Skip to main content

வனப்பகுதியின் நடுவே அமர்ந்து ஆன்லைன் தேர்வு எழுதிய மாணவி!

Published on 29/06/2021 | Edited on 29/06/2021

 

The student who went six kilometers and wrote the online exam

 

நெல்லை மாவட்டத்தின் அம்பை நகர் அருகே உள்ள பாபநாசம், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ளது. இந்த மலைப் பகுதியில் காரையாறு - முண்டந்துறை புலிகள் காப்பக வனப்பகுதி அமைந்திருக்கிறது. முழுக்க முழுக்க வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் முண்டந்துறை புலிகள் வனக் காப்பகம் தடைசெய்யப்பட்டப் பகுதியாகும். குறிப்பாக தரைப் பகுதியிலிருக்கும் தொழில்நுட்ப வசதிகள் இந்த முண்டந்துறை மலையின் மீது கிடையாது. அதன் காரணமாகவே அங்கு செல்ஃபோன் டவர்கள் ஏதும் அமைப்பதற்கு வனத்துறை அனுமதிப்பதில்லை. ஏனெனில் அவ்வாறு அமைக்கப்படுமேயானால் அது தொடர்பான சிக்னல்கள், அதிர்வலைகள் மற்றும் ஆட்கள் புழங்குவது புலிகளின் சுதந்திர நடமாட்டத்திற்கு இடையூறாக இருக்கும் என்பதால்தான்.

 

முண்டந்துறை மலைப்பகுதிக்கு மேலே காரையாறு, சேர்வலாறு, மயிலாறு, இஞ்சிக்குழி உள்ளிட்ட வனப்பகுதிகள் உள்ளன. இந்த மலைப் பகுதியில் பழங்குடியின மக்களான காணிகள், குடும்பம் குடும்பமாக வசிக்கின்றனர். இவர்கள் தங்களின் தொடர்புகளுக்காக செல்ஃபோன்கள் வைத்திருந்தாலும் செல்டவர் இல்லாததால் வெளிப்பகுதியினர் யாரையும் தொடர்புகொள்ள இயலாது. வாரம் ஒருமுறை தங்களின் விளை பொருட்களை விற்பதற்காக பாபநாசம் நகருக்குத் தரையிறங்கும்போதுதான் அவர்கள் மற்றவர்களைத் தொடர்புகொள்ள முடியும். தங்களது டீலிங்குகளை அன்றைய தினம் மட்டுமே வைத்துக்கொள்கிறார்கள். ஏனெனில் மலையேறிவிட்டால் தொடர்பு கட் ஆகிவிடும் என்பதே. 

 

The student who went six kilometers and wrote the online exam

 

அடிப்படை வசதியில்லாத இங்குள்ள காணி இன மக்களின் பிள்ளைகள் ஆரம்பக் கல்வியை அங்குள்ள காணியின அரசுப் பள்ளியில் மட்டுமே படிக்க முடியும். மேற்படிப்பு படிக்க வேண்டுமென்றால் கீழேயுள்ள பாபநாசம், வி.கே.புரம் நகருக்குத் தரையிறங்க வேண்டிய கட்டாய நிலை. அடிப்படைத் தேவையான கல்வியைக் கற்பதற்குக் கூட மலைமீதுள்ள காணியின மக்களின் பிள்ளைகள் பெரும் சிரமத்தைச் சந்திக்க வேண்டியுள்ளது. இது காலம் காலமாக நடைபெற்றுவரும் அவலங்களில் ஒன்று. போக்குவரத்து வசதி என்றால் கரையாறு பகுதிவரை மட்டுமே செய்யப்பட்டுள்ளது. மற்றபடி இந்த இன மக்களின் குடியிருப்புப் பகுதிகளுக்கு நேரடி போக்குவரத்து கிடையாது. இங்குள்ள காரையாறு பழங்குடியின காணியின மக்களின் பிள்ளைகள் வி.கே.புரம் பள்ளிகளில் 10, 11, 12ஆம் வகுப்பு பயின்றுவருகின்றனர். நேரடி படிப்பின்றி ஆன்லைன் கல்வி படிப்புதான். இவர்களுக்கு செல் டவர் இல்லாததால் அது எட்டாக் கனியாகிவிட்டது. 

