Skip to main content

திடீர் மழையால் குளிர்ந்த சென்னை; 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

 

nn

 

சென்னையில் கோடை வெயில் சுட்டெரித்த நிலையில் திடீரென மழை பொழிந்ததால் குளிர்ச்சி நிலவியது. சென்னையில் வடபழனி, அசோக் நகர், கிண்டி, வேளச்சேரி, போரூர், அண்ணா சாலை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது. அதேபோல் சென்னையின் புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, வண்டலூர், சிங்கபெருமாள்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

 

அதேபோல் தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 20 மாவட்டங்களில் கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி குமரி, நெல்லை, கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம் மாவட்டங்களிலும் நாமக்கல், வேலூர், திண்டுக்கல், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், புதுச்சேரி, கள்ளக்குறிச்சி பகுதிகளிலும் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !