Skip to main content

முதல்வரை பள்ளிக்கு அழைத்த மாணவர்கள்... பச்சலூர் ஹைடெக் பள்ளியில் பணிகள் தீவிரம்!

Published on 03/06/2022 | Edited on 03/06/2022

 

'தமிழ்நாட்டில் இப்படி ஒரு அரசுப் பள்ளியா?' என அனைவரையும் வியக்க வைத்திருக்கிறது புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி. ஒரு பள்ளி மாணவனுக்கு என்னவெல்லாம் கற்றுக் கொடுக்க வேண்டுமோ அத்தனையும் ஒரே இடத்தில் கற்றுத்தரப்படுகிறது.

 

அழகான, சுத்தமான வகுப்பறைக்குள் நுழைந்தால் 5 நட்சத்திர விடுதி அறைக்குள் நுழைந்தது போல இருக்கும். ஏ.சி, கணினி, ஸ்மார்ட் போர்டு, மாணவர் மனசு, குடிநீர், சீப்பு கண்ணாடி, புத்தக சுமையை குறைக்க அலமாரிகள் என நூற்றுக்கணக்கான வசதிகள். அத்தனை வசதிகளையும் ஏற்படுத்த 70 நாட்களே ஆனது என்கிறார் ஒட்டுமொத்த தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்த பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதிமணி. அத்தனையும் பொதுமக்கள், பெற்றோர்களின் உதவியுடன் அரசின் திட்டங்களையும் நிதியையும் பெற்று செய்யப்பட்டது. அனல் பறக்கும் வெயிலில் நின்று 100 நாள் வேலை செய்யும் பெண்கள் கூட பள்ளியின் வளர்ச்சிக்கு உதவியுள்ளார்கள்.

 

இப்படி ஒரு பள்ளியை மாங்குடியில் உருவாக்க 15 ஆண்டுகள் ஆனது பச்சலூரில் உருவாக்க 70 நாட்களே ஆனது என்பது வியப்பில்லை. இந்தப் பள்ளியைப் பார்க்க பல பள்ளி பெற்றோர்களும் வந்து பார்த்த பிறகு வீட்டுக்குச் செல்ல மனமில்லாமல் செல்கிறார்கள்.

 

அப்படி வந்தவர்கள் தான் வடகாடு புள்ளாச்சி குடியிருப்பு மக்களும். பள்ளியை பார்த்த அடுத்த நாளே, ஆண்டுவிழாவில் கலந்து கொண்டு நவீன வகுப்பறை அமைக்க நிதி வழங்கிய அமைச்சர் மெய்யநாதனின் ஊக்கத்தில், பச்சலூர் பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதிமணி ஆலோசனையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி, திருவரங்குளம் வட்டார கல்வி அலுவலர் கருணாகரன் மேற்பார்வையில் தங்கள் பள்ளியையும் நவீனப்படுத்தி வருகின்றனர். இதேபோல புதுக்கோட்டை விடுதி, மினிகந்தா, அழியாநிலை பள்ளிகளும் நவீனமாகி வருகிறது.

 

இந்தப் பள்ளிகள் பற்றி நக்கீரன் மற்றும் நக்கீரன் இணையத்தில் வீடியோ செய்திகள் வெளியானது. அதில் டெல்லி சென்ற முதல்வர் அய்யா ஒரு பள்ளியை பார்த்து இதுபோல பள்ளிகள் உருவாக வேண்டும் என்றார். முதல்வரய்யா ஒரு முறை எங்க பள்ளிக்கு வந்து பாருங்க என்று பச்சலூர் பள்ளி மாணவர்கள் முதல்வருக்கு அழைப்புக் கொடுத்ததையும் பதிவு செய்திருந்தோம்.

 

நக்கீரனில் இந்த செய்தி வெளியான நாளில் முதல்வர் அலுவலகம் பச்சலூர் பள்ளி பற்றிய தகவல்களை மாவட்ட நிர்வாகத்திடம் கேட்ட நிலையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி பள்ளிக்குச் சென்று ஆய்வு செய்து அறிக்கை கொடுத்துள்ளார். 8 ந் தேதி நலத்திட்ட உதவிகள் வழங்க புதுக்கோட்டை வரும் முதல்வர் பச்சலூர் பள்ளிக்கும் செல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டு வருகிறது.

 

இதனையடுத்து பச்சலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதிய வர்ணம் தீட்டும் பணிகள் தொடங்கி சிறுசிறு திருத்தப்பணிகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் அறந்தாங்கியிலிருந்து பச்சலூர் வழியாகக் காரைக்குடி செல்லும் சாலையில் புதுப்பட்டி வரை சாலையோர செடி கொடிகள் அகற்றப்பட்டு வருகிறது. மேலும் முதலமைச்சர் பச்சலூர் வந்தால் தலைமை ஆசிரியர் ஜோதிமணி முதலில் உருவாக்கிய மாங்குடி பள்ளியையும் பார்க்க செல்வாரோ என்று மாங்குடி பள்ளியிலும் திருத்த பணிகளும் நடந்து வருகிறது.