 

கடந்த ஆண்டு கரோனா தொற்று காரணமாக லாக்டவுண் அறிவிக்கப்பட்டதால் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. கடந்த டிசம்பரில் 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு ஆன்லைனில் பாடங்கள் நடத்தப்பட்டன. ஆனால் காரையாறு பகுதியான மயிலாறு, இஞ்சிக்குழி பகுதியின் 10,11,12ஆம் வகுப்பு மாணவர்கள் செல்ஃபோன் டவர் இல்லாததால் ஆன்லைன் வகுப்புகளில் படிப்பது பெரிய சிரமமாக இருந்திருக்கிறது. மயிலாறு காணிக்குடியிருப்பின் பின்பகுதியின் தரைமட்டத்திலிருந்து சுமார் 300 அடியிலுள்ள சொங்கமொட்டை மலைப்பகுதியின் உச்சியில் செல்டவர் கிடைப்பதையறிந்து, அந்தப் பகுதிக்குச் சென்று மாணவர்கள் மலை முகடுகளில் அமர்ந்தபடி ஆன்லைன் கல்வி கற்றிருக்கிறார்கள். மழை மற்றும் வெயிலிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள கொட்டகைகள் அமைத்து ஆன்லைன் வகுப்புகளில் பாடம் கற்றிருக்கின்றனர்.

 

The student who went six kilometers and wrote the online exam

 

இந்த மாணவர்கள் இப்படி சிரமங்கள் அனுபவிக்கின்ற நேரத்தில் இளங்கலை மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு தற்போது ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு நடந்துவருகிறது. சேர்வலாறில் பெயருக்கு வசதிகள் இருந்தாலும் டவர் கிடைக்க அங்கு வாய்ப்பில்லை. சேர்வலாறு காணி குடியிருப்பைச் சேர்ந்த அமல்ராஜ் மகள் ரம்யா என்பவர் பாபநாசம் கல்லூரி ஒன்றில் பி.ஏ. வரலாறு மூன்றாம் ஆண்டு படித்துவருகிறார். தற்போது இவருக்கு ஆன்லைன் செமஸ்டர் தேர்வு நடந்துவருகிறது. மலைமீதுள்ள மாணவர்களில் கல்லூரி படிப்பை மேற்கொண்டிருக்கும் ஒரே ஒரு மாணவி ரம்யாதான்.

 

தங்களது குடியிருப்பினருகில் செல் டவர் இல்லாததால் பரீட்சை எழுத திணறினார். வேறு வழியின்றி அங்கிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவிருக்கும் லோயர்டேம் பகுதியில் டவர் லைன் கிடைப்பதையறிந்து தனது உறவினர் இசக்கி ராஜா துணையோடு ஆறு கிலோ மீட்டர் நடந்து சென்று சாலையோரத்தில் இருக்கும் பாலத்தில் அமர்ந்தபடி ஆன்லைன் செமெஸ்டர் தேர்வு எழுதிவருகிறார். கொளுத்தும் வெயிலையும் அவர் பொருட்படுத்தவில்லை. மழையோ அல்லது வழக்கமான காட்டு மிருகங்களின் இடையூறோ ஏற்பட்டால் அவரது நிலை அதோ கதிதான். இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் இன்னல்களை அனுபவித்துக்கொண்டு மன வைராக்யத்தோடு அவர் வெட்டவெளியில் தேர்வு எழுதுவதுதான் பார்ப்பவர்களின் மனதைப் பிழியும் விஷயம்.

 

The student who went six kilometers and wrote the online exam

 

