Skip to main content

பள்ளி மாணவிகளை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியை!

Published on 15/02/2020 | Edited on 15/02/2020

திண்டுக்கல் பாரதிபுரம்  சந்தைரோடு பகுதியில் மாநகராட்சி மூலம் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் திண்டுக்கல் நகரில் உள்ள மேட்டுப்பட்டி, நாகல்நகர், பாரதிபுரம் உள்பட  பல்வேறு பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் எட்டாம் வகுப்பு வரை படித்து வருகின்றனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியையாக சாந்தினி என்பவர் பணியாற்றி வருகிறார். இப்பள்ளியில் தமிழ்வழி மட்டுமல்லாது ஆங்கில வழிக் கல்வியும் கற்பிப்பதால் இங்கு தங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்க பெற்றோர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த ஆண்டு திண்டுக்கல்லில் அதிகம் சேர்க்கை நடைபெற்ற அரசு பள்ளிகளில்  இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. 

 

students cleans school toilet

 



இந்த நிலையில்  தான் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகும்  வகையில் ஒரு பெரும் அவலமும் இந்த அரசு பள்ளியில் நடந்துள்ளது. இப்பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளில் தினமும் இருவரை அங்குள்ள கழிவறைகளை தலைமை ஆசிரியை சாந்தினி  தினமும் சுத்தப்படுத்த வேண்டும் என வற்புறுத்தியதாகவும், டீ வாங்கி வருதல் வீட்டுக்கு தேவையான காய்கறி வாங்கி வருதல் உள்ளிட்ட தேவைகளுக்கு மாணவ மாணவிகளை தலைமை ஆசிரியை சாந்தினி பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து களத்தில் இறங்கிய அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் மாணவிகள் கழிவறையை சுத்தம் செய்யும் காட்சியை தங்களது செல்போனில் ரகசியமாக புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இந்த விஷயம் சிறிது நேரத்தில் சமூகவலைதளத்தில் தமிழகம் முழுவதும் பரவியது. கழிவறையை சுத்தம் செய்யும் காட்சியை கண்டு பெற்றோர் மட்டுமல்லாது சமூக ஆர்வலர்கள் பலரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இப்படி  மாணவிகளை மிகவும் கீழ்த்தரமான முறையில் நடத்திய தலைமை ஆசிரியை சாந்தினி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இதுபோன்ற அவலங்கள் இனிமேலும் தொடரக்கூடாது என்னும் வகையில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
   

சார்ந்த செய்திகள்

Next Story

‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கத்தோடு பள்ளி மீது தாக்குதல்; வெளியான அதிர்ச்சி வீடியோ!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Incident on school chanting Jai Sriram  Shocking video released in telangana

தெலுங்கானா மாநிலம், மன்செரியல் மாவட்டம், கண்ணேபல்லி கிராமத்தில் அன்னை தெரசா உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில், அந்தக் கிராமத்திலும், அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்தும் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று(18-04-24) 50க்கும் மேற்பட்டவர்கள் காவி உடை அணிந்து, இந்தப் பள்ளிக்குள் நுழைந்து, அங்கிருந்த அன்னை தெரசா சிலை உள்ளிட்டவற்றின் மீது கல் வீசி பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், அவர்கள் ஜெய்ஸ்ரீ ராம் என்று முழக்கமிட்டவாறு அந்தப் பள்ளி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதத்ளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து பள்ளியின் முதல்வரான கேரளாவைச் சேர்ந்த ஜெய்மன் ஜோசப்பிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு காவி நிற உடை அணிந்து சில மாணவர்கள் பள்ளிக்கு வந்துள்ளனர். இதனைக் கண்ட அப்பள்ளி முதல்வர், அந்த மாணவர்களை அழைத்து விசாரணை நடத்தியுள்ளார்.

அதற்கு அந்த மாணவர்கள், 21 நாள்கள் அனுமன் தீட்சை சம்பிரதாயத்தைக் கடைபிடிப்பதாக கூறியுள்ளனர். அதனால், பள்ளி முதல்வர், மாணவர்கள் தங்களுடைய பெற்றோர்களைப் பள்ளிக்கு அழைத்து வருமாறு கூறியுள்ளார். இதன் காரணமாக, இன்று காவி உடை அணிந்து வந்த கும்பல் பள்ளி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது தெரியவந்தது.. .

மேலும், இந்தத் தாக்குதலில் பள்ளி முதல்வர் ஜோசப்பை சுற்றி வளைத்து அடித்து, அவரது நெற்றியில் வலுக்கட்டாயமாக திலகமிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, மாணவர்களின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில், மத உணர்வுகளைத் தூண்டுதல், மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்ப்பது தொடர்பான பிரிவுகளின் கீழ் பள்ளி முதல்வர் உட்பட இரண்டு ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.