Skip to main content

மாற்றுத்திறனாளி முதியவருக்கு மூன்று சக்கர சைக்கிளை வாங்கி கொடுத்த மாணவ, மாணவிகள்!

Published on 13/12/2021 | Edited on 13/12/2021

 

Students who bought a tricycle for a disabled old man!

 

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகரத்தில் தில்லை மெட்ரிக் நாட்டுப்பிள்ளை தெருவில் உள்ளது. இந்த பள்ளியின் வழியாக சி.தண்டேஸ்வரநல்லூர் ஊராட்சியில் வசிக்கும் மாற்றுத்திறனாளி முதியவர் ராமலிங்கம் (வயது 61) அவ்வப்போது இரண்டு கவட்டி தடியைப் பயன்படுத்தி நடந்து செல்வார். சில நேரங்களில் மிகவும் சிதிலமடைந்த மூன்று சக்கர சைக்கிளில் கையால் மிதிக்க முடியாமல் சைக்கிளை ஓட்டி செல்வார். இதனை அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் பார்க்காமல் இருந்திருக்க முடியாது.

 

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் அந்த முதியவர் முடியாத நிலையில் இரு கவட்டி தடிகளை ஊன்றியவாறு தில்லை மெட்ரிக் பள்ளி வகுப்பறையில் மாணவர்கள் கல்வி பயின்று கொண்டிருந்தபோது அங்கிருந்த ஆசிரியரிடம் மிகவும் முடியவில்லை என்றும் இருக்கிற சைக்கிளும் மிகவும் பழுதாகி விட்டது. எதாவது உதவி செய்யுங்கள் எனக் கேட்டுள்ளார். அப்போது அங்கிருந்த ஆசிரியர் முதியவரைக் கண்டிப்பாக உதவி செய்கிறோம் என்று சமாதானம் செய்து அனுப்பி வைத்து உள்ளார்.

 

இந்த சம்பவத்தைப் பார்த்த சக மாணவர்கள் பள்ளியில் படிக்கும் 1- ஆம் வகுப்பு முதல் 8- ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் மத்தியில் பகிர்ந்துள்ளனர். பின்னர் மாணவ, மாணவிகளே தானாகவே பெற்றோரின் அனுமதியுடன் வீட்டில் சேர்ந்து வைத்திருந்த உண்டியல் காசு, சிலர் இந்த சம்பவத்தை பெற்றோர்களிடம் கூறி அவர்களால் முடிந்த காசுகளை வாங்கி வந்து ஆசிரியர்களிடம் கொடுத்து அந்த முதியவருக்கு ஒரு புதிய மூன்று சக்கர சைக்கிள் வாங்கி கொடுங்கள் சார் என்று கூறியுள்ளனர். இதனைக் கேட்ட ஆசிரியருக்கு திகைப்பை ஏற்படுத்தியது. பின்னர் மாணவர்கள் எடுத்து வந்த சிறு சிறு காசுகளை ஆசிரியர்கள் எண்ணியபோது ரூபாய் 7,200 இருந்துள்ளது.

 

இதுகுறித்து பள்ளியின் தாளாளரிடம் ஆசிரியர்கள் கூறியவுடன் மகிழ்ச்சி அடைந்த பள்ளியின் தாளாளர் இதற்கு தானாகவே நிதி திரட்டிய அனைத்து மாணவர்களையும் அழைத்து எந்த நிலையிலும் உதவ வேண்டும் என்ற எண்ணம் சிறுவயதில் வளர்த்து கொண்டதற்கு வாழ்த்து கூறியுள்ளார்.

 

பின்னர் ஒரு ஆசிரியரை அனுப்பி புதிய மூன்று சக்கர சைக்கிளை வாங்கி வர அனுப்பியுள்ளார். கடைக்காரரோ ரூபாய் 7,800 எனப் பிடிவாதமாக இருந்துள்ளார். அப்போது அந்த ஆசிரியர் மாணவர்கள் நிதி திரட்டிய விசயத்தை கடைக்காரரிடம் கூறியவுடன் ரூபாய் 600 குறைக்கப்பட்டு ரூபாய் 7,200- க்கு புதிய மூன்று சக்கர சைக்கிளை வாங்கினர்.