இதுகுறித்து அந்த மாணவி கூறியதாவது, “செல் டவர் கிடைக்காததால் நான் இந்தத் தேர்வை அரியர் போடலாம் என்று கூட கருதாமல் டவர் லைன் கிடைக்கும் இடத்தைத் தேடிச் சென்று தேர்வு எழுதிவருகிறேன். என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதெல்லாம் எனக்கு ஒரு பொருட்டல்ல. ஆறு நாட்களும் இந்த முறையிலேயேதான் தேர்வு எழுதியே ஆக வேண்டும் என்ற மன உறுதிதான் என்னை இந்த அளவுக்கு ரிஸ்க் எடுக்க வைத்திருக்கிறது” என்கிறார் மனம் நெகிழ. பழங்குடி இன மலைக் காணி மக்களின் மாணவர்களுக்கு ஏற்படும் இந்த தொந்தரவு குறித்து மாவட்ட கலெக்டரான விஷ்ணுவிடம் கேட்டபோது, “அவர்களின் சிரமங்களை நான் அறிவேன். விரைவில் வனத்துறையினருடன் பேசி நல்லதொரு வழியை ஏற்படுத்திக் கொடுப்பேன்” என்றார் உறுதியாக. சுற்றுப்புறச் சூழல் சீராக இருந்தால்தான் ஒருவரின் மனம், நினைவுகள் ஒருமுகப்படும். அது தவறுமேயானால் அனைத்தும் நொறுங்கிவிடும். ஆனால் ரம்யாவுக்கோ இது ஒரு பொருட்டல்ல என்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நயினார் நாகேந்திரனுக்கு எதிராக வழக்கு; உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Case against Nayanar Nagendran; Trial in the High Court

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை இன்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றிக் கொண்டு செல்ல முயன்ற ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும், பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. 

Case against Nayanar Nagendran; Trial in the High Court

இதனையடுத்து நயினார் நாகேந்திரனுக்கு தாம்பரம் போலீசார் சம்மன் அனுப்பினர். அதில் 7 நாள்களுக்குள் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 3 பேரிடம் போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில் இந்த சம்மன் அனுப்பப்பட்டது. தாம்பரம் காவல் நிலைய காவலர் சுடலைமுத்து மூலம் நயினார் நாகேந்திரனின் மைத்துனர் துரையிடம் சம்மன் வழங்கப்பட்டது. மேலும், இந்த வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கை விவரம் (FIR) வெளியாகி இருந்தது. அதில் ரயிலில் எடுத்துச் செல்லப்பட்ட பணம் திருநெல்வேலி வாக்காளர்களுக்கு கொடுக்க என்றும், இந்த பணம் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என்றும் கைதானவர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக பதிவாகி இருந்தது. முதல் தகவல் அறிக்கையில் கைது செய்யப்பட்டவர்களின் அடையாள அட்டை, பாஜக உறுப்பினர் அட்டை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கைப்பற்றப்பட்ட பணம் தனது பணம் இல்லை என நயினார் நாகேந்திரன் மறுத்த நிலையில், அவரது பணம் என முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

Case against Nayanar Nagendran; Trial in the High Court

இத்தகைய சூழலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் ராகவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளார். அதில், ‘பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை தேர்தலில் இருந்து போட்டியிட தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என்றும், “சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் நயினார் நாகேந்திரன் மீது அமலாக்கத்துறை” நடவடிக்கை எடுக்க  வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் முறையிடப்பட்டுள்ளது. இந்த முறையீட்டை தலைமை நீதிபதி அமர்வு நாளை (18.04.2024) விசாரிக்கிறது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

Next Story

நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு; உயர் நீதிமன்றம் அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Case against Nayinar Nagendran High Court action

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இத்தகைய சூழலில் பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரன் போட்டியிடும் திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்குத் தேர்தல் நடத்த தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் மகாராஜன் என்பவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவான வழக்கை மறைத்து நயினார் நாகேந்திரன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அதனால், நயினார் நாகேந்திரனின் வேட்புமனுவை நிராகரிக்க கோரிய தன் ஆட்சேபனை மீது முடிவெடுக்கும் வரை தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத,  தகவல்களை மறைத்த வேட்புமனுவை ஏற்றதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மேலும், நயினார் நாகேந்திரனின் வேட்புமனுவை ஏற்றது சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த மனு இன்று (16.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “ வாக்குப்பதிவைத் தவிர மற்ற தேர்தல் நடைமுறைகள் முடிந்த நிலையில் தாமதமாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுதாரர் பாதிக்கப்பட்டிருந்தால் தேர்தல் முடிந்த பின் தேர்தல் வழக்காக தாக்கல் செய்யலாம்” எனத் தெரிவித்தார். இதனையடுத்து நயினார் நாகேந்திரன் வேட்புமனுவை எதிர்த்த வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.