 

சில வருடங்களுக்கு முன்பு நக்கீரன் வீடியோவில் வெளியான மாங்குடி, பச்சலூர் பள்ளிகளை டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பார்த்தார். தற்போது தமிழக முதல்வர் பச்சலூர் வருகிறார் என்பது மகிழ்ச்சியாக உள்ளது. இதேபோல தமிழகத்தில் உள்ள பள்ளிகளை மாற்ற வேண்டும் என்கின்றனர் கிராம மக்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.

 

Next Story

தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி- சட்டக்கல்லூரி மாணவர் கைது

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Law college student arrested for fraud of getting a job in the Secretariat

தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் புதுக்கோட்டையில் நடந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சன்னதிவயல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் சத்யராஜ் (37). தனியார் நிதி நிறுவனத்தில் வசூல் செய்யும் ஊழியராக உள்ளார். இவர் கடந்த 25 அம் தேதி அறந்தாங்கி காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில் 'நான் அரிமளம் பகுதிக்கு சென்றிருந்த போது மீனாட்சிபுரம் ரோடு பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் கார்த்திக் அறிமுகமானார். தான் சென்னை செட்டியார் சட்டக்கல்லூரி மாணவர் என்றும் சோசியல் மீடியாவில் நிறைய பதிவுகள் போடுவேன். எனக்கு அரசியல்வாதிகள், அதிகாரிகளுடன் நல்ல பழக்கம் உள்ளது என்றும் சொன்னார்.

அதன் பிறகு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தலைமை செயலகத்தில் யாருக்காவது வேலை வேண்டும் என்றால் சொல்லுங்கள் வாங்கித் தருகிறேன் என்றார். அப்போது எனக்கே வேலை வேண்டும் என்றேன். அதற்கு ரூ.3 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என்றார். நானும் அவர் சொன்னதை நம்பி நான் சேமித்து வைத்திருந்த பணம் ரூ.1 லட்சத்தை வங்கி கணக்கில் செலுத்துவதாக சொன்ன போது வேண்டாம் நேரில் வாங்கிக் கொள்கிறேன் என்று சொன்னவர் கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி கார்த்திக் புதுக்கோட்டை வந்திருப்பதாக தெரிந்தது. நானும் என் நண்பன் பாலகிருஷ்ணனும் அன்று மாலை புதுக்கோட்டை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சந்தித்து முதல் தவணையாக ரூ.1 லட்சம் பணமாக கொடுத்தேன். பணத்தை வாங்கிக் கொண்டவர் மீதி ரூ.2 லட்சத்தை ரெடி பண்ணுங்க என்று சொல்லிவிட்டு போனார்.

அதன் பிறகு வேலை என்னாச்சு என்று கேட்க பலமுறை அவரை தொடர்பு கொண்டும் போனை எடுக்கவில்லை. இந்நிலையில் தான் இன்று (ஏப்ரல் 25 ஆம் தேதி) அறந்தாங்கி எம்ஜிஆர் சிலை அருகே நான் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த ஒரு நபர் என்னிடம் நங்கள் தான் சத்திரயாரஜா என்று கேட்டவர் கார்த்திக் உங்களிடம் பேச வேண்டும் என்று சொன்னார் என்று சொல்லிவிட்டு அவரது செல்போனில் வாட்ஸ் அப் காலில் கார்த்திக்கிடம் பேசச் சொன்னார். அப்போது ஏன் என் போனை எடுக்கவில்லை. என் வேலை, பணம் என்னாச்சு என்று கேட்ட போது, உன் பணம் வெளியில் கொடுத்துவிட்டேன். இனிமேல் பணமும் இல்லை, வேலையும் இல்லை என்று சொன்னதோடு இனிமேல் பணம் கேட்டால் எனக்குத் தெரிந்த காரைக்குடி ரவுடிகளை வைத்து உன்னை தீர்த்துக்கட்டிவிடுனே் என்று கொலை மிரட்டல் செய்ததோடு தகாத வார்த்தைகளிலும் பேசிவிட்டு போனை நிறுத்திவிட்டார். என்னிடம் போனைக் கொடுத்த நபரும் என்னை மிரட்டிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

எனக்கு தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக என்னிடம் பணமும் வாங்கிக் கொண்டு ஏமாற்றிவிட்டு என்னையும் என் குடும்பத்தையும் கொன்று விடுவதாக கொலை மிரட்டல் விடுத்த கார்த்திக் மீது நடவடிக்கை எடுத்து என் பணத்தையும் மீட்டுத் தர வேண்டும் என்று அந்தப் புகாரில் கூறியுள்ளார்.

புகார் குறித்து வழக்கு பதிவு செய்த அறந்தாங்கி காவல் ஆய்வாளர் கருணாகரன் தனிப்படை அமைத்து வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த சட்டக்கல்லூரி மாணவர் கார்த்திக்கை சென்னையில் கைது செய்து அறந்தாங்கி காவல் நிலையம் கொண்டு வந்துள்ளனர். மேலும் விசாரனைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் சென்னை முதல் அறந்தாங்கி வரை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.