடக்கும் என ஜூன் 4 ஆம் தேதி பார்ப்போம்'' என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் மதிமுக போல விசிகவும் பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என நீதிமன்றத்தை நாடியுள்ளது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு, ''மதிமுக, விசிக, பாஜக கூட்டணியில் இல்லை அதனால் சின்னம் கிடைக்கவில்லை. பாஜக கூட்டணியில் உள்ளதால் அமமுக டி.டி.வி. தினகரனுக்கு குக்கர் சின்னமும், த.மா.கா. ஜி.கே. வாசனுக்கு சைக்கிள் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக உடன் கூட்டணி வைத்திருந்தால் நாங்கள் கேட்ட சின்னம் கிடைத்திருக்கும். ஒரு தொகுதியில் போட்டியிட்டால் பம்பரம் சின்னம் இல்லை என்று சொல்கிறதே தேர்தல் ஆணையம், திருமாவளவன் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறாரே அவர் கேட்கும் சின்னத்தை கொடுங்களேன். அறம் சார்ந்து நில்லுங்க'' என்று பதிலளித்தார்.