Skip to main content

சென்னை சென்ட்ரல் எதிரே திடீர் பள்ளம்...!!

Published on 25/11/2020 | Edited on 25/11/2020

 

Sudden Groove in front of Chennai Central ... !!

 

'நிவர்' புயலானது தற்பொழுது கடலூரிலிருந்து 80 கிலோமீட்டர் கிழக்கு, தென்கிழக்குத் திசையில் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் நகரும் வேகம் 13 கிலோ மீட்டரில் இருந்து 14 கிலோமீட்டராக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் இருந்து 85 கிலோ மீட்டரிலும், சென்னையில் இருந்து 160 கிலோ மீட்டரிலும் புயலானது நிலைகொண்டுள்ளது.

 

'நிவர்' புயல் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்து வருவதால், ஆங்காங்கே நீர் தேங்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே, 20 அடி ஆழத்திற்குப் பள்ளம் ஏற்பட்டிருக்கிறது. சென்னை சென்ட்ரல் நிலையம் எதிரே, ஏற்கனவே மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் 'சப்-வே' அமைப்பதற்காகப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், கனமழை காரணமாக, இந்தப் பள்ளம் ஏற்பட்டிருக்கிறது. திடீர் பள்ளத்தால் அந்தப் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னையில் ரயில் எஞ்சின் தடம் புரண்டு விபத்து!

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
Train derailment accident in Chennai
மாதிரிப்படம்

சென்னை சென்ட்ரல் அருகே ரயில் எஞ்சின் தடம் புரண்டு விபத்து நிகழ்ந்துள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள சாணிகுளம் என்ற இடத்தில் நள்ளிரவு ஒரு மணியளவில் காலியாக ரயில் ஒன்று சென்று உள்ளது. அப்போது எதிர்பாராதவிதாக இந்த ரயிலின் எஞ்சின் தண்டாவளத்தில் இருந்து விலகி கீழே இறங்கியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே ஊழியர்கள், தடம் புரண்ட ரயில் பெட்டியின் சக்கரத்தை தண்டவாளத்திற்கு உயர்த்தும் பணியில் ஈடுபட்டனர். ரயில் எஞ்சின் மற்றும் தண்டவாளம் சீரமைப்பு பணிகள் நள்ளிரவு 01.15 மணி முதல் அதிகாலை 3 மணிவரை  நடைபெற்றது. ரயில் தடம் புரண்ட சம்பவம் ரயில்வே துறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

Next Story

சென்னையில் ரயில் தடம் புரண்டு விபத்து! 

Published on 15/12/2023 | Edited on 15/12/2023
Train derailment incident in Chennai

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டு விட்டு இன்று மதியம் 2.30 மணியளவில் பேசின்பிரிட்ஜ் ரயில் பணிமனைக்குச் சென்ற பயணிகள் ரயில் ஒன்று தடம் புரண்டது. இந்த விபத்தில் ரயில் பெட்டியின் 4 சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கின. இந்த ரயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே ஊழியர்கள், தடம் புரண்ட ரயில் பெட்டியின் சக்கரத்தை தண்டவாளத்திற்கு உயர்த்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பயணிகள் ரயில் தடம் புரண்ட சம்பவம் ரயில்வே துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.