 

இதனை சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளி முதியவாரன ராமலிங்கத்தை திங்கள் கிழமை பள்ளிக்கு அழைத்து வந்து அனைத்து மாணவர்கள் மத்தியில் அவருக்கு புதிய மூன்று சக்கர சைக்கிளை பள்ளியின் தாளாளர் உள்ளிட்ட ஆசிரியர் மத்தியில் மாணவ, மாணவிகள் வழங்கி மகிழ்ச்சியுடன் முதியவருக்கு கை குலுக்கினார்கள். மாணவ கண்மணிகள் கை குலுக்கியது தாத்தா நாங்கள் இருக்கிறோம் எதற்கும் கவலை அடையாதீர்கள் என்பதுபோல் இருந்தது.

 

மாணவர்கள் வழங்கிய சைக்கிளில் அமர்ந்த முதியவர் கண்ணீர் மல்க அனைவருக்கும் கைகூப்பி நன்றியை தெரிவித்துக் கொண்டார். இந்த சம்பவம் அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

 

இதுகுறித்து பள்ளியின் தாளாளர் செந்தில்குமார் கூறுகையில், "பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் முதல் உறுதிமொழியாக கூறுவது நாம் பள்ளிக்கு வரும் வழியிலோ அல்லது சுற்றுப்புறத்திலோ பலர் நம்மளவிட துயரத்தில் இருப்பார்கள் அவர்களுக்கு நம்மால் முடிந்த அளவுக்கு எதோ ஒரு வகையில் உதவ வேண்டும் என்பதை நாட்டில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டி ஆசிரியர்கள் மனிதநேயத்தை வளர்க்கும் விதமாக கூறிவருகிறார்கள். அதன் அடிப்படையில் மாணவர்கள் சிறுவயதிலே இதுபோன்று தானாக மனிதநேயத்தை வளர்த்து கொண்டது மகிழ்ச்சியை அளிக்கிறது. இதில் பள்ளி நிர்வாகத்தின் பங்கு ஒன்றும் இல்லை" என்றார்.    

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியாவின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்கிய நாள்” - தொல்.திருமாவளவன்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
today India redemption started writing from Tamil Nadu says Thirumavalavan

சிதம்பரம் நடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்குட்பட்ட அவரது சொந்த ஊரான அங்கனூர்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனது தாயாருடன் வாக்களித்தார்.

இதனைதொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே வந்து பேசுகையில், இந்த தேர்தல் இரண்டு கட்சிகளுக்கு எதிரான தேர்தல் அல்ல. சங்‌பரிவார் மற்றும் இந்திய மக்களுக்கு இடையேயான தர்ம யுத்தம்.  நாட்டு மக்கள் வெற்றிபெற வேண்டுமென்பதற்காக இந்தியா கூட்டணி மக்கள் பக்கம் நிற்கிறது.‌ இந்திய அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும்.‌ நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.‌தமிழ்நாட்டில் 40க்கும் 40 இடங்களிலும் வெற்றி பெறும்.

கூட்டணி பலம், திமுக அரசின் மூன்றாண்டுகள் நலத்திட்டங்கள், இந்தியா கூட்டணியின் நோக்கங்களால் எங்கள் அணி மாபெரும் வெற்றி பெறும். இந்த தேசத்தின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்குகிறோம் என்பதை அறிவிக்கும் நாள் இன்று. தமிழ்நாட்டுப் பெண்கள் திமுக அரசின் மீது நன்மதிப்பை கொண்டுள்ளனர். டெல்லியில் பாஜக வென்றால் மாநில அரசுகளை கலைக்கும் நிலை வரலாம், அப்படி நடந்தால் மகளிர் உரிமைத் தொகைக்கு ஆபத்து வரலாம்.‌ தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும். ஆந்திரா, தெலுங்கானா கர்நாடகா மற்றும் கேரளாவில் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். சிதம்பரம் தொகுதியில் பானை சின்னம் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்” என்றார்.